11-05-2005, 09:04 AM
<img src='http://img355.imageshack.us/img355/6342/heroesday10px.jpg' border='0' alt='user posted image'>
<b>கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட...
மரணம் மண்டியிட
மண்ணில் வீழ்ந்தோம்
அன்னை மடிமீது
அந்நிய ஆதிக்கம்...
உயிர் மூச்சு நெருப்பாக்கி
உற்ற கடமை செய்தோம்..!
உறவுகள் எமக்கு
உலகெங்கும்
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ...
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்...!
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
தமிழன் நான்
தனித்துவமானவன்
எண்ணங்கள் காத்திடுங்கள்...!
இன்னும்...
உற்ற அன்னை
உள்ளுக்குள் அழுகிறாள்
உருவில்லை என்றாலும்
எங்கள் மூச்சுகள் உணருது
உங்கள் மூச்சொடு
இறுதி இலட்சியம் வென்றிடுங்கள்
வீணடிக்காது விரைந்து
வீர வரலாறு
இறுதி அத்தியாயம் எழுதிடுங்கள்...!
மாவீரனை வணங்குதல்
"இலட்சியம் காத்தல்"
அர்த்தப்படுத்தி
உயிர் விதைகள்
ஊன்றிய இடத்தில்
சத்தியம் செய்யுங்கள்..!
உரிமைகள் வென்று
விடுதலை வாங்கி
உதாரணமாகி நில்லுங்கள்..!
எமக்காய்..
கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது...
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் சுமக்கின்றார்
வீழ்ந்தும் வாழ்கிறோம்
நினைவுகளாய்
விதை நிலங்களில்..!
என்றும் வீரராய் வாழ்வோம்
சுதந்திர தேசத்தில்...!</b>
(படம் - தமிழ்நாதம்)
http://kuruvikal.yarl.net/
<b>கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட...
மரணம் மண்டியிட
மண்ணில் வீழ்ந்தோம்
அன்னை மடிமீது
அந்நிய ஆதிக்கம்...
உயிர் மூச்சு நெருப்பாக்கி
உற்ற கடமை செய்தோம்..!
உறவுகள் எமக்கு
உலகெங்கும்
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ...
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்...!
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
தமிழன் நான்
தனித்துவமானவன்
எண்ணங்கள் காத்திடுங்கள்...!
இன்னும்...
உற்ற அன்னை
உள்ளுக்குள் அழுகிறாள்
உருவில்லை என்றாலும்
எங்கள் மூச்சுகள் உணருது
உங்கள் மூச்சொடு
இறுதி இலட்சியம் வென்றிடுங்கள்
வீணடிக்காது விரைந்து
வீர வரலாறு
இறுதி அத்தியாயம் எழுதிடுங்கள்...!
மாவீரனை வணங்குதல்
"இலட்சியம் காத்தல்"
அர்த்தப்படுத்தி
உயிர் விதைகள்
ஊன்றிய இடத்தில்
சத்தியம் செய்யுங்கள்..!
உரிமைகள் வென்று
விடுதலை வாங்கி
உதாரணமாகி நில்லுங்கள்..!
எமக்காய்..
கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது...
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் சுமக்கின்றார்
வீழ்ந்தும் வாழ்கிறோம்
நினைவுகளாய்
விதை நிலங்களில்..!
என்றும் வீரராய் வாழ்வோம்
சுதந்திர தேசத்தில்...!</b>
(படம் - தமிழ்நாதம்)
http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

