11-07-2005, 06:49 PM
[quote=Vasampu]<b>நன்றி திரு உங்கள் நீண்ட பதிலிற்கு</b>
ஆனாலும் நீங்கள் சொன்ன சில விடயங்களில் போதிய விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை.
1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே??
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??
3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??[/color]
<b>தங்களது கேள்விகளிற்கான விடைகளை என்னால் முடிந்தளவு விளக்கமாகத் தர முற்படுகிறேன்.</b>
<b>1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே</b>
1) ஆம் அவ்வாறு செய்யப்பட்டமைக்குக் காரணம் உள்ளது என்றே கருதுகிறேன். பாராளுமன்றில் தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் 'தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம், தாயகக்கோட்பாடு என்பவற்றின்பால் தமிழ்மக்கள் கொண்டுள்ள தாகத்தை வெளிப்படுத்தவும், தமிழரின் விடுதலைப் போரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும்" தமிழ் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே இவர்களில் எவராவது மேற்படி கொள்கைகளுக்கு மாறாகச் செயற்படுவார்கள் அல்லது செயற்படக்கூடும் என்று தோன்றும் பட்சத்தில் அவர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்கவேண்டியது அவசியம்தானே.
ஏனெனில் ஏதாவது சாதிக்கிறார்களோ இல்லையோ இருப்பதையும் கெடுத்துவிடக்கூடாதே என்கிற அச்சம்தான் இதற்குக் காரணம். அதாவது சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கும்போது அனைவரும் ஒருமித்த கருத்துடன் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட நோக்கத்தை சர்வதேசத்திற்கு முன்வைக்கவேண்டும். அந்த நோக்கத்திற்கு எதிராகச் செயற்படவிழையும் ஒருவர் அந்தக் குழுவில் இருப்பது எவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஆம். தாங்கள் கூறியது சரியே. 'சிறிலங்காவின் சனாதிபதி ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் அவருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு செய்யமுடியும்' என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
ஆனால் பாராளுமன்ற அதிகாரத்தை நம்பி அல்லது அங்கு போய் ஏதாவது செய்யலாம் என்று நம்பி இவர்கள் தெரிவுசெய்யப்படவில்லையே. அதுகுறித்து ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.
<b>
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??</b>
2) சர்வதேச சமூகத்தின் முன் சந்திரிகா விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறு. மக்கள் எனக்குத்தான் வாக்களித்தார்கள். அதனால் அவர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கிறேன். யுத்தம் மூலம் சமாதானத்தை நிலைநாட்டுகிறேன் என்று வேடமிட்டுத்தானே தமிழின அழிப்பைக் கச்சிதமாகச் செய்தார்.
அதனால்தான் சரியாக இதே காலப்பகுதியில் நடந்த மாபெரும் சரித்திர இடப்பெயர்வான வலிகாம இடப்பெயர்வின்போது கூடச் சர்வதேசம் வாய்மூடிக் கைகட்டிப் பார்த்திருந்தது.
சீனாவிலோ கியூபாவிலோ நான்குபேர் சந்தியில் கூடிக் கதைத்தாலே அதனை சனநாயகத்திற்காகப் போராடும் மக்கள் எழுச்சி என்று வருணித்து நாளுக்கு நான்குதரம் காட்டும் சர்வதேச ஊடகங்கள் சந்திரிகா சொன்னதைத்தானே எழுதிக்கொண்டிருந்தன.
நவாலியில் நடந்த நரபலி வேட்டையைச் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மட்டும்தானே தட்டிக்கேட்டது.
இவை அனைத்துக்குமே காரணம் தமிழ்மக்கள் சமாதானத்தைத் தருவார் என்று அளித்த அமோக ஆதரவுதான். அந்த ஆதரவை அம்மையார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று காட்டக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குப் பின்புலமாக இருந்து வழிநடத்தியவர் கதிர்காமர்.
