11-09-2005, 05:52 PM
ஜேர்மனியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்துடன் இணைந்து சலனம் நடாத்திய 'குறும்படமாலை - 2005' கடந்த 30.10.2005 ஞாயிற்றுக்கிழமை அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்து முடிந்தது. அதன் நிழ்ச்சி நிரல் இரு நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
முதலாவதாக ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்டு வளர்ந்துவரும் 22அகவையுடைய அடுத்த தலைமுறை வாலிபனான சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதைநூல் அறிமுகம் இடம்பெற்றது.
இரண்டாவதாக சலனத்தின் குறும்படங்களாக கனடா சுமதி ரூபனின் "மனமுள்", ஈழவர் திரைக்கலைமன்றம் வழங்கும் ஜேர்மனி கலைக்கண் பால்ராஜின் "கனவுகள்", பாரிஸ் நேயாலயம் வழங்கும் கரைஞர் பராவின் "பேரன் பேத்தி", பிரான்சு நல்லூர்ஸ்தான் வழங்கும் வதனனின் "விலாசம்", கனடா எம் சுதனின் "அடிட்" ஆகியன திரையிடப்பட்டன.
அத்துடன் புலத்தமிழர்களின் திரைக்கலை வரலாற்றில் புதிய தடம்பதித்த "பேரன் பேத்தி" குறும்படத்தின் மூலம் அநேகரின் கவனத்தை ஈர்த்த பன்முகக்கலைஞர் பரா, அவையின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தால் "சிறந்த இயக்குநர் 2005" பட்டயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நூல் அறிமுக நிகழ்வில் தமிழையும், தமிழர் வாழ்வியலையும் சுருங்க விபரித்து அந்நதந்தக் காலப் பதிவுகளில் அக்கறையில்லாதிருக்கும் தமிழர்களின் அலட்சியப்போக்கை கண்டித்ததுடன், நாம் வாழும் புலத்தில் வளரும் அடுத்த தலைமுறை இளைஞனான சஞ்சீவ்காந்தின் இந்தப் பதிவு முயற்சியைப் பாராட்டிப் பேசினார் புலத்தமிழர் மத்தியில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் கோடையிடிக் குமரன். இதனால் அவையிலிருந்தோரின் வாஞ்சைக்குள்ளானார் "இளைஞன்" என்ற புனைப்பெயரையுடைய சஞ்சீவ்காந்.
இவரது எளிமையான ஏற்புரையும், பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தின் புதிய தலைமுறையினருக்கான உற்சாகமூட்டலும் கவனங்கொள்ளத் தக்கன.
<b>இணைப்பு: இங்கே அழுத்தவும்
நன்றி: அப்பால் தமிழ்</b>
முதலாவதாக ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்டு வளர்ந்துவரும் 22அகவையுடைய அடுத்த தலைமுறை வாலிபனான சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதைநூல் அறிமுகம் இடம்பெற்றது.
இரண்டாவதாக சலனத்தின் குறும்படங்களாக கனடா சுமதி ரூபனின் "மனமுள்", ஈழவர் திரைக்கலைமன்றம் வழங்கும் ஜேர்மனி கலைக்கண் பால்ராஜின் "கனவுகள்", பாரிஸ் நேயாலயம் வழங்கும் கரைஞர் பராவின் "பேரன் பேத்தி", பிரான்சு நல்லூர்ஸ்தான் வழங்கும் வதனனின் "விலாசம்", கனடா எம் சுதனின் "அடிட்" ஆகியன திரையிடப்பட்டன.
அத்துடன் புலத்தமிழர்களின் திரைக்கலை வரலாற்றில் புதிய தடம்பதித்த "பேரன் பேத்தி" குறும்படத்தின் மூலம் அநேகரின் கவனத்தை ஈர்த்த பன்முகக்கலைஞர் பரா, அவையின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தால் "சிறந்த இயக்குநர் 2005" பட்டயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நூல் அறிமுக நிகழ்வில் தமிழையும், தமிழர் வாழ்வியலையும் சுருங்க விபரித்து அந்நதந்தக் காலப் பதிவுகளில் அக்கறையில்லாதிருக்கும் தமிழர்களின் அலட்சியப்போக்கை கண்டித்ததுடன், நாம் வாழும் புலத்தில் வளரும் அடுத்த தலைமுறை இளைஞனான சஞ்சீவ்காந்தின் இந்தப் பதிவு முயற்சியைப் பாராட்டிப் பேசினார் புலத்தமிழர் மத்தியில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் கோடையிடிக் குமரன். இதனால் அவையிலிருந்தோரின் வாஞ்சைக்குள்ளானார் "இளைஞன்" என்ற புனைப்பெயரையுடைய சஞ்சீவ்காந்.
இவரது எளிமையான ஏற்புரையும், பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தின் புதிய தலைமுறையினருக்கான உற்சாகமூட்டலும் கவனங்கொள்ளத் தக்கன.
<b>இணைப்பு: இங்கே அழுத்தவும்
நன்றி: அப்பால் தமிழ்</b>

