11-04-2005, 07:42 PM
தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்கள் படை வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்.குடாநாடெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்புக்குரிய யாழ்.மக்களே, ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம், தமிழ் மக்களாகிய எமக்கு ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செய்த அராஜகங்களும், துரோகங்களும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால அனுபவங்கள் எமக்குப் போதும். எனவே, `எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை' என்பதை உணர்த்துவோம்.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தல், தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுதல், அது தொடர்பான ஏனைய செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதை மீறுபவர்கள் மிக விரைவாக தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது எச்சரிக்கையல்ல கண்டிப்பான கட்டளை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்.குடாநாடெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்புக்குரிய யாழ்.மக்களே, ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம், தமிழ் மக்களாகிய எமக்கு ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செய்த அராஜகங்களும், துரோகங்களும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால அனுபவங்கள் எமக்குப் போதும். எனவே, `எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை' என்பதை உணர்த்துவோம்.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தல், தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுதல், அது தொடர்பான ஏனைய செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதை மீறுபவர்கள் மிக விரைவாக தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது எச்சரிக்கையல்ல கண்டிப்பான கட்டளை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

