11-05-2005, 06:08 PM
'ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்ற வேண்டும்'- வடக்கு கிழக்கு ஆயர்கள்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050220141115bishopmannarw203.gif' border='0' alt='user posted image'>
<b>மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு</b>
இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் மூவரும் இணைந்து கோரியுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆர்வம் குன்றிய நிலையில் காணப்படும் தமிழ் மக்கள், அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில், அவர்களது வாக்குகள் தவறான வழியில் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிலையும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது கூட்டு அறிக்கை பற்றி தகவல் தந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள், இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், தமிழருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
ஆகவே தமது வாக்குகளை நேரகாலத்துக்குள் சென்று தமிழ் மக்கள் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து செயற்படும் ஒருவரை மற்றும் நீதியுடனான சமாதானத்தை நாட்டுக்கு வழங்கக் கூடிய ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் மன்னார் ஆயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
BBC தமிழ்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050220141115bishopmannarw203.gif' border='0' alt='user posted image'>
<b>மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு</b>
இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் மூவரும் இணைந்து கோரியுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆர்வம் குன்றிய நிலையில் காணப்படும் தமிழ் மக்கள், அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில், அவர்களது வாக்குகள் தவறான வழியில் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிலையும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது கூட்டு அறிக்கை பற்றி தகவல் தந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள், இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், தமிழருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
ஆகவே தமது வாக்குகளை நேரகாலத்துக்குள் சென்று தமிழ் மக்கள் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து செயற்படும் ஒருவரை மற்றும் நீதியுடனான சமாதானத்தை நாட்டுக்கு வழங்கக் கூடிய ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் மன்னார் ஆயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

