11-01-2005, 03:02 PM
ஆரம்பத்தில் களம் புலத்துப்படைப்பாளிகள் (ஈழத்தில் வாழ்ந்து முதிர்ந்த மொழி அறிவுடையோர் பலர்) என்போராலும் அவர்கள் சார்ந்தோராலும் மட்டுமே கருத்தாடலுக்கு என்று பயன்படுத்தப்பட்டு வந்தது...! இன்று பல தரப்பட்டவர்களும்...நிகழகால படைப்பாளிகள் அல்லாதோரும்.. இளையவர்களும் களமெங்கும் நிறைந்திருக்கிறார்கள்..! அவர்களிடம் பல வேறுபட்ட திறமைகளும் படைப்பாற்றலும் ஊக்கமும் இருக்கிறன...! பலரிடம் மொழி வளப்பிரச்சனை இருக்கிறது..! அது மட்டுமன்றி அந்நிய சூழலுக்குள் பிறமொழி கட்டாய ஆதிக்கத்துள் வாழும் இளையவர்கள் தங்களால் இயன்ற அளவு தமிழில் ஆர்வத்தோடு கருத்தாட வந்திருப்பதும்..தமது சுய படைப்புக்களைத் தருவதும் வரவேற்கப்பட வேண்டிய விடயம்..! அதில் கருத்தியல் ஆழம் இல்லாமல் இருக்கலாம்...அல்லது இருக்கலாம்.. அது இரண்டாம் பட்சம்..ஆனால் அவர்களுக்கான மொழிப் பயன்பாட்டுக்கு இக்களம் வழிவகுக்கிறது..இங்கு சிலரின் கருத்துப்படி பார்த்தால் பள்ளியில் வெறும் உயர்தர வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் மிகுதி வகுப்புக்கள் தங்களை தரக்குறைவாக்குகிறது என்பதாக.. நகைப்புக்கு இடமாக இருக்கிறது..! இக்களம் பல்சுவைக்களம் என்பதிலும் பல்லார்வக்காரர்களையும் உள்வாங்கும் களம்..அதன் மூலம் பலதரப்பட்டவரிடமும் இருக்கும் பல்வேறு திறமைகள் தாய் மொழியில் வெளிக்கொணரப்பட உதவும் களம்..!
ஆரம்ப காலத்தில் இருந்து அரட்டைக் காலம் வரை இக்களத்தை அவதானித்து வந்திருக்கின்றோம்..! ஆரம்ப காலத்தில் படைப்பாளிகளிடம் கருத்தியல் போட்டி பொறாமை இருந்தது..! அப்போதும் தனி நபர் வசைபாடல்கள் இருந்தது..! மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் பக்குவம் இருக்கவில்லை..! இன்றும் சிந்தனை புரட்சி சீர்திருத்தம் என்று வைக்கப்படுவதை அப்படியே மற்றவர்கள் ஏற்க வேண்டும்...அதில் மற்றவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற ஒரு கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது..! இவை அவசியமில்லாத அழுத்தங்களை கருத்தாளர்கள் மீது திணிக்கிறது..! யாழ் களத்தின் நோக்கம் மொழி வளப்பயன்பாடும்...அதன் மூலமான கருத்துப் பிறப்பாக்கலும்.. உள்வாங்கலும் என்பதாகவே இருக்க முடியும்..! எனவே பலதரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு நல்ல மொழி நடையை வளர்த்துக் கொண்டு..தங்கள் பாணியில் அனுமதிக்கப்பட்ட அளவில் தங்கள் சுய ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர இக்களத்தைப் பயன்பட்டுத்தின் அதுவே இக்களத்தின் சமூகத்துக்கான சரியான பங்களிப்பாக இருக்க முடியும்..!
