11-07-2005, 12:56 PM
<b>ரணில் குறித்த புலிகளின் எச்சரிக்கையை மெய்ப்பிகிறது நவீன் திசநாயக்கவின் பேச்சு!!</b>
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய அரசியல் சதித் திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அண்மையில் எச்சரித்திருந்தார்.
ரணிலின் அமைதிப் பேச்சுக்களின் அழைப்புகளுக்குப் பின்னால் உள்ள பாரிய சதியை அவர் விளக்கி இருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசநாயக்கவின் கினிகத்தேனை பேச்சு அமைந்துள்ளது. மேலும் ரணிலின் எதிர்கால சதித் திட்டங்களையும் நவீன் திசநாயக்க அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நவீன் திசநாயக்க பேசியுள்ளதாவது:
சமாதானத்தை உருவாக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பான நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் சிலமுறை அமைதிப் பேச்சுகளை நடத்தினார்கள்.
அப்பொழுது கருணாவை இந்த சமாதானப் பேச்சுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அதன் மூலம் அவர் வெளியுலக அனுபவத்தைப் பெற்றார். பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் தனியாகக் குழுவை அமைத்துப் புலிகளுக்கு எதிராகச் செயலாற்றச் சென்றார். இவ்வாறு அமைந்ததுக்குக் காரணமே ரணில் விக்கிரமசிங்கதான்.
மேலும் வாசிக்க:
http://www.eelampage.com/?cn=21490
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய அரசியல் சதித் திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அண்மையில் எச்சரித்திருந்தார்.
ரணிலின் அமைதிப் பேச்சுக்களின் அழைப்புகளுக்குப் பின்னால் உள்ள பாரிய சதியை அவர் விளக்கி இருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசநாயக்கவின் கினிகத்தேனை பேச்சு அமைந்துள்ளது. மேலும் ரணிலின் எதிர்கால சதித் திட்டங்களையும் நவீன் திசநாயக்க அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நவீன் திசநாயக்க பேசியுள்ளதாவது:
சமாதானத்தை உருவாக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பான நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் சிலமுறை அமைதிப் பேச்சுகளை நடத்தினார்கள்.
அப்பொழுது கருணாவை இந்த சமாதானப் பேச்சுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அதன் மூலம் அவர் வெளியுலக அனுபவத்தைப் பெற்றார். பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் தனியாகக் குழுவை அமைத்துப் புலிகளுக்கு எதிராகச் செயலாற்றச் சென்றார். இவ்வாறு அமைந்ததுக்குக் காரணமே ரணில் விக்கிரமசிங்கதான்.
மேலும் வாசிக்க:
http://www.eelampage.com/?cn=21490

