11-08-2005, 11:23 AM
சிவகாசி விமர்சனம்
<img src='http://img485.imageshack.us/img485/7876/sivakasi014ox4if.jpg' border='0' alt='user posted image'>
முத்தப்பாவுக்கும் உடையப்பாவுக்கும் ஒரே ஃபைட்டுப்பா! கதையை இப்படி ஆரம்பித்தால் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சென்னையில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். அதுவும் கமகமக்கும் காதலோடு. 180 கிலோ வில்லனை சுண்டு விரலால் துரத்தி அடிக்கிறார் விஜய். ச்சும்மா ஒரு ஃபைட்டு வைக்கணும், அவ்வளவுதான் என்கிற ரீதியில் இருக்கிறது அந்த சண்டை. அதன்பின் அசினுக்கும் விஜய்க்கும் நடக்கிற செல்ல சண்டைதான் இடைவேளை வரைக்கும். ஜாலியோ ஜாலி.
அடிக்கடி விஜய் முன் தோன்றி, ÔÔசண்டை உனக்கும் எனக்கும்தான். அதுக்காக என் தங்கச்சிக்கு ஏன் தொல்லை கொடுத்தே?ÕÕ என்கிறார் அசின். அப்புறம் அவருக்கு ஒரு தங்கையே இல்லை. எல்லாம் ஒரு ÔஇதுÕக்குதான் என்று தெரிய வருகிறது விஜய்க்கு. பிறகென்ன..? இரண்டு டூயட்டுகள் இலவசம்!
அப்பா அம்மாவோடுதான் என் வீட்டுக்கு பெண் கேட்டு வரணும் என்ற அசினின் செல்லக்கட்டளைக்கு பணிந்த விஜய், 15 வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு போக, நடந்தது என்ன? வேகம்...வேகம்...வேகம்!
அங்கே அண்ணன் உடையப்பா(பிரகாஷ்ராஜ்) பெற்ற அம்மாவை மாட்டு தொழுவத்திலும், கூட பிறந்த தங்கையை ஊரை விட்டு விரட்டியும் வைத்து கொடுமைபடுத்துவதை பார்க்கிறார். ரத்தம் கொதிக்கிறது. தான் யார் என்ற விஷயத்தை சொல்லாமலே, அம்மாவுக்கும் தங்கைக்கும் ராஜ வாழ்க்கை கொடுக்கிறார். சொத்தில் பாதியை மீட்டு தங்கைக்கு எழுதி வைக்கிறார். கடைசியில் உடையப்பா என்ன ஆனார்? போங்கங்க.. கடைசி ரீலில் அவரு திருந்திடுவாருங்கிறது தெரியாதாக்கும்?
<img src='http://img485.imageshack.us/img485/3003/1171gw.jpg' border='0' alt='user posted image'>
விஜய்க்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கிற யுத்தம் உண்மையிலேயே விறுவிறு ரகம். வெள்ளை பேப்பரை மடித்து கையில் கொடுத்து பத்து லட்சத்தை அடித்துவிட்டு போகும் விஜய், தங்கையையே பிரகாஷ்ராஜுக்கு எதிராக எலக்ஷனில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது மேலும் விறுவிறு! பிரச்சாரத்திற்காக பணம் கொடுத்து நடிகை நயன்தாராவை வரவழைப்பது பிரகாஷ்ராஜ். ஆனால் வோட்டுகளை அள்ளிக் கொண்டு போவது விஜய் கோஷ்டி. இப்படி சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை.
கஞ்சா கருப்பு சிரிக்க வைத்திருக்கிறார். தூள் படத்தில் வந்த அதே சொர்ணாக்கா. அதே கூச்சல்... எரிச்சல்!
<img src='http://img485.imageshack.us/img485/701/1206oa.jpg' border='0' alt='user posted image'>
கதையிலும் வசனங்களிலும் அப்படியே ரஜினி ஃபார்முலா. பின்னணி கோரஸ் அதையே வழிமொழிகிறது. விட்டால், சூப்பர் ஸ்டார் நாற்காலியை வலுக்கட்டாயமாக பிடுங்கி கொள்வார் போலிருக்கிறது விஜய்.
ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட வந்தாலும் நயன்தாராவுக்கு ஜே போடுகிறது ரசிகர் கூட்டம்.
இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களில் ஆறுக்கு இரண்டு பழுதில்லை. Ôஎன் தெய்வத்துக்கே மாறு வேஷமாÕ பாடல் மட்டும் மனசை தத்தளிக்க வைக்கிறது.
சிவகாசி- முதல் பாதி மழையில் நனைந்த பட்டாசு. இரண்டாம் பாதி நாட்டாமை தலை முண்டாசு!
