11-06-2005, 03:23 AM
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பேசி வருவதன் பின்னணியில் பாரிய அரசியல் சதித் திட்டம் உள்ளது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"புலிகளின் குரல்" வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியுள்ளதாவது:
எங்கள் மக்களது அரசியல் எழுச்சி என்பது முன்பு எப்போதையும் விட உச்ச நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
திருவாளர் மகிந்த ராஜபக்சவினது வாக்குறுதிகள் இதுவரை வரலாற்றின் உச்ச சாதனையை எட்டிவிட்டன. எவரும் வழங்காத வாக்குறுதிகளை வழங்கிவிட்டார். இனிமேல் வாக்குறுதிகள் அளிக்கப் போகிறவர்களுக்கு பெரும் துன்பம்தான். ரணில் கூட என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து வாக்குறுதிகளையும் மகிந்த ராஜபக்சவே வழங்கிவிட்டார்.
இங்கே ஒரு இக்கட்டான நிலையில் அங்கே சிங்கள தேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது. சிங்கள மக்களை ஏய்த்து ஏய்த்து சொல்லிச் சொல்லி இவ்வளவு ஏமாற்றியதற்குப் பின்னால் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாகச் சொல்லுகிற அளவுக்கு சிங்கள தேசத்து அரசியல் தரம் தாழ்ந்து கிடக்கிறது.
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் தமிழ் மக்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. இரண்டு வேட்பாளர்களுமே சிங்கள மக்களை மையமாக வைத்துதான் சிந்திக்கிறார்கள். தம்முடைய வாக்கு வங்கி சிக்கலாக இருப்பதால்தான் ரணிலும் வேறு வழியின்றி தமிழ் மக்கள் பற்றி பேசுகிறார். இருவருமே சமமான நிலையில் உள்ளவர்கள்தான். எவருடைய வாக்கு வங்கியை மற்றவர் அபகரிக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது.
இனவாதஇ பேரினவாதக் கருத்துகள் நிரம்பிய நிலையில் சிங்கள மக்களிடத்திலே மகிந்தரின் வாக்கு வங்கி அமைந்திருக்கிறது. அதனால் ரணிலுக்கு வேறு வழி இல்லை. அதனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் பல்வேறு வேடங்களைப் போட்டுவருவது எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும்.
தமிழ் மக்களது பிரச்சனைகள் குறித்து இம்மியளவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கருத்தில் எடுக்கவில்லை என்பதுதாம் எம் கருத்து. சிங்கள மக்களது பிரச்சனை வேறுஇ தமிழ் மக்களது பிரச்சனைகள் வேறு.
சிங்கள மக்களது பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாக சிங்களத் தலைவர்களுக்கு உண்டு. ஜே.வி.பி.க்கு நிறைவேறாத ஆசைகள் நிறைய உண்டு. அவர்களது எண்ணங்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கின்றன. அதனால் தவியாய் தவித்து துடியாய் துடித்து என்ன செய்தேனும் பதவியைக் கைப்பற்றி தங்களுடைய ஆட்சியை திடப்படுத்தி தங்களுடைய மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக என்ன என்ன வழிகளால் பயணிக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் அவர்கள் பயணிக்கிறார்கள்.
இந்தத் தேர்தலின் நடப்பும், நடைமுறைகளும் தமிழ் மக்களுக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. இந்தத் தேர்தல் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது. தமிழீழ மக்களுக்கும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற செய்தியைத்தான் இந்தத் தேர்தல் சொல்கிறது. சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் பற்றி அமெரிக்காவினது ரிச்சர்ட் ஆர்மிடேஜிடம் கேள்வி கேட்டால்இ விடுதலைப் புலிகள் கூட்டாட்சி அமைப்புக்குத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் தமிழ் மக்களும் எதுவித தொடர்பும் இல்லை என்பதைத்தான் ஆர்மிடேஜ் போன்றவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக அமையப் போகிறது. இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தெரிவிக்கப் போகிற முடிவு என்பது உலகத்துக்கு உடனடியாகத் தெரியப் போகிறது. இதை உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே எங்களுடைய மக்கள் இரண்டு வேட்பாளர்களது வரலாற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களது செயற்பாட்டை மேற்கொண்டு தமது முடிவை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். எம் மக்கள் என்ன மாதிரியான பதிலளிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எம் மக்களுடைய அரசியல் முதிர்ச்சி இந்தத் தேர்தலில் வெளிப்படும் என்று நாம் நம்புகிறோம்.