எனவே அவர் நடத்திய போரை அதன் அழிவைக் கண்டும் வாளாதிருந்த சர்வதேசம் 'அவர் தருவதை வாங்கிக் கொள்க' என்று சொல்லாமல் சொன்னதாகத்தானே அர்த்தம்.
ஆனையிறவைப் புலிகள் பிடித்து யாழ்ப்பாணத்தின் வாயிலைத் தட்டும்வரைக்கும் இந்தச் சர்வதேசம் அம்மையார் சொன்னதைத்தானே நம்பியது.
<b>3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??</b>
3) மறைமுகமாக விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரித்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் குறிப்பிடுவதால் அதுகுறித்து ஆராய்ந்து சொல்ல எனக்கு அவகாசம் தேவை. அதற்கு ஏதாவது ஆதாரமிருப்பின் தயைகூர்ந்து தனிமடலில் அனுப்பிவையுங்கள்.
அவ்வாறே தாங்கள் சொல்வது போல மறைமுக ஆதரவு என்று எடுத்துக்கொண்டாலே, அதுகுறித்துப் பலருக்கு அறியக்கிடைத்திருக்காதல்லவா?
ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் துறைப்பொறுப்பாளரே தமிழ்ககூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரி அது ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்டு அனேகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அப்படி ஒன்று இந்தத் தேர்தலில் நடந்துவிடுமா என்ற அச்சம்தான் தென்னிலங்கையின் இன்றைய பதட்டத்திற்குக் காரணம்.
தங்களது வாதம் மிகச்சரியானதே. தமிழ்ப்பிரதேச வாக்குகள் அனைத்தும் தமிழ்வாக்குகள் அல்ல. ஆனால் ஏறத்தாளப் பதினைந்து லட்சம் வாக்குகளில் எட்டிலிருந்து பத்துலட்சம் வரை தமிழர்களுடையது என்று நாங்கள் கொள்ளலாம்.(<i>இந்தப் புள்ளிவிபரத்தைக் கூடத் துல்லியமாக என்னால் தரமுடியும்.அதற்கு ஒரு மணிநேரமாவது ஒதுக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு இப்படி ஓய்வுநேரம் கிடைப்பது அரிது. கிடைக்கும் ஓய்வில் உறங்காவிடின் மறுநாள் பலர் நிரந்தரமாக உறங்கிவிடும் அபாயம் உண்டு. பார்க்கும் தொழில் அத்தன்மையது. அதனால் தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள். நீங்களே கூடச் சற்று நேரம் ஒதுக்கித் தேடுவீர்களாயின் சரியான புள்ளிவிபரத்தை எடுக்கலாம்.) </i>
அதுதவிர இம்முறை வன்னியில் மட்டும் நான்கு லட்சம் புதிய வாக்காளர்கள் (அதாவது முதன்முறையாக) வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். எனவே ஏற்கெனவே இருந்த இரண்டு லட்சத்துடன் இந்த நான்கு லட்சமும் சேர ஆறுலட்சம் வாக்குகளை வன்னி மட்டுமே கொண்டிருக்கிறது
அதுவும் அனைவர் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.
<b>இறுதியாக தேவையற்ற பிரச்சினைகள் என ஆயர்கள் சொன்னபிரச்சினை எழலாம் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். (து}யவன் தலையைப் பிய்க்கமுன்பே இதையும் விளக்கிவிடுகிறேன்)</b>
து}யவன், இங்கே நண்பர் ஆயர்கள் குறிப்பிட்ட வேண்டத்தகாத விளைவுகள் என்று குறிப்பிடுவது, எனது ஊகம் சரியானால் (பி.பி.சி தமிழ்ச்சேவையில் ஆயரின் பேட்டியை இணையத்தளமூடாகக்கேட்டதை வைத்து) "மக்கள் வீடுகளில் இருந்தால் அவர்களது வாக்குகளை விரும்பியவாறு அரசியல் கட்சிகளின் குண்டர்கள் தத்தமது கட்சி வேட்பாளருக்கு அளித்துவிடுவார்கள். அதனால் தமிழ்மக்கள் வாக்களிக்கப்போகவேண்டும்." என்று ஆயர் சொல்லியிருந்தார்.