இங்கு முன்வைக்கப்படுவதில் மாக்சியமும் சோசலிசமும் முதலாளித்துவமும்...பாலியல் சுதந்திரமும் பெண்களும் என்பது போன்ற... பழைய பாடசாலை விவாதத் தலைப்புகள்..புதிய புதிய வடிவங்களில் இங்கு வைக்கப்பட்டு அவை புதிய சிந்தனைகளாக சித்தரிக்கப்படுகின்றன..! அதற்குள் இளையவர்கள் நுழைந்து கருத்தாட வேண்டும் என்றும் கோரப்படுகின்றன..! புலம் சரி தாயகம் சரி இன்று பெருமளவு பாலியல் விடயங்கள் இருபாலாராலும் சர்வசாதாரணமாக பகிரப்படுகின்றன..! அதற்கான தெளிவு பெறப்பட்டே வருகிறது..! அத்தோடு அவைக்கான வரையறைகளும் அமுலாக்கத்தில் இருக்கின்றன..! இவற்றை இன்று இளையவர்கள் தெளிவாக அந்திருப்பதால் இவ்வாறான விவாதங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்யாமல்...தங்கள் ஆற்றல்களுக்கு மொழி வளர்ச்சிக்கு அவசியமான எளிமையான மற்றும் மன மகிழ்ச்சிக்குரிய விடயங்களில் தங்களின் பங்களிப்பாக வழங்க முனைகின்றனர்..! இவை வரவேற்கப்பட வேண்டும்..! இன்றேல்..அவர்கள் வேற்று மொழித் தளங்களில் உள்ள கருத்தாடும் சுதந்திரத்தால் ஈர்க்கப்பட்டு அங்கு தங்களை ஈடுபடுத்தவே பெரிதும் முனைவர்....!
அடுத்து ஒரு முக்கிய விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.. இக்களத்தில் சிலர் வந்தது முதல் மற்றைய கள உறுப்பினர்களை தனிப்பட ஆராய்வதிலும் அவர்களின் கருத்துக்களுக்கு பதில் கூறமுடியாத போது தங்களின் கற்பனைக்குள் உருவாகும் தனிநபர் தோற்றங்களை கருத்தாக செருகுவதும் தொடர்கிறது..! அநாவசியமாக மட்டுறுத்தினர்கள் மற்றும் கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சிலர் களத்தின் மீது குற்றம் சுமத்த முனைவது அவர்களின் எண்ணங்களில் உண்மையான கருத்துச் செதுக்கல் மற்றும் வழங்கலுக்கு அப்பால் கருத்தாதிக்க எண்ணமே ஊன்றி இருக்கிறது..என்பதையே காட்டுகிறது..!
இதற்காக தங்கள் கல்வியியல் மற்றும் இதர பின்னணிகளை வெளிப்படையாக்கி தாங்கள் சமூகத்தில் படிக்கும் சமூகம்..தாங்கள் சொல்வது சரி என்பதாகக் காட்டி கருத்துக்களை கட்டாய உள்வாங்களுக்கு வலியுறுத்துகின்றனர்..! எங்கள் சமூகத்தில் உள்ள குறைப்பாட்டில் இதுவும் ஒன்று.. பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் சொல்லிவிட்டால்..அது வேதவாக்கு என்று எண்ணி மந்தைகள் போல அதை பிந்தொடர்வது..! எந்த ஒரு விடயத்தையும் தெளிவாக சுய ஆய்வுக்கு உட்படுத்தி உள்வாங்கும் திறமையை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்..! குழுக்களின் அல்லது தனிநபர்களின் சிந்தனைகளை அப்படியே உள்வாங்க வேண்டும் என்பது அவசியமில்லை..! அந்தவகையில் கருத்துக்களம் ஒரு விடயம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களையும் வெளிக் கொணர்கிறது..! அதை அனைவரும் பக்குவமாக ஏற்று தங்களுக்கு அவசியமானதை எடுத்துக் கொள்வதும்..சுட்டிக்காட்டுவதும் சிறந்ததாகும்..அதை விடுத்து களத்தை தனிநபர்களை குற்றம் சாட்டுவது தங்கள் எதிர்பார்ப்பு நடக்காத ஏமாற்றத்துக்கு பழிதீர்ப்பது போன்றது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆரம்ப காலத்தில் இருந்து அரட்டைக் காலம் வரை இக்களத்தை அவதானித்து வந்திருக்கின்றோம்..! ஆரம்ப காலத்தில் படைப்பாளிகளிடம் கருத்தியல் போட்டி பொறாமை இருந்தது..! அப்போதும் தனி நபர் வசைபாடல்கள் இருந்தது..! மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் பக்குவம் இருக்கவில்லை..! இன்றும் சிந்தனை புரட்சி சீர்திருத்தம் என்று வைக்கப்படுவதை அப்படியே மற்றவர்கள் ஏற்க வேண்டும்...அதில் மற்றவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற ஒரு கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது..! இவை அவசியமில்லாத அழுத்தங்களை கருத்தாளர்கள் மீது திணிக்கிறது..! யாழ் களத்தின் நோக்கம் மொழி வளப்பயன்பாடும்...அதன் மூலமான கருத்துப் பிறப்பாக்கலும்.. உள்வாங்கலும் என்பதாகவே இருக்க முடியும்..! எனவே பலதரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு நல்ல மொழி நடையை வளர்த்துக் கொண்டு..தங்கள் பாணியில் அனுமதிக்கப்பட்ட அளவில் தங்கள் சுய ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர இக்களத்தைப் பயன்பட்டுத்தின் அதுவே இக்களத்தின் சமூகத்துக்கான சரியான பங்களிப்பாக இருக்க முடியும்..!
