11-01-2005, 11:16 AM
எல்லோருடய கருத்துக்கும் நன்றி,
இங்கே நான் சொல்ல வந்தது கொன்ச்சம் வித்தியாசமா விளங்கப் பட்டுள்ளது போல் உள்ளது. நான் நகச்சுவைப் பகுதயையோ அல்லது அரட்டயய்யோ மூடிவிட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் எழுதியதைக் கவனித்திருந்தீர்கள் என்றால் நான் 'மட்டும்' என்ற வார்தைப் பிரயோகத்தை பாவித்துள்ளேன்.இங்கே குறுக்கால போவனின் கோவம் எங்கிருந்து வருகிறது என்பதற்கான காரணத்திச் சொல்வதே எனது நோக்கமாக இருந்தது.அதற்காகவே இந்தக் களம் இயங்கும் நோக்கம்,முறமை பற்றி அவருக்கு எழுதினேன்.இது அவர் எதிர் பார்ப்பதைப் போன்ற நோக்கங்ககளுக்காக மட்டும் நடக்கவில்லை என்பதையே அவ்வறு எழுதினேன்.இங்கே பலரும் பலவித தேவைகளை நிவர்த்தி செய்ய வருகின்றனர்.அவர் அவர் அவர்களுக்கு விருப்பமான பகுதியில் வந்து பார்த்து விட்டு எழுதி விட்டுப் போகின்றனர்.அதில் பொழுது போக்குப் பகுதியே முகியமாக சினிமாவும் அரட்டயுமே அதிக பாவனைக்கு உள்ளாகின்றது.
குருக்ஸ் இனின் கருத்து களத்தின் நோக்கம் ஒரு ஜனரஞ்ஞகமான ஊடகமா களம் இருக்க வேண்டுமா .அல்லது ஒரு நோக்குடன் ஒரு கொள்கையுடன் இருக்க வேண்டுமா என்பதுவே.
தெரியாததைத் தெரியும் இடமா அல்லது பொழுதுபோக்குக்கா என்பதுவே இங்கே உள்ள முரண்பாடு.இரண்டுக்கும் என்பதுவே பொதுவான கருத்தாக இருக்கிறது.ஆனால் சில வேளைகளில் இந்த இரண்டு நோக்கம் முரண்படுகிறது.
உதாரணத்திற்கு அதிகம் பதில் எழுதப் படும் அரட்டயோ அன்றி ஒரு சினிமா நடிகையின் படம் போட்ட தலைப் போ தான் அதிகம் பேர் எழுதுவதனால் மேலே வருகிறது.அதனால் பிரயோசனமான விடயங்களை நேரம் மினக்கட்டு எழுதி ஒருத்தரும் பாக்காமல் அது கீழே போய் விடுகிறது.இங்கிருப்பவருக்கு இதில் நாட்டம் இல்லை என்று அவரும் தொடர்ந்து அவ்வாறனவற்றை எழுதாமல் விடுகிறார்.அப்படியே களம் மீண்டும் சினிமாவுக்குளும்,அரட்டைக்குள்ளும் அமிழ்ந்து விடுகிறது.
இப்படியான நல்ல விசயங்கள் அமிழ்ந்து விடுவதே அவரின் கோவத்திற்குக் காரணம் என்று நினைகிறேன்.
மற்றும் ஒரு சில மட்டுறுத்தினர் பக்கச் சார்பாக பிரச்சினைகளை தீர்க்காமல் அணி சேர்ப்பதுவும்,தம்மிடம் ஆயுதம் உண்டென்று விலாசம் காடுவதும் (இதைப் பல இடங்களில் காணலாம்,தாம் ஆயுதக் கடை வைத்திருக்கம் என்று சொல்லித் திரிவதும்)அணி சார்ந்தவர்களைப் பாதுகாப்பதுவும் ,முகமூடி போட்டுக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதராவக் எழுதும் படி மற்றவ்ர்களைத் தூண்டுவதும் அண்மயில் சினேகாவின் படப் பிரச்சினயில் நான் அவதானித்த விடயங்கள்.இது களத்தின் சினிமாப் பகுதியில் 'அசின்னின் படத் தலைப்புக்குள் நடந்தது.இவற்றைப் பாக்கும் போது இவருக்கு மட்டுறுத்தினர் ஆவதற்கான் தகுதி எவ்வாறு வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
இறுதியில் எனது தனிப்பட்ட கருத்து ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு நோக்கம்,பின் புலம் இருக்கு.எல்லோரும் புகை பிடிப்பதை ,மது அருந்துவதை,போதைப் பொருள் பாவிப்பதை விரும்புவர்.அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக இவற்றை வழங்குவதா அல்லது சமுதாய உணர்வுடன் இவற்றைத் தