Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புளுகு
#1
யாழ்ப்பாணத்தில் நாங்கள் இருந்த போது அப்பாவிற்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர் எப்போதும் ஏதாவது புளுகல் கதைகள் சொல்லுவார். அப்பாவும் கொஞ்சமும் கோபிக்காம அதையெல்லாம் கேட்டு சிரிப்பார்.

அவர் சொன்ன ஒரு புளுகல். ஒரு தடவை அவர்கள் வீட்டு கிணற்றில் அவரின் இரண்டாவது மகன் விழுந்துவிட்டானாம். கடைசி மகன் தவிர யாரும் வீட்டில் இல்லை. கடைசி மகன் சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப்பார்த்தான். உள்ளே அண்ணன் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்திருக்கிறார். காப்பாற்ற கயிறு எதுவும் அருகில் இருக்க வில்லை. உடனே என்ன செய்வது என யோசித்த அவன் மேலிருந்து கிணற்றுக்குள் ஒன்றுக்கு போயிருக்கிறான். கயிறு போல அதைப்பிடித்து இரண்டாவது மகன் மேலே வந்துவிட்டான்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>உங்க வாழ்க்கையிலும் யாராவது புளுகல் கதைகள் சொல்லியிருப்பர்கள். அவை நகைச்சுவை மிக்கதாக இருக்கலாம். அந்தக் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.</span>
Reply


Messages In This Thread
புளுகு - by aathipan - 11-10-2005, 01:19 PM
[No subject] - by தூயா - 11-13-2005, 01:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)