நீண்டகாலமாக அறிமுகமான இரு கட்சிகளது பழைய முகங்களுக்கு ஊடாக மகிந்தர் என்ற புதிய முகம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய முகத்தின் பயங்கரமான- அலங்கோலமான தோற்றம் எம்மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தென்னிலங்கையின் சாதாரண மக்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்ள, 75 வீதம் கிராமங்களில் வாழும் சிங்களவர்களின் பிரதிநிதியாக காட்டிக் கொள்ள மகிந்தர் முயற்சிக்கிறார். இதற்காக கொழும்பு மேட்டிமைத்தன்மையோடு தொடர்பில்லாத கிராமப்புற சிங்களவர்களுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இது ஒன்றும் புதிது அல்ல.
1956 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க கையாண்ட அதே முறையில்தான் இன்று மகிந்தவும் செயற்பட்டு வருகிறார். அதைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. மகிந்தர் தெளிவாகச் சொல்லிவிட்டர்- எனக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்று. எனவே அவரைப் பற்றி எங்களுக்குச் சிக்கலே இல்லை.
ஆனால் ரணில் பெரிய வேடமிட்டுக் கொண்டிருக்கிறார். இதுபற்றி எமது மக்கள் தெளிவாக இருத்தல் வேண்டும்.
ரணில் அண்மைக்காலமாகப் பேசிவருவதன் பின்னால் உள்ள நச்சுக் கருத்தை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களை போரில் வெல்ல முடியாது என்பது ரணிலுக்குத் தெரியும்.
அதனால் தந்திரத்தால் வெல்ல நினைக்கிறார்.
தாம் அரச தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு
புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து
ஒரு அரைகுறையான தீர்வை பல்வேறு வடிவங்களில் சமர்ப்பித்து
மிக நீண்டகாலத்துக்கு இந்தப் போராட்ட முதிர்ச்சியிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் புலிகளை பின் தள்ள வைத்து-
புலிகளின் நாட்டுப்பற்று தொடர்பிலான இலக்கை விலக்கச் செய்கிற
முழு தந்திரோபாய முயற்சியில் ரணில் ஈடுபட்டுள்ளார்.
இதுதான் அண்மைக்காலமாக ரணில் கதைத்து வரும் பேச்சுகளின் பின்னணி.
இது சாதாரண மக்களுக்குப் புரிவது கடினமாக இருக்கலாம். உற்றுநோக்கிப் பார்த்தால் மகிந்த ராஜபக்ச சொல்வதைத்தான் ரணில் சொல்லுகிறார். மகிந்தர் வெளிப்படையாகச் சொல்லுகிறார். ஆனால் ரணில் மறைமுகமாக பூடகமாகச் சொல்கிறார். இருவரும் சொல்வதில் எந்த வேறுபாடும் இல்லை.
இரு கட்சிகளுமே ஒரு கட்சியின் இரண்டு கிளைகள்தான். இதை தமிழ் மக்கள் புரிய வேண்டும்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்து சிங்கள வாக்குகளை நம்பி புத்த பிக்குகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் இறங்கி பதவியைக் கைப்பற்றினார் பண்டாரநாயக்க.
இன்று அதே கட்சியின் பிரதிநிதியாக மகிந்த ராஜபக்சஇ ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுஇ போர் நிறுத்தம் மீளாய்வு என்று கூறி இன்னொரு வகையான பேரினவாதத்தைக் கிளப்பி பிக்குகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகிறார். இருவருக்கும் வேறுபாடு இல்லை.
அன்று பண்டாரநாயக்கவின் செயற்பாடு எமது விடுதலை இயக்கத்தின் பிறப்புக்குக் காரணமாக இருந்தது. இன்று மகிந்தவின் செயற்பாடு எமது போராட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.
அன்று பண்டா ஒரு கட்சியை அமைத்து தனது குடும்ப ஆட்சியை உருவாக்கினார். இன்று அவரது பாணியிலேயே செயற்பட்டு பண்டா குடும்ப ஆட்சியை முறியடித்து இன்னொரு குடும்ப ஆட்சியைக் கொண்டுவர மகிந்தர் முயற்சிக்கிறார். இந்த நிலையில்தான் ரணிலின் நிலைப்பாடு இரண்டும் கெட்டானாக இருக்கிறது.
எவ்வாறு 1956-க்குப் பிறகு இந்தத் தீவு இரத்தத்திலே குளிப்பதற்குச் செய்யப்பட்டதோஇ
அதுபோலவே மகிந்தரின் செயற்பாடும்
இந்தத் தீவில் சிங்களத் தீவானது இரத்தத்தில் குளிப்பதற்கும்
தமிழ்த் தீவு விடுதலை பெறுவதற்குமான வழியைக் கொடுக்கும் என்றுதான் எண்ணுகிறோம்.
