11-04-2005, 10:34 PM
Rasikai Wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட மிக அருமையான கதை. யாதார்த்த வாழ்வில் நிகழும் நிகழ்வுகள்.
ம்ம் இப்படி பல காதல்கள் பெற்றோருன் விருப்பத்தற்காக த௯டைப்பட்டு போகின்றது. காதலில் பொறுமை வேண்டும்.
பொறுமையுடனும் நிதானத்துடனும் காதலிப்பீர் வெற்றி வெறுவீர்.
இணைப்புக்கு நன்றி இளைஞன்
காலத்தோடு எல்லாத்திலும் மாறீட்டார்கள்...ஆனா காதல் என்ற உடன பெற்றோருக்காக முறிக்கிறம்...அவைக்காக இன்னொன்றோட வாழுறம் என்று கதை விடினம்..! காதலிக்கும் வரை பெற்றோர் கண்ணுக்குத் தெரியாயினமா.. அவையைக் கேட்டா நீங்கள் காதலிக்கிறியள்...இல்லை அவையைக் கேட்டா காதல் வருகுது... பெற்றோரிலையா எப்பவும் எல்லாத்திலும் தங்கி இருக்கிறியள் இல்லையே...!
காதல் திருமணம் என்பதெல்லாம் உங்கள் சொந்த வாழ்க்கை...! அதில் உங்களுடன் பெற்றோர் இறுதிவரை வரமுடியாது..! உங்கள் நிம்மதியை அழித்து ஒரு வாழ்க்கையை பெற்றோருக்காக தீர்மானிக்கிற ஆக்கள் ஏன் காதலிக்கினம்..! பிள்ளையாக பெற்றோறை கவனிக்கனும் இறுதிவரை...அதுக்காக உங்கள் மகிழ்ச்சியை தொலைக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம்..! உன்மையில் உங்களுக்கு காதலிருந்தா பெற்றோருக்காகப் பிரிகிறம் என்று சொல்லாமல்... பெற்றோரைப் பிரிந்தாலும்... சேர்ந்து வாழ்வீர்கள்..! அப்பா அம்மா கோவம் நிலைச்சதில்லை...பிள்ளைகள் மேல்..! ஆனா காதலிக்கிற ஒரு அன்பு ஜீவனை பாதியில விரட்டிறது போல கொடுமை எதுவுமே இல்லை...! ஒருவரை வருத்தி நீங்கள் இன்னொருவருடன் எப்படி உல்லாசமா அப்பா அம்மா விருப்பத்துக்கு வாழுறியள்..போலியாத்தானே..அப்படிப் போலியா உங்களுக்க எண்ணம் இருப்பதால்தான் உங்களில் காதலிலும் உறுதியா நிற்க முடியல்ல...! இதை ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன...தப்புத்தான்..! மகா கொடுமைதான்..!
(இதில் வரும் "நீங்கள்" "உங்கள்" ரசிகையைக் குறிக்கவில்லை...குறித்த செயலைச் செய்பவர்களை மட்டும் குறிக்கிறது)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

