11-02-2005, 08:12 PM
poonai_kuddy Wrote:kuruvikal Wrote:இவோன் Wrote:ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பினை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது செலுத்துவது சாத்தியம்தான் என்றும் அதொன்றும் அசாதாரமான விடயம் கிடையாதென்றும் விஞ்ஞான முடிவுகள் எடுத்தியம்புகின்றன
அந்த விஞ்ஞான முடிவைத் தாருங்கோ..அதாவது காதல் என்ற பெயரில் தூய அன்பை எல்லாரிடமும் காட்டமுடியும்...என்ற..அந்த விஞ்ஞான உண்மையை தாங்கோ...நாங்களே வாசிச்சு விளங்கிறம்..! ஏன்னா மூளைல மெமரில இருக்கிறதை அகற்றி இயல்பைத் தாறது இலகுவான விடயமல்ல..! அந்த விஞ்ஞானத்தை தந்தா பலருக்கும் உபயோகமாக இருக்கும்...! பலபேர் இப்படியான பல நிலைக்காதலால்...பல மன அழுத்தங்களுக்கு உட்பட்டு உழல்கிறார்கள்..அவர்களுக்கு தீர்வு எட்ட உதவும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தங்கட தங்கட அனுபவங்கள பலர் என்று தோற்றப்பாடு காட்டி மற்றாக்கள பயமுறுத்தி அவர்கள் வாழ்வியல் நெறியியல் கருத்தியல் தளத்தில் கண்டபடி மாயையை உருவாக்கி புறவியல் சூழலியல் தாக்கத்தை செலுத்தி மனவியல் இயல்பியலை மாற்றுவதாய் புறப்பட்டு எதற்கு வீணாய் அறிவியல் தொழில்நுட்பவியல் வராலாற்றியல் தவறுகளை செய்யுறீங்கோ?????
இப்படி வசனம் பேச எங்களாலும் முடியும்...இப்ப இங்க சொல்லுறது ஆய்வுநிலை உண்மைகள்..! காதல் என்று ஏமாந்த ஏமாற்றப்பட்ட உள்ளங்களின் உளவியல் நிலை அறிந்த உண்மைகள்..! இதில் ஏமாற்றக் காரணமானவர்களே பலரோடும் காதல்..தூய அன்பு என்று மொழிவதாகத் தென்படுகிறது..! சுயநலமல்ல...இங்கு தேவை...பரந்த சமூக நோக்கம்..அதன ஆரோக்கியம்..! அது நோக்கி கருத்தியல் புறவியல்..சூழலியல் உருவாக்கபட வேண்டும் மிக வலுவாக..! சீர்திருத்தம் என்ற போர்வையில் விலங்கு நடத்தையிலில் மனிதன் வழிநடத்தப்பட அனுமதித்தால்..அது சமூக நலனைப் பெரிதும் பாதிக்கும்..! அங்கு கட்டுப்பாடுகள் நிச்சயம் தேவை..அது எங்கும் உருவாக்கப்படும்..! அல்லது மனிதனின் சிந்தனைக்கு சந்தர்ப்பம் முயற்சி இல்லாது போய்விடும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

