11-01-2005, 06:30 PM
tamilini Wrote:Quote:ஒரு சில மட்டுறுத்தினர் பக்கச் சார்பாக பிரச்சினைகளை தீர்க்காமல் அணி சேர்ப்பதுவும்,தம்மிடம் ஆயுதம் உண்டென்று விலாசம் காடுவதும் (இதைப் பல இடங்களில் காணலாம்,தாம் ஆயுதக் கடை வைத்திருக்கம் என்று சொல்லித் திரிவதும்)அணி சார்ந்தவர்களைப் பாதுகாப்பதுவும் ,முகமூடி போட்டுக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதராவக் எழுதும் படி மற்றவ்ர்களைத் தூண்டுவதும் அண்மயில் சினேகாவின் படப் பிரச்சினயில் நான் அவதானித்த விடயங்கள்.இது களத்தின் சினிமாப் பகுதியில் 'அசின்னின் படத் தலைப்புக்குள் நடந்தது.இவற்றைப் பாக்கும் போது இவருக்கு மட்டுறுத்தினர் ஆவதற்கான் தகுதி எவ்வாறு வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.தமிழினி அக்கா...ஞாபக இருக்குங்களா...தேடி தேடி கதைக்க வர வர ஒருதரம் கதைக்க மாட்டட்டாங்கள்...தங்களுக்குள்ளை அரசகுடும்பமாக குழுவாகவாக மட்டுமாக கதைத்து... சில குழுக்களின் சொந்தமாக இருந்ததையையே மறந்திட்டீங்களா...எனக்குஅந்நேரம் கள depression வந்துட்டதுன்னா பார்த்துகளேன்....
நாரதர் உங்களுக்கு யாரில் பிரச்சனை இப்ப? தமிழினியுடனா இல்லை சில மட்டுறுத்தினர்களுடனா?? முதல் நீங்கள் எனது கருத்துப்பற்றி தெளிவு பொறுங்கள். பொதுவாக நீங்கள் வைத்த கருத்து என்னைச்சாடுவதாய் அமைந்திருந்தது அதனால் எனது கருத்தை வைக்கிறேன்.
களத்தில் ஆயுதக்கடை மட்டும் அல்ல செருப்பு அருவாள் மிளகாய்த்தூள் என்று பல இடங்களில் நான் கருத்து வைத்திருக்கிறேன்? அதை நீங்கள் கவனிக்கவில்லையா?? எதற்காக அந்தக்கருத்து வைத்தேன் என்று தேடிப்பாருங்கள் முடிந்தால். அதை ஏன் இங்கு சம்பந்தப்படுத்துகிறீர்கள். சின்னப்புவுடனான நகைச்சுவை கருத்தாடலில் பாதுகாப்புப்பிரச்சனை பற்றிக்கதைச்சபோது இப்படிக்கதைத்த நினைவு எனக்கு இருக்கிறது. வேறை எந்த மட்டுறுத்தினர் உங்களுக்கு ஆயுதக்கடை பற்றிப்பேசினார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை. மட்டுறுத்தினர்கள் தவறு செய்தால் களப்பொறுப்பாளரிடம் சுட்டிக்காட்டுங்கள் அவர்கள் மட்டுறுத்தினரை தண்டிக்கலாம் ஏன் நீக்கக்கூடச்செய்யலாம். அதை விட்டிட்டு தேவையில்லாமல் களத்தில் நான் கதைத்ததை வைத்து கதை வைப்பதை தனிநபர் தாக்குதலாக நான் பார்க்கிறேன்.
அரச பரம்பரை பற்றிக்கூறியிருந்தீர்கள். களஉறவுகளிடம் உள்ள நட்புரீதியான உறவை பலப்படுத்தவே அந்தக்கட்டமைப்பு உருவாகக்பட்டிருந்தது. அதில் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இதைக்குறிப்பிடுகிறேன். நாம் ஒரு இடத்தில் கருத்தால் முரன்பட்டால் அடுத்த இடத்தில் அதை நினைவில் வைத்து மற்றவரை எதிராக நினைத்து பாவிப்பது கிடையாது. இங்கு சிலர் அப்படித்தான் செய்கிறார்கள். அரசபரம்பரை கட்டமைப்பு எங்களுக்கு வலுவான கருத்தாடலுக்கு வழிவகுத்தது. இதால எங்களுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உங்களுக்கு ஏற்பட்டதா?? இல்லை வேறு களஉறுப்பினர்களிற்கு ஏற்பட்டதா?? ஏற்பட்டிருந்தால் வருந்திறம். முகமூடி முகமூடி என்கிறீர்கள்?? யார் அணிந்திருக்கிறார்கள்?? ஆதாரத்துடன் நிருபியுங்கள். நீங்கள் களத்தில் பல உறுப்பினர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள்??
குறிப்பிட்ட மட்டுறுத்தினர் தவறு செய்ததாய் கள உறுப்பினர் குற்றம் (படம் நீக்கியது பக்கச்சார்பென்பது) சாட்டுகையில் எனது கருத்தை நான் வைப்பது போல மற்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்தை வைக்க சுதந்திரம் உண்டு உங்களுக்கு எதிராக கருத்தை வைத்தா முகமூடிகளா?? அப்ப எதிர்க்கருத்து வைத்தவை முகமூடிகள்?? எதிர்த்து கருத்து வைக்க முடியாத நிலையில் இதைச்சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
பல பெயருக்கு பெண்கள் மட்டுறுத்தினராக இருப்பது தான் பிரச்சனையோ?? இனி ஆண் பெயரை வைச்சிட்டு வாங்க மட்டுறுத்தினர்கள்.