இங்கு முன்வைக்கப்படுவதில் மாக்சியமும் சோசலிசமும் முதலாளித்துவமும்...பாலியல் சுதந்திரமும் பெண்களும் என்பது போன்ற... பழைய பாடசாலை விவாதத் தலைப்புகள்..புதிய புதிய வடிவங்களில் இங்கு வைக்கப்பட்டு அவை புதிய சிந்தனைகளாக சித்தரிக்கப்படுகின்றன..! அதற்குள் இளையவர்கள் நுழைந்து கருத்தாட வேண்டும் என்றும் கோரப்படுகின்றன..! புலம் சரி தாயகம் சரி இன்று பெருமளவு பாலியல் விடயங்கள் இருபாலாராலும் சர்வசாதாரணமாக பகிரப்படுகின்றன..! அதற்கான தெளிவு பெறப்பட்டே வருகிறது..! அத்தோடு அவைக்கான வரையறைகளும் அமுலாக்கத்தில் இருக்கின்றன..! இவற்றை இன்று இளையவர்கள் தெளிவாக அந்திருப்பதால் இவ்வாறான விவாதங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்யாமல்...தங்கள் ஆற்றல்களுக்கு மொழி வளர்ச்சிக்கு அவசியமான எளிமையான மற்றும் மன மகிழ்ச்சிக்குரிய விடயங்களில் தங்களின் பங்களிப்பாக வழங்க முனைகின்றனர்..! இவை வரவேற்கப்பட வேண்டும்..! இன்றேல்..அவர்கள் வேற்று மொழித் தளங்களில் உள்ள கருத்தாடும் சுதந்திரத்தால் ஈர்க்கப்பட்டு அங்கு தங்களை ஈடுபடுத்தவே பெரிதும் முனைவர்....!
அடுத்து ஒரு முக்கிய விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.. இக்களத்தில் சிலர் வந்தது முதல் மற்றைய கள உறுப்பினர்களை தனிப்பட ஆராய்வதிலும் அவர்களின் கருத்துக்களுக்கு பதில் கூறமுடியாத போது தங்களின் கற்பனைக்குள் உருவாகும் தனிநபர் தோற்றங்களை கருத்தாக செருகுவதும் தொடர்கிறது..! அநாவசியமாக மட்டுறுத்தினர்கள் மற்றும் கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சிலர் களத்தின் மீது குற்றம் சுமத்த முனைவது அவர்களின் எண்ணங்களில் உண்மையான கருத்துச் செதுக்கல் மற்றும் வழங்கலுக்கு அப்பால் கருத்தாதிக்க எண்ணமே ஊன்றி இருக்கிறது..என்பதையே காட்டுகிறது..!
இதற்காக தங்கள் கல்வியியல் மற்றும் இதர பின்னணிகளை வெளிப்படையாக்கி தாங்கள் சமூகத்தில் படிக்கும் சமூகம்..தாங்கள் சொல்வது சரி என்பதாகக் காட்டி கருத்துக்களை கட்டாய உள்வாங்களுக்கு வலியுறுத்துகின்றனர்..! எங்கள் சமூகத்தில் உள்ள குறைப்பாட்டில் இதுவும் ஒன்று.. பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் சொல்லிவிட்டால்..அது வேதவாக்கு என்று எண்ணி மந்தைகள் போல அதை பிந்தொடர்வது..! எந்த ஒரு விடயத்தையும் தெளிவாக சுய ஆய்வுக்கு உட்படுத்தி உள்வாங்கும் திறமையை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்..! குழுக்களின் அல்லது தனிநபர்களின் சிந்தனைகளை அப்படியே உள்வாங்க வேண்டும் என்பது அவசியமில்லை..! அந்தவகையில் கருத்துக்களம் ஒரு விடயம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களையும் வெளிக் கொணர்கிறது..! அதை அனைவரும் பக்குவமாக ஏற்று தங்களுக்கு அவசியமானதை எடுத்துக் கொள்வதும்..சுட்டிக்காட்டுவதும் சிறந்ததாகும்..அதை விடுத்து களத்தை தனிநபர்களை குற்றம் சாட்டுவது தங்கள் எதிர்பார்ப்பு நடக்காத ஏமாற்றத்துக்கு பழிதீர்ப்பது போன்றது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