தமிழ் சினிமா
<img src='http://img485.imageshack.us/img485/7876/sivakasi014ox4if.jpg' border='0' alt='user posted image'>
முத்தப்பாவுக்கும் உடையப்பாவுக்கும் ஒரே ஃபைட்டுப்பா! கதையை இப்படி ஆரம்பித்தால் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சென்னையில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். அதுவும் கமகமக்கும் காதலோடு. 180 கிலோ வில்லனை சுண்டு விரலால் துரத்தி அடிக்கிறார் விஜய். ச்சும்மா ஒரு ஃபைட்டு வைக்கணும், அவ்வளவுதான் என்கிற ரீதியில் இருக்கிறது அந்த சண்டை. அதன்பின் அசினுக்கும் விஜய்க்கும் நடக்கிற செல்ல சண்டைதான் இடைவேளை வரைக்கும். ஜாலியோ ஜாலி.
அடிக்கடி விஜய் முன் தோன்றி, ÔÔசண்டை உனக்கும் எனக்கும்தான். அதுக்காக என் தங்கச்சிக்கு ஏன் தொல்லை கொடுத்தே?ÕÕ என்கிறார் அசின். அப்புறம் அவருக்கு ஒரு தங்கையே இல்லை. எல்லாம் ஒரு ÔஇதுÕக்குதான் என்று தெரிய வருகிறது விஜய்க்கு. பிறகென்ன..? இரண்டு டூயட்டுகள் இலவசம்!
அப்பா அம்மாவோடுதான் என் வீட்டுக்கு பெண் கேட்டு வரணும் என்ற அசினின் செல்லக்கட்டளைக்கு பணிந்த விஜய், 15 வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு போக, நடந்தது என்ன? வேகம்...வேகம்...வேகம்!
அங்கே அண்ணன் உடையப்பா(பிரகாஷ்ராஜ்) பெற்ற அம்மாவை மாட்டு தொழுவத்திலும், கூட பிறந்த தங்கையை ஊரை விட்டு விரட்டியும் வைத்து கொடுமைபடுத்துவதை பார்க்கிறார். ரத்தம் கொதிக்கிறது. தான் யார் என்ற விஷயத்தை சொல்லாமலே, அம்மாவுக்கும் தங்கைக்கும் ராஜ வாழ்க்கை கொடுக்கிறார். சொத்தில் பாதியை மீட்டு தங்கைக்கு எழுதி வைக்கிறார். கடைசியில் உடையப்பா என்ன ஆனார்? போங்கங்க.. கடைசி ரீலில் அவரு திருந்திடுவாருங்கிறது தெரியாதாக்கும்?
<img src='http://img485.imageshack.us/img485/3003/1171gw.jpg' border='0' alt='user posted image'>
விஜய்க்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கிற யுத்தம் உண்மையிலேயே விறுவிறு ரகம். வெள்ளை பேப்பரை மடித்து கையில் கொடுத்து பத்து லட்சத்தை அடித்துவிட்டு போகும் விஜய், தங்கையையே பிரகாஷ்ராஜுக்கு எதிராக எலக்ஷனில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது மேலும் விறுவிறு! பிரச்சாரத்திற்காக பணம் கொடுத்து நடிகை நயன்தாராவை வரவழைப்பது பிரகாஷ்ராஜ். ஆனால் வோட்டுகளை அள்ளிக் கொண்டு போவது விஜய் கோஷ்டி. இப்படி சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை.
கஞ்சா கருப்பு சிரிக்க வைத்திருக்கிறார். தூள் படத்தில் வந்த அதே சொர்ணாக்கா. அதே கூச்சல்... எரிச்சல்!
<img src='http://img485.imageshack.us/img485/701/1206oa.jpg' border='0' alt='user posted image'>
கதையிலும் வசனங்களிலும் அப்படியே ரஜினி ஃபார்முலா. பின்னணி கோரஸ் அதையே வழிமொழிகிறது. விட்டால், சூப்பர் ஸ்டார் நாற்காலியை வலுக்கட்டாயமாக பிடுங்கி கொள்வார் போலிருக்கிறது விஜய்.
ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட வந்தாலும் நயன்தாராவுக்கு ஜே போடுகிறது ரசிகர் கூட்டம்.
இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களில் ஆறுக்கு இரண்டு பழுதில்லை. Ôஎன் தெய்வத்துக்கே மாறு வேஷமாÕ பாடல் மட்டும் மனசை தத்தளிக்க வைக்கிறது.
சிவகாசி- முதல் பாதி மழையில் நனைந்த பட்டாசு. இரண்டாம் பாதி நாட்டாமை தலை முண்டாசு!
தமிழ் சினிமா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

