11-04-2005, 12:41 PM
<b>யுத்தத்துக்கான முன்னெடுப்புகளா?: சு.ப.தமிழ்ச்செல்வன் பதில்
[வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 16:28 ஈழம்] [ம.சேரமான்]
யுத்தத்துக்கான முன்னெடுப்புகளை நோக்கி நாம் நகருகிறோமா என்று எம்மால் கூறமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா தேர்தலில் பட்டும் படாமலும் விலகி நிற்கும் போராளிகள்- சமிக்ஞைக்குக் காத்திருக்கும் வாக்காளர்கள்" என்ற தலைப்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக் கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் பீற்றர் ஆப்ஸ்க்கு கிளிநொச்சியில் அளித்த நேர்காணலில் சு.ப. தமிழ்ச்செல்வன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரை:
இலங்கைத் தீவில் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக விடுதலைப் புலி போராளிகள் முழுமையாக ஆர்வம் கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்களது பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் இது தொடர்பிலான போராளிகளது நகர்வுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
போராளிகளின் முழு கட்டுப்பாட்டுப் பகுதியான வடபகுதியில் உள்ள கிளிநொச்சியில் உள்ள சில வாக்காளர்கள், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் சிங்களத் தேசியவாதிகளின் தெரிவான பிரதமர் மகிந்த ராஜபக்சவை விட 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கிய ரணிலையே தேர்வு செய்கின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை தலைநகரமாக உள்ள கிளிநொச்சியில் உள்ளவர்களும் அதைச் சுற்றி வசிப்பவர்களும் வாக்குப் பதிவு வீதமானது போராளிகளின் எண்ண ஓட்டத்துக்கமையவே இருக்கும் என்கின்றனர்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்கிறார்களோ அதையே நாம் செய்வோம்" என்று சுப்பையா ரவி என்கிற கடைக்காரர் தெரிவித்தார். "அவர்கள் எங்களை வாக்களிக்கக் கூறினால் வாக்களிப்போம், வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னால் வாக்களிக்க மாட்டோம்" என்றார் அவர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களே அதிகம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பு நாளன்று அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் சூனியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு பேரூந்துகளில் அழைத்துவரப் பட உள்ளனர். இது விடயத்தில் போராளிகள் தலையிடக் கூடுமோ என்று தேர்தல் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதும் அரச தலைவர் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குண்டுத் தாக்குதல்களையும் தொடர்ச்சியான கொலைகளையும் புலிகள் மேற்கொள்வதாகவும் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கச் செய்வதற்காக அவர்கள் அதை மேற்கொள்வதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவிகின்றனர்.
இனப்பிரச்சனை தொடர்பான இரு தசாப்த கால யுத்தத்தில் 64 ஆயிரம் பேர் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த ரணில் விக்கிரமசிங்கவால்தான் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும் என்று பலரும் கருதுவாக நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்சிடம் கூறுகையில்,
எந்த ஒரு வேட்பாளரது உறுதிமொழிகளும் உள்ளத்திலிருந்து வெளிவருவது அல்ல. இருவருமே தமிழர் மற்றும் சிங்களவர் வாக்குகளைப் பெறுவதற்காக "அமைதி" என்பதை ஏலம்விட்டுக் கொண்டுள்ளனர் என்கிறார்.
மேலும், "தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மறந்துவிடுவார்கள். நாம் முழுமையாகவே இந்தத் தேர்தல் குறித்து எதுவித அக்கறையும் கொள்ளவில்லை. நாம் பொறுப்பான ஒரு அரசியல் இயக்கம். எமது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு" என்றும் கூறினார்.
ஆபத்தான சூழ்நிலை
கடந்த 3 ஆண்டுகால யுத்த நிறுத்த ஒப்பந்தமானது முன்னெப்போதையும் விட தற்போது பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். கிழக்குப் பிராந்தியத்தில் அவர்களது இயக்கத்தை விட்டுப் ஓடிப் போன துரோகிகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினர் என்று புலிகள் அழைக்கின்றனர். ஆனால் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளது.
