11-09-2005, 05:58 PM
<b>குறும்பட நிகழ்வில் பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்:
நன்றி: அப்பால் தமிழ்</b>
சிந்திய கருத்துகள்
0 "கனவுகள் படத்தில் வந்த நெஞ்சு மயிருக்கு மையிடும் முதல் காட்சியால் உந்தப்பட்டு நான் எனது நெஞ்சைக் குனிந்து பார்த்தேன்… இப்படியாக இப்படங்கள் பார்வையார்கள் என்ற தளத்திலிருந்த எம்மையும் பங்காளரராக உள்வாங்கிக் கிறங்கடித்தன" என்றார் சினிமா ஆர்வலர் ராஜ்குமார்.
0 "இளைஞரது படம் விளங்க வில்லை என்கிறீர்களே எது விளங்கவில்லை? விலாசமும், அடிட்டும் மிகக் குறுகிய நேரத்தில் நேர்த்தியாகக் கதை சொல்லியுள்ளன. நல்லதோர் வீணை செய்தே.. என்றபாடலும், உமக்கென்ன தெரியும்? ஏன் வீணாக முத்திரை குத்துகிறீர்கள் என்ற உணவக உரையாடலும் தெளிவாகப் புரிய வைக்கவில்லையா விலாசத்தில்,
எங்கே செல்வது என்று தெரியாது சென்றுகொண்டிருந்த போதை அடிமையான இளைஞனது வாழ்வுக்கான திருப்பம் அவனது அம்மாவினது பொருளைக் களவாடியதால் கிடைத்தது. அருமையாகப் படமாக்கியிருந்தார்கள்…" என்றார் உணர்ச்சி ததும்ப இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரசன்னா.
0 "பேரன் பேத்தியின் நிறைவிற்குப் பிறகு மற்றையவற்றை சீர்தூக்கி பார்க்க முடியுதில்லை." ஏன்றார் பெண் பார்வையாளரில் ஒருவர்.
0 "சொன்னதையே சொல்லும் திரைப்படைப்புகளால் சலிப்புற்றுள்ள சூழலில் நம்மவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லும் அரிய படைப்புகளதை; தருவது பெருமையாகவுள்ளது" என்றார் நயமாக பார்வையாளர் ஒருவர்.
0 "என்னைப் பாராட்டுவதால் நான் பெருமைப்படவில்லை, என்னுடன் அற்புதமாக நடித்த அந்தச் சிறார்களின் ஆற்றலால்தான் நான் பெருமிதம் அடைகிறேன்… அவர்களுக்கு தகுந்த ஊக்கத்தைக் கொடுக்கவேண்டியதுதான் தற்போதைய காலக் கடமையாகும்" என்றார் தாத்தாவாக நடித்திருந்த மூத்த கலைஞர் ரகுநாதன்.
இவர் போகுமிடமெல்லாம் பக்கத்தில் சிறார்கள் வந்து உட்கார்ந்து தாத்தா என்று அழைத்ததால் நெகிழ்ந்து போனார்.
0 "எங்களது திரை முயற்சிக்கு நேரேயே பாராட்டும் புகழும் கிடைக்கும். ஆனால் எந்தப் பிரதிகூலத்தையும் பாராமல் ஊர் ஊராகக் கொண்டு சென்று காண்பித்து அரியபணியை ஆற்றும் சலனம் அமைப்பினருக்கு நாம் அனைவரும் பெரும் கடன்பட்டிருக்கிறோம் என்றார் தனது ஏற்புரையில் இயக்குநர் பரா.
0 "அருமையான நம்மவர் படைப்புகளின் தொகுப்பைப் பார்த்ததால் வார்த்தைகளில்லாமல் வாயடைத்துப்போயுள்ளோம் இதனால் அங்கு கருத்துச்சொல்ல முடியவில்லை" என்றார் திரும்பும் வழியில் ஒருவர்
0 "ஓபர்குசனென்ன ஸ்பெயினில் நிகழ்வை ஒழுங்கு செய்து எம்மை அழைத்தாலும் நாம் வந்து "நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்- என்ற நம்மவர் படைப்புகளைப் பரவலாக்கும் பணியைத்தொடர்வோம்" என்றார் சலனம் அமைப்பு சார்பாக கலந்துகொண்ட முகுந்தன்.
பொறி திரையிடமுடியாமையை மனவருத்தத்துடன் தெரியப்படுத்தினார் பிறீமன் தமிழ்க்கலை மன்றப் பொறுப்பாளர்களில் ஒருவரான நாச்சிமார் கோவிலடி இராஜன். இதனால் சபை எங்கும் பொறிப்பறந்து அங்கலாய்ப்பு ஏற்பட்டது.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/bremen_short/dsc00260.jpg' border='0' alt='user posted image'>
குறும்பட நிகழ்வை முகுந்தன் நெறிப்படுத்தினார்.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/bremen_short/dsc00265.jpg' border='0' alt='user posted image'>
நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள்.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/bremen_short/dsc00266.jpg' border='0' alt='user posted image'>
குறும்படங்கள் பற்றி பர்வையாளர் கருத்துக்கள்.