நியாயமான அச்சம்தான். ஆனால் அந்த அச்சத்திற்கான தீர்வு குறித்து இப்போது தமிழர்தாயகப்பகுதியில் அரசியல் நோக்கர்கள், புத்திஜீவிகள் மட்டத்தில் விவாதித்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
வாக்களிக்கச் சென்று அங்கே அந்த வாக்குகளை செல்லா வாக்குகளாக்கி எமது எதிர்ப்பைக் காட்டலாமா என்றும் சிந்திக்கப்படுவதாக அறிந்தேன்.
இன்னுமொன்று. இந்த ஆயர்கள் எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது அப்படியிருக்கையில் இப்போது ஆயர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது எதைக்காட்டுகிறது.
அண்மையில் ஆயர்களுடன் விடுதலைப் புலிகள் முரண்பட்டதாகவோ, அல்லது ஆயர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பியதாகவோ எந்தத் தகவலும் இல்லையே.
எனவே விடுதலைப் புலிகளின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படும் ஆயர்கள் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது, விடுதலைப் புலிகள் இந்த விடயத்தில் யாதொரு அழுத்தத்தினையும் எவருக்கும் வழங்கவில்லை என்பதையே காட்டுகிறது.
<b>அன்புடன் திரு</b>
<b>குறிப்பு: </b>அடிக்கடி இந்தத் தளத்திற்கு வருவதோ அல்லது இப்படி விரிவாகப் பதில் எழுதுவதோ எனக்கு இயலாத காரியம். எனது பதிவுகளைப் பார்த்தாலே தங்களுக்கு அது புரியும். எனவே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் உடன் தராதுபோனால் அதுகுறித்து மனவருத்தமடையவேண்டாம். எத்தனை காலம் சென்றாலும் மீண்டும் வரும்போது பதில் தருவேன்.
ஆனாலும் நீங்கள் சொன்ன சில விடயங்களில் போதிய விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை.
1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே??
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??
3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??[/color]
<b>தங்களது கேள்விகளிற்கான விடைகளை என்னால் முடிந்தளவு விளக்கமாகத் தர முற்படுகிறேன்.</b>
<b>1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே</b>
1) ஆம் அவ்வாறு செய்யப்பட்டமைக்குக் காரணம் உள்ளது என்றே கருதுகிறேன். பாராளுமன்றில் தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் 'தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம், தாயகக்கோட்பாடு என்பவற்றின்பால் தமிழ்மக்கள் கொண்டுள்ள தாகத்தை வெளிப்படுத்தவும், தமிழரின் விடுதலைப் போரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும்" தமிழ் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே இவர்களில் எவராவது மேற்படி கொள்கைகளுக்கு மாறாகச் செயற்படுவார்கள் அல்லது செயற்படக்கூடும் என்று தோன்றும் பட்சத்தில் அவர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்கவேண்டியது அவசியம்தானே.
ஏனெனில் ஏதாவது சாதிக்கிறார்களோ இல்லையோ இருப்பதையும் கெடுத்துவிடக்கூடாதே என்கிற அச்சம்தான் இதற்குக் காரணம். அதாவது சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கும்போது அனைவரும் ஒருமித்த கருத்துடன் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட நோக்கத்தை சர்வதேசத்திற்கு முன்வைக்கவேண்டும். அந்த நோக்கத்திற்கு எதிராகச் செயற்படவிழையும் ஒருவர் அந்தக் குழுவில் இருப்பது எவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஆம். தாங்கள் கூறியது சரியே. 'சிறிலங்காவின் சனாதிபதி ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் அவருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு செய்யமுடியும்' என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
ஆனால் பாராளுமன்ற அதிகாரத்தை நம்பி அல்லது அங்கு போய் ஏதாவது செய்யலாம் என்று நம்பி இவர்கள் தெரிவுசெய்யப்படவில்லையே. அதுகுறித்து ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.