"யுத்தத்துக்கான முன்னெடுப்புகளை நோக்கி நாம் நகருகிறோமா என்று எம்மால் கூறமுடியாது; ஆனால் மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி நாம் நகர்த்தப்படுகிறோம்" என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் தமிழ்ச்செல்வன் எம்மிடம் தெரிவித்தார்.
வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ காவலரண்கள் கைக் குண்டுத்தாக்குதல்களுக்கி வருவது அதிகரித்துள்ளது. வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்துவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளால் தன்னாட்சி அதிகாரத்துக்காக போராடுவதாக கூறுகிற விடுதலைப் புலிகள், இத்தகைய தாக்குதல்களையும் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி மற்றும் ஓகஸ்ட் மாதம் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கொல்லப்பட்டதையும் மறுத்துள்ளனர்.
இருப்பினும் வெளிவிவகார அமைச்சர் படுகொலையையடுத்தே தமிழீழ விடுதலைப் புலிகளை தமது உறுப்பு நாடுகளில் வரவேற்கப் போவதில்லை என்றும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக சிலர் கருதுகின்றனர்.
"சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இருந்தால் நாம் கண்டிப்பாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, அதன் பின்னர் யுத்தத்தைத் தொடங்குவோம். இந்த மறைவான நடவடிக்கைகளைக் காட்டிலும் அதுதான் சரியானதாக இருக்கும்" என்றார் தமிழ்ச்செல்வன்.
கிளிநொச்சியின் 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள குண்டுத்தாக்குதல்களுக்குள்ளான பனைமரங்கள் உள்ள சூனியப் பிரதேசம் இரு பகுதியினரையும் பிரிக்கிறது. தங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இருந்தபோதும் ஆபத்தானதாக அது இருப்பதாக வாக்காளர்கள் எண்ணுகின்றனர்.
"மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் நாம் யுத்தத்தை முன்னெடுப்போம்" என்கிறார் வர்த்தகரான நடேசன் தணிகாசலம்.
"தாங்கள் சொல்வதைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரை எம்மை அறிவுறுத்தியதில்லை. விடுதலைப் புலிகள்தான் மக்கள். மக்களாகிய நாங்கள்தான் விடுதலைப் புலிகள்" என்றார் நடேசன் தணிகாசலம்.
-என்று ரொய்ட்டர்ஸ் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</b>
[வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 16:28 ஈழம்] [ம.சேரமான்]
யுத்தத்துக்கான முன்னெடுப்புகளை நோக்கி நாம் நகருகிறோமா என்று எம்மால் கூறமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா தேர்தலில் பட்டும் படாமலும் விலகி நிற்கும் போராளிகள்- சமிக்ஞைக்குக் காத்திருக்கும் வாக்காளர்கள்" என்ற தலைப்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக் கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் பீற்றர் ஆப்ஸ்க்கு கிளிநொச்சியில் அளித்த நேர்காணலில் சு.ப. தமிழ்ச்செல்வன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரை:
இலங்கைத் தீவில் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக விடுதலைப் புலி போராளிகள் முழுமையாக ஆர்வம் கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்களது பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் இது தொடர்பிலான போராளிகளது நகர்வுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
போராளிகளின் முழு கட்டுப்பாட்டுப் பகுதியான வடபகுதியில் உள்ள கிளிநொச்சியில் உள்ள சில வாக்காளர்கள், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் சிங்களத் தேசியவாதிகளின் தெரிவான பிரதமர் மகிந்த ராஜபக்சவை விட 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கிய ரணிலையே தேர்வு செய்கின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை தலைநகரமாக உள்ள கிளிநொச்சியில் உள்ளவர்களும் அதைச் சுற்றி வசிப்பவர்களும் வாக்குப் பதிவு வீதமானது போராளிகளின் எண்ண ஓட்டத்துக்கமையவே இருக்கும் என்கின்றனர்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்கிறார்களோ அதையே நாம் செய்வோம்" என்று சுப்பையா ரவி என்கிற கடைக்காரர் தெரிவித்தார். "அவர்கள் எங்களை வாக்களிக்கக் கூறினால் வாக்களிப்போம், வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னால் வாக்களிக்க மாட்டோம்" என்றார் அவர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களே அதிகம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பு நாளன்று அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் சூனியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு பேரூந்துகளில் அழைத்துவரப் பட உள்ளனர். இது விடயத்தில் போராளிகள் தலையிடக் கூடுமோ என்று தேர்தல் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதும் அரச தலைவர் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குண்டுத் தாக்குதல்களையும் தொடர்ச்சியான கொலைகளையும் புலிகள் மேற்கொள்வதாகவும் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்கச் செய்வதற்காக அவர்கள் அதை மேற்கொள்வதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவிகின்றனர்.