நன்றி: அப்பால் தமிழ்</b>
சிந்திய கருத்துகள்
0 "கனவுகள் படத்தில் வந்த நெஞ்சு மயிருக்கு மையிடும் முதல் காட்சியால் உந்தப்பட்டு நான் எனது நெஞ்சைக் குனிந்து பார்த்தேன்… இப்படியாக இப்படங்கள் பார்வையார்கள் என்ற தளத்திலிருந்த எம்மையும் பங்காளரராக உள்வாங்கிக் கிறங்கடித்தன" என்றார் சினிமா ஆர்வலர் ராஜ்குமார்.
0 "இளைஞரது படம் விளங்க வில்லை என்கிறீர்களே எது விளங்கவில்லை? விலாசமும், அடிட்டும் மிகக் குறுகிய நேரத்தில் நேர்த்தியாகக் கதை சொல்லியுள்ளன. நல்லதோர் வீணை செய்தே.. என்றபாடலும், உமக்கென்ன தெரியும்? ஏன் வீணாக முத்திரை குத்துகிறீர்கள் என்ற உணவக உரையாடலும் தெளிவாகப் புரிய வைக்கவில்லையா விலாசத்தில்,
எங்கே செல்வது என்று தெரியாது சென்றுகொண்டிருந்த போதை அடிமையான இளைஞனது வாழ்வுக்கான திருப்பம் அவனது அம்மாவினது பொருளைக் களவாடியதால் கிடைத்தது. அருமையாகப் படமாக்கியிருந்தார்கள்…" என்றார் உணர்ச்சி ததும்ப இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரசன்னா.
0 "பேரன் பேத்தியின் நிறைவிற்குப் பிறகு மற்றையவற்றை சீர்தூக்கி பார்க்க முடியுதில்லை." ஏன்றார் பெண் பார்வையாளரில் ஒருவர்.
0 "சொன்னதையே சொல்லும் திரைப்படைப்புகளால் சலிப்புற்றுள்ள சூழலில் நம்மவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லும் அரிய படைப்புகளதை; தருவது பெருமையாகவுள்ளது" என்றார் நயமாக பார்வையாளர் ஒருவர்.
0 "என்னைப் பாராட்டுவதால் நான் பெருமைப்படவில்லை, என்னுடன் அற்புதமாக நடித்த அந்தச் சிறார்களின் ஆற்றலால்தான் நான் பெருமிதம் அடைகிறேன்… அவர்களுக்கு தகுந்த ஊக்கத்தைக் கொடுக்கவேண்டியதுதான் தற்போதைய காலக் கடமையாகும்" என்றார் தாத்தாவாக நடித்திருந்த மூத்த கலைஞர் ரகுநாதன்.
இவர் போகுமிடமெல்லாம் பக்கத்தில் சிறார்கள் வந்து உட்கார்ந்து தாத்தா என்று அழைத்ததால் நெகிழ்ந்து போனார்.
0 "எங்களது திரை முயற்சிக்கு நேரேயே பாராட்டும் புகழும் கிடைக்கும். ஆனால் எந்தப் பிரதிகூலத்தையும் பாராமல் ஊர் ஊராகக் கொண்டு சென்று காண்பித்து அரியபணியை ஆற்றும் சலனம் அமைப்பினருக்கு நாம் அனைவரும் பெரும் கடன்பட்டிருக்கிறோம் என்றார் தனது ஏற்புரையில் இயக்குநர் பரா.
0 "அருமையான நம்மவர் படைப்புகளின் தொகுப்பைப் பார்த்ததால் வார்த்தைகளில்லாமல் வாயடைத்துப்போயுள்ளோம் இதனால் அங்கு கருத்துச்சொல்ல முடியவில்லை" என்றார் திரும்பும் வழியில் ஒருவர்
0 "ஓபர்குசனென்ன ஸ்பெயினில் நிகழ்வை ஒழுங்கு செய்து எம்மை அழைத்தாலும் நாம் வந்து "நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்- என்ற நம்மவர் படைப்புகளைப் பரவலாக்கும் பணியைத்தொடர்வோம்" என்றார் சலனம் அமைப்பு சார்பாக கலந்துகொண்ட முகுந்தன்.
பொறி திரையிடமுடியாமையை மனவருத்தத்துடன் தெரியப்படுத்தினார் பிறீமன் தமிழ்க்கலை மன்றப் பொறுப்பாளர்களில் ஒருவரான நாச்சிமார் கோவிலடி இராஜன். இதனால் சபை எங்கும் பொறிப்பறந்து அங்கலாய்ப்பு ஏற்பட்டது.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/bremen_short/dsc00260.jpg' border='0' alt='user posted image'>
குறும்பட நிகழ்வை முகுந்தன் நெறிப்படுத்தினார்.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/bremen_short/dsc00265.jpg' border='0' alt='user posted image'>
நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள்.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/bremen_short/dsc00266.jpg' border='0' alt='user posted image'>
குறும்படங்கள் பற்றி பர்வையாளர் கருத்துக்கள்.

