11-01-2005, 04:43 PM
முகத்தார், உங்கள் தனிமடலுக் நான் எழுதிய பதிலுக்கு பிறகும் நான் உங்கள் பகுதியை மூடச்சொல்லுறன் என்டு எழுதுறீங்கள்? :? சரிபறவாயில்லை... நிர்வாகத்திற்கு சிலபகுதிகளை மூடச்சொல்லுவதற்கு நான் இங்கு எல்லோரும் வாசிக்கும் படியாக எழுதவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள்.
நாட்டுக் கூத்து எங்கள் கலாச்சாரத்தின் அங்கம், இணையத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி அதை பேணிக் காப்பாற்றுங்கள், இளயதலைமுறைக்கும் அதுபற்றி தெரிய ஆவலாக இருக்கும் சொல்லிக்குடுங்கோ, நல்லது.
ஆனால், யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம், யுனிக்கோட், பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?
6 அங்கங்கள் எழுதினா பிறகு எதிர்ப்புத் தெரிவிப்பதாக சொல்லுறீங்கள். நீங்கள் சில அங்கங்களில் நல்ல விடயங்கள் சொல்லி இருக்குறீங்கள் இல்லை எண்டு சொல்லவில்லை. ஆனால் அந்த நல்ல கருத்துக்கள் பொறுக்கு எடுக்கப்பட்டு மேற்கொண்டு கருத்தாடல் விவாதங்களிற்கு வழிவகுத்தா? உதாரணத்துக்கு ஒரு ******** யாவது உங்கள் 6 பகுதிகளில் இருந்து 1 கருப்பொருளை பொறுக்கி எடுத்து அது சார்பாக கருத்து வைத்தா?
உங்களுக்கு தனிமடலில் போட்டதை திருப்பியும் சொல்லுகிறேன். <i>நான் உங்களில் ஒருவராக சமனாகத்தான் கருத்தாட முயல்கிறேன்.
மட்டம் தட்டுவது சுயமரியாதை இல்லாமல் தனக்கு அது தெரியாது இது தெரியாது நீங்கள் பெரியமனிதர் சொல்லுங்கோ கேக்கிறம் என்று தன்னை தாழ்த்தி கதைப்பவர்களிற்கு சுறணைவர வேண்டும் என்று.
தனிநபர் தாக்குதல் செய்வது மற்றவர்களின் அறியாமை வைத்து தனது சுயவரட்டு கொளரவத்துக்கு தீனி போடுபவர்களிற்கு.</i>
புலத்தில் (மேற்குலகில்) கவனித்துப்பாருங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து white colar வேலை செய்பவர்களுக்குதான் நாட்டு நடப்பு உலக விவகாரங்கள் தெரியும் என்றில்லை. முடி வெட்டுபவர்க்கும் அரசியல் பேசத் தெரியும் பேரூந்து ஓட்டுநரும் பொருளாதாரம் பற்றி தயக்கமின்றி கருத்துக் கூறவார். அவர்கள் தங்களைத்தாங்களே சிறுமைப்படுத்தி "ஓ நாங்கள் பள்ளிக்கூடம் பல்கலைக்கழகம் போய் பெரிய படிப்பு படிக்கவில் சும்மா blue colar வேலை தானே செய்யிறம்" என்று தங்களை தாங்களே அவமதிப்பதில்லை. எங்களுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் விளங்காது, தொழில்நுட்பம் வரவே வராது, வேற்று மொழி தெரியாது படிக்கவும் மாட்டம், திரை, தொடர்நாடகம், கால்பந்து பற்றித்தான் கதைக்கத் தெரியும் என்று ஒதுங்குவதில்லை. நாலுபோர் படிச்சவை, மெழியாக்கம் செய்வினம் அவையின்ரை ******* கயிறென்று பிடிச்சு மேலே ஏறப்போகிறம் எண்டு ஏமாளிகளாக இருக்கிறதில்லை.
*****களஉறுப்பினர்களை தாக்கும் வகையில் இருந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது = யாழினி
நாட்டுக் கூத்து எங்கள் கலாச்சாரத்தின் அங்கம், இணையத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி அதை பேணிக் காப்பாற்றுங்கள், இளயதலைமுறைக்கும் அதுபற்றி தெரிய ஆவலாக இருக்கும் சொல்லிக்குடுங்கோ, நல்லது.
ஆனால், யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம், யுனிக்கோட், பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?
6 அங்கங்கள் எழுதினா பிறகு எதிர்ப்புத் தெரிவிப்பதாக சொல்லுறீங்கள். நீங்கள் சில அங்கங்களில் நல்ல விடயங்கள் சொல்லி இருக்குறீங்கள் இல்லை எண்டு சொல்லவில்லை. ஆனால் அந்த நல்ல கருத்துக்கள் பொறுக்கு எடுக்கப்பட்டு மேற்கொண்டு கருத்தாடல் விவாதங்களிற்கு வழிவகுத்தா? உதாரணத்துக்கு ஒரு ******** யாவது உங்கள் 6 பகுதிகளில் இருந்து 1 கருப்பொருளை பொறுக்கி எடுத்து அது சார்பாக கருத்து வைத்தா?
உங்களுக்கு தனிமடலில் போட்டதை திருப்பியும் சொல்லுகிறேன். <i>நான் உங்களில் ஒருவராக சமனாகத்தான் கருத்தாட முயல்கிறேன்.
மட்டம் தட்டுவது சுயமரியாதை இல்லாமல் தனக்கு அது தெரியாது இது தெரியாது நீங்கள் பெரியமனிதர் சொல்லுங்கோ கேக்கிறம் என்று தன்னை தாழ்த்தி கதைப்பவர்களிற்கு சுறணைவர வேண்டும் என்று.
தனிநபர் தாக்குதல் செய்வது மற்றவர்களின் அறியாமை வைத்து தனது சுயவரட்டு கொளரவத்துக்கு தீனி போடுபவர்களிற்கு.</i>
புலத்தில் (மேற்குலகில்) கவனித்துப்பாருங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து white colar வேலை செய்பவர்களுக்குதான் நாட்டு நடப்பு உலக விவகாரங்கள் தெரியும் என்றில்லை. முடி வெட்டுபவர்க்கும் அரசியல் பேசத் தெரியும் பேரூந்து ஓட்டுநரும் பொருளாதாரம் பற்றி தயக்கமின்றி கருத்துக் கூறவார். அவர்கள் தங்களைத்தாங்களே சிறுமைப்படுத்தி "ஓ நாங்கள் பள்ளிக்கூடம் பல்கலைக்கழகம் போய் பெரிய படிப்பு படிக்கவில் சும்மா blue colar வேலை தானே செய்யிறம்" என்று தங்களை தாங்களே அவமதிப்பதில்லை. எங்களுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் விளங்காது, தொழில்நுட்பம் வரவே வராது, வேற்று மொழி தெரியாது படிக்கவும் மாட்டம், திரை, தொடர்நாடகம், கால்பந்து பற்றித்தான் கதைக்கத் தெரியும் என்று ஒதுங்குவதில்லை. நாலுபோர் படிச்சவை, மெழியாக்கம் செய்வினம் அவையின்ரை ******* கயிறென்று பிடிச்சு மேலே ஏறப்போகிறம் எண்டு ஏமாளிகளாக இருக்கிறதில்லை.
*****களஉறுப்பினர்களை தாக்கும் வகையில் இருந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது = யாழினி