இனப்பிரச்சனை தொடர்பான இரு தசாப்த கால யுத்தத்தில் 64 ஆயிரம் பேர் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த ரணில் விக்கிரமசிங்கவால்தான் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும் என்று பலரும் கருதுவாக நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்சிடம் கூறுகையில்,
எந்த ஒரு வேட்பாளரது உறுதிமொழிகளும் உள்ளத்திலிருந்து வெளிவருவது அல்ல. இருவருமே தமிழர் மற்றும் சிங்களவர் வாக்குகளைப் பெறுவதற்காக "அமைதி" என்பதை ஏலம்விட்டுக் கொண்டுள்ளனர் என்கிறார்.
மேலும், "தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மறந்துவிடுவார்கள். நாம் முழுமையாகவே இந்தத் தேர்தல் குறித்து எதுவித அக்கறையும் கொள்ளவில்லை. நாம் பொறுப்பான ஒரு அரசியல் இயக்கம். எமது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு" என்றும் கூறினார்.
ஆபத்தான சூழ்நிலை
கடந்த 3 ஆண்டுகால யுத்த நிறுத்த ஒப்பந்தமானது முன்னெப்போதையும் விட தற்போது பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். கிழக்குப் பிராந்தியத்தில் அவர்களது இயக்கத்தை விட்டுப் ஓடிப் போன துரோகிகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினர் என்று புலிகள் அழைக்கின்றனர். ஆனால் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளது.
"யுத்தத்துக்கான முன்னெடுப்புகளை நோக்கி நாம் நகருகிறோமா என்று எம்மால் கூறமுடியாது; ஆனால் மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி நாம் நகர்த்தப்படுகிறோம்" என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் தமிழ்ச்செல்வன் எம்மிடம் தெரிவித்தார்.
வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ காவலரண்கள் கைக் குண்டுத்தாக்குதல்களுக்கி வருவது அதிகரித்துள்ளது. வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்துவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளால் தன்னாட்சி அதிகாரத்துக்காக போராடுவதாக கூறுகிற விடுதலைப் புலிகள், இத்தகைய தாக்குதல்களையும் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி மற்றும் ஓகஸ்ட் மாதம் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கொல்லப்பட்டதையும் மறுத்துள்ளனர்.
இருப்பினும் வெளிவிவகார அமைச்சர் படுகொலையையடுத்தே தமிழீழ விடுதலைப் புலிகளை தமது உறுப்பு நாடுகளில் வரவேற்கப் போவதில்லை என்றும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக சிலர் கருதுகின்றனர்.
"சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இருந்தால் நாம் கண்டிப்பாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, அதன் பின்னர் யுத்தத்தைத் தொடங்குவோம். இந்த மறைவான நடவடிக்கைகளைக் காட்டிலும் அதுதான் சரியானதாக இருக்கும்" என்றார் தமிழ்ச்செல்வன்.
கிளிநொச்சியின் 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள குண்டுத்தாக்குதல்களுக்குள்ளான பனைமரங்கள் உள்ள சூனியப் பிரதேசம் இரு பகுதியினரையும் பிரிக்கிறது. தங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இருந்தபோதும் ஆபத்தானதாக அது இருப்பதாக வாக்காளர்கள் எண்ணுகின்றனர்.
"மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் நாம் யுத்தத்தை முன்னெடுப்போம்" என்கிறார் வர்த்தகரான நடேசன் தணிகாசலம்.
"தாங்கள் சொல்வதைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரை எம்மை அறிவுறுத்தியதில்லை. விடுதலைப் புலிகள்தான் மக்கள். மக்களாகிய நாங்கள்தான் விடுதலைப் புலிகள்" என்றார் நடேசன் தணிகாசலம்.
-என்று ரொய்ட்டர்ஸ் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