<b>
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??</b>
2) சர்வதேச சமூகத்தின் முன் சந்திரிகா விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறு. மக்கள் எனக்குத்தான் வாக்களித்தார்கள். அதனால் அவர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கிறேன். யுத்தம் மூலம் சமாதானத்தை நிலைநாட்டுகிறேன் என்று வேடமிட்டுத்தானே தமிழின அழிப்பைக் கச்சிதமாகச் செய்தார்.
அதனால்தான் சரியாக இதே காலப்பகுதியில் நடந்த மாபெரும் சரித்திர இடப்பெயர்வான வலிகாம இடப்பெயர்வின்போது கூடச் சர்வதேசம் வாய்மூடிக் கைகட்டிப் பார்த்திருந்தது.
சீனாவிலோ கியூபாவிலோ நான்குபேர் சந்தியில் கூடிக் கதைத்தாலே அதனை சனநாயகத்திற்காகப் போராடும் மக்கள் எழுச்சி என்று வருணித்து நாளுக்கு நான்குதரம் காட்டும் சர்வதேச ஊடகங்கள் சந்திரிகா சொன்னதைத்தானே எழுதிக்கொண்டிருந்தன.
நவாலியில் நடந்த நரபலி வேட்டையைச் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மட்டும்தானே தட்டிக்கேட்டது.
இவை அனைத்துக்குமே காரணம் தமிழ்மக்கள் சமாதானத்தைத் தருவார் என்று அளித்த அமோக ஆதரவுதான். அந்த ஆதரவை அம்மையார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று காட்டக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குப் பின்புலமாக இருந்து வழிநடத்தியவர் கதிர்காமர்.
எனவே அவர் நடத்திய போரை அதன் அழிவைக் கண்டும் வாளாதிருந்த சர்வதேசம் 'அவர் தருவதை வாங்கிக் கொள்க' என்று சொல்லாமல் சொன்னதாகத்தானே அர்த்தம்.
ஆனையிறவைப் புலிகள் பிடித்து யாழ்ப்பாணத்தின் வாயிலைத் தட்டும்வரைக்கும் இந்தச் சர்வதேசம் அம்மையார் சொன்னதைத்தானே நம்பியது.
<b>3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??</b>
3) மறைமுகமாக விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரித்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் குறிப்பிடுவதால் அதுகுறித்து ஆராய்ந்து சொல்ல எனக்கு அவகாசம் தேவை. அதற்கு ஏதாவது ஆதாரமிருப்பின் தயைகூர்ந்து தனிமடலில் அனுப்பிவையுங்கள்.
அவ்வாறே தாங்கள் சொல்வது போல மறைமுக ஆதரவு என்று எடுத்துக்கொண்டாலே, அதுகுறித்துப் பலருக்கு அறியக்கிடைத்திருக்காதல்லவா?
ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் துறைப்பொறுப்பாளரே தமிழ்ககூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரி அது ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்டு அனேகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அப்படி ஒன்று இந்தத் தேர்தலில் நடந்துவிடுமா என்ற அச்சம்தான் தென்னிலங்கையின் இன்றைய பதட்டத்திற்குக் காரணம்.