தமிழ் மக்களை முற்று முழுதாகப் புறந்தள்ளி அவர்களை திசைதிருப்பச் செய்வதற்கானவே ஒரு அரசியல் யுத்திதான் இந்தத் தேர்தல் என்பது எமது நிலைப்பாடு என்றார் க.வே.பாலகுமாரன்.
http://www.eelampage.com/?cn=21450
"புலிகளின் குரல்" வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியுள்ளதாவது:
எங்கள் மக்களது அரசியல் எழுச்சி என்பது முன்பு எப்போதையும் விட உச்ச நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
திருவாளர் மகிந்த ராஜபக்சவினது வாக்குறுதிகள் இதுவரை வரலாற்றின் உச்ச சாதனையை எட்டிவிட்டன. எவரும் வழங்காத வாக்குறுதிகளை வழங்கிவிட்டார். இனிமேல் வாக்குறுதிகள் அளிக்கப் போகிறவர்களுக்கு பெரும் துன்பம்தான். ரணில் கூட என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து வாக்குறுதிகளையும் மகிந்த ராஜபக்சவே வழங்கிவிட்டார்.
இங்கே ஒரு இக்கட்டான நிலையில் அங்கே சிங்கள தேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது. சிங்கள மக்களை ஏய்த்து ஏய்த்து சொல்லிச் சொல்லி இவ்வளவு ஏமாற்றியதற்குப் பின்னால் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாகச் சொல்லுகிற அளவுக்கு சிங்கள தேசத்து அரசியல் தரம் தாழ்ந்து கிடக்கிறது.
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் தமிழ் மக்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. இரண்டு வேட்பாளர்களுமே சிங்கள மக்களை மையமாக வைத்துதான் சிந்திக்கிறார்கள். தம்முடைய வாக்கு வங்கி சிக்கலாக இருப்பதால்தான் ரணிலும் வேறு வழியின்றி தமிழ் மக்கள் பற்றி பேசுகிறார். இருவருமே சமமான நிலையில் உள்ளவர்கள்தான். எவருடைய வாக்கு வங்கியை மற்றவர் அபகரிக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது.
இனவாதஇ பேரினவாதக் கருத்துகள் நிரம்பிய நிலையில் சிங்கள மக்களிடத்திலே மகிந்தரின் வாக்கு வங்கி அமைந்திருக்கிறது. அதனால் ரணிலுக்கு வேறு வழி இல்லை. அதனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் பல்வேறு வேடங்களைப் போட்டுவருவது எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும்.
தமிழ் மக்களது பிரச்சனைகள் குறித்து இம்மியளவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கருத்தில் எடுக்கவில்லை என்பதுதாம் எம் கருத்து. சிங்கள மக்களது பிரச்சனை வேறுஇ தமிழ் மக்களது பிரச்சனைகள் வேறு.
சிங்கள மக்களது பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு நிச்சயமாக சிங்களத் தலைவர்களுக்கு உண்டு. ஜே.வி.பி.க்கு நிறைவேறாத ஆசைகள் நிறைய உண்டு. அவர்களது எண்ணங்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கின்றன. அதனால் தவியாய் தவித்து துடியாய் துடித்து என்ன செய்தேனும் பதவியைக் கைப்பற்றி தங்களுடைய ஆட்சியை திடப்படுத்தி தங்களுடைய மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக என்ன என்ன வழிகளால் பயணிக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் அவர்கள் பயணிக்கிறார்கள்.
இந்தத் தேர்தலின் நடப்பும், நடைமுறைகளும் தமிழ் மக்களுக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. இந்தத் தேர்தல் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது. தமிழீழ மக்களுக்கும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற செய்தியைத்தான் இந்தத் தேர்தல் சொல்கிறது. சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் பற்றி அமெரிக்காவினது ரிச்சர்ட் ஆர்மிடேஜிடம் கேள்வி கேட்டால்இ விடுதலைப் புலிகள் கூட்டாட்சி அமைப்புக்குத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கும் தமிழ் மக்களும் எதுவித தொடர்பும் இல்லை என்பதைத்தான் ஆர்மிடேஜ் போன்றவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக அமையப் போகிறது. இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தெரிவிக்கப் போகிற முடிவு என்பது உலகத்துக்கு உடனடியாகத் தெரியப் போகிறது. இதை உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே எங்களுடைய மக்கள் இரண்டு வேட்பாளர்களது வரலாற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களது செயற்பாட்டை மேற்கொண்டு தமது முடிவை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். எம் மக்கள் என்ன மாதிரியான பதிலளிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எம் மக்களுடைய அரசியல் முதிர்ச்சி இந்தத் தேர்தலில் வெளிப்படும் என்று நாம் நம்புகிறோம்.
நீண்டகாலமாக அறிமுகமான இரு கட்சிகளது பழைய முகங்களுக்கு ஊடாக மகிந்தர் என்ற புதிய முகம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய முகத்தின் பயங்கரமான- அலங்கோலமான தோற்றம் எம்மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தென்னிலங்கையின் சாதாரண மக்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்ள, 75 வீதம் கிராமங்களில் வாழும் சிங்களவர்களின் பிரதிநிதியாக காட்டிக் கொள்ள மகிந்தர் முயற்சிக்கிறார். இதற்காக கொழும்பு மேட்டிமைத்தன்மையோடு தொடர்பில்லாத கிராமப்புற சிங்களவர்களுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இது ஒன்றும் புதிது அல்ல.
1956 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க கையாண்ட அதே முறையில்தான் இன்று மகிந்தவும் செயற்பட்டு வருகிறார். அதைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. மகிந்தர் தெளிவாகச் சொல்லிவிட்டர்- எனக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்று. எனவே அவரைப் பற்றி எங்களுக்குச் சிக்கலே இல்லை.
ஆனால் ரணில் பெரிய வேடமிட்டுக் கொண்டிருக்கிறார். இதுபற்றி எமது மக்கள் தெளிவாக இருத்தல் வேண்டும்.
ரணில் அண்மைக்காலமாகப் பேசிவருவதன் பின்னால் உள்ள நச்சுக் கருத்தை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களை போரில் வெல்ல முடியாது என்பது ரணிலுக்குத் தெரியும்.
அதனால் தந்திரத்தால் வெல்ல நினைக்கிறார்.
தாம் அரச தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு
புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து
ஒரு அரைகுறையான தீர்வை பல்வேறு வடிவங்களில் சமர்ப்பித்து
மிக நீண்டகாலத்துக்கு இந்தப் போராட்ட முதிர்ச்சியிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் புலிகளை பின் தள்ள வைத்து-
புலிகளின் நாட்டுப்பற்று தொடர்பிலான இலக்கை விலக்கச் செய்கிற
முழு தந்திரோபாய முயற்சியில் ரணில் ஈடுபட்டுள்ளார்.
இதுதான் அண்மைக்காலமாக ரணில் கதைத்து வரும் பேச்சுகளின் பின்னணி.
இது சாதாரண மக்களுக்குப் புரிவது கடினமாக இருக்கலாம். உற்றுநோக்கிப் பார்த்தால் மகிந்த ராஜபக்ச சொல்வதைத்தான் ரணில் சொல்லுகிறார். மகிந்தர் வெளிப்படையாகச் சொல்லுகிறார். ஆனால் ரணில் மறைமுகமாக பூடகமாகச் சொல்கிறார். இருவரும் சொல்வதில் எந்த வேறுபாடும் இல்லை.
இரு கட்சிகளுமே ஒரு கட்சியின் இரண்டு கிளைகள்தான். இதை தமிழ் மக்கள் புரிய வேண்டும்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்து சிங்கள வாக்குகளை நம்பி புத்த பிக்குகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் இறங்கி பதவியைக் கைப்பற்றினார் பண்டாரநாயக்க.
இன்று அதே கட்சியின் பிரதிநிதியாக மகிந்த ராஜபக்சஇ ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுஇ போர் நிறுத்தம் மீளாய்வு என்று கூறி இன்னொரு வகையான பேரினவாதத்தைக் கிளப்பி பிக்குகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகிறார். இருவருக்கும் வேறுபாடு இல்லை.
அன்று பண்டாரநாயக்கவின் செயற்பாடு எமது விடுதலை இயக்கத்தின் பிறப்புக்குக் காரணமாக இருந்தது. இன்று மகிந்தவின் செயற்பாடு எமது போராட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.
அன்று பண்டா ஒரு கட்சியை அமைத்து தனது குடும்ப ஆட்சியை உருவாக்கினார். இன்று அவரது பாணியிலேயே செயற்பட்டு பண்டா குடும்ப ஆட்சியை முறியடித்து இன்னொரு குடும்ப ஆட்சியைக் கொண்டுவர மகிந்தர் முயற்சிக்கிறார். இந்த நிலையில்தான் ரணிலின் நிலைப்பாடு இரண்டும் கெட்டானாக இருக்கிறது.
எவ்வாறு 1956-க்குப் பிறகு இந்தத் தீவு இரத்தத்திலே குளிப்பதற்குச் செய்யப்பட்டதோஇ
அதுபோலவே மகிந்தரின் செயற்பாடும்
இந்தத் தீவில் சிங்களத் தீவானது இரத்தத்தில் குளிப்பதற்கும்
தமிழ்த் தீவு விடுதலை பெறுவதற்குமான வழியைக் கொடுக்கும் என்றுதான் எண்ணுகிறோம்.
தமிழ் மக்களை முற்று முழுதாகப் புறந்தள்ளி அவர்களை திசைதிருப்பச் செய்வதற்கானவே ஒரு அரசியல் யுத்திதான் இந்தத் தேர்தல் என்பது எமது நிலைப்பாடு என்றார் க.வே.பாலகுமாரன்.
http://www.eelampage.com/?cn=21450