தங்களது வாதம் மிகச்சரியானதே. தமிழ்ப்பிரதேச வாக்குகள் அனைத்தும் தமிழ்வாக்குகள் அல்ல. ஆனால் ஏறத்தாளப் பதினைந்து லட்சம் வாக்குகளில் எட்டிலிருந்து பத்துலட்சம் வரை தமிழர்களுடையது என்று நாங்கள் கொள்ளலாம்.(<i>இந்தப் புள்ளிவிபரத்தைக் கூடத் துல்லியமாக என்னால் தரமுடியும்.அதற்கு ஒரு மணிநேரமாவது ஒதுக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு இப்படி ஓய்வுநேரம் கிடைப்பது அரிது. கிடைக்கும் ஓய்வில் உறங்காவிடின் மறுநாள் பலர் நிரந்தரமாக உறங்கிவிடும் அபாயம் உண்டு. பார்க்கும் தொழில் அத்தன்மையது. அதனால் தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள். நீங்களே கூடச் சற்று நேரம் ஒதுக்கித் தேடுவீர்களாயின் சரியான புள்ளிவிபரத்தை எடுக்கலாம்.) </i>
அதுதவிர இம்முறை வன்னியில் மட்டும் நான்கு லட்சம் புதிய வாக்காளர்கள் (அதாவது முதன்முறையாக) வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். எனவே ஏற்கெனவே இருந்த இரண்டு லட்சத்துடன் இந்த நான்கு லட்சமும் சேர ஆறுலட்சம் வாக்குகளை வன்னி மட்டுமே கொண்டிருக்கிறது
அதுவும் அனைவர் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.
<b>இறுதியாக தேவையற்ற பிரச்சினைகள் என ஆயர்கள் சொன்னபிரச்சினை எழலாம் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். (து}யவன் தலையைப் பிய்க்கமுன்பே இதையும் விளக்கிவிடுகிறேன்)</b>
து}யவன், இங்கே நண்பர் ஆயர்கள் குறிப்பிட்ட வேண்டத்தகாத விளைவுகள் என்று குறிப்பிடுவது, எனது ஊகம் சரியானால் (பி.பி.சி தமிழ்ச்சேவையில் ஆயரின் பேட்டியை இணையத்தளமூடாகக்கேட்டதை வைத்து) "மக்கள் வீடுகளில் இருந்தால் அவர்களது வாக்குகளை விரும்பியவாறு அரசியல் கட்சிகளின் குண்டர்கள் தத்தமது கட்சி வேட்பாளருக்கு அளித்துவிடுவார்கள். அதனால் தமிழ்மக்கள் வாக்களிக்கப்போகவேண்டும்." என்று ஆயர் சொல்லியிருந்தார்.
நியாயமான அச்சம்தான். ஆனால் அந்த அச்சத்திற்கான தீர்வு குறித்து இப்போது தமிழர்தாயகப்பகுதியில் அரசியல் நோக்கர்கள், புத்திஜீவிகள் மட்டத்தில் விவாதித்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
வாக்களிக்கச் சென்று அங்கே அந்த வாக்குகளை செல்லா வாக்குகளாக்கி எமது எதிர்ப்பைக் காட்டலாமா என்றும் சிந்திக்கப்படுவதாக அறிந்தேன்.
இன்னுமொன்று. இந்த ஆயர்கள் எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது அப்படியிருக்கையில் இப்போது ஆயர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது எதைக்காட்டுகிறது.
அண்மையில் ஆயர்களுடன் விடுதலைப் புலிகள் முரண்பட்டதாகவோ, அல்லது ஆயர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பியதாகவோ எந்தத் தகவலும் இல்லையே.
எனவே விடுதலைப் புலிகளின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படும் ஆயர்கள் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது, விடுதலைப் புலிகள் இந்த விடயத்தில் யாதொரு அழுத்தத்தினையும் எவருக்கும் வழங்கவில்லை என்பதையே காட்டுகிறது.
<b>அன்புடன் திரு</b>
<b>குறிப்பு: </b>அடிக்கடி இந்தத் தளத்திற்கு வருவதோ அல்லது இப்படி விரிவாகப் பதில் எழுதுவதோ எனக்கு இயலாத காரியம். எனது பதிவுகளைப் பார்த்தாலே தங்களுக்கு அது புரியும். எனவே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் உடன் தராதுபோனால் அதுகுறித்து மனவருத்தமடையவேண்டாம். எத்தனை காலம் சென்றாலும் மீண்டும் வரும்போது பதில் தருவேன்.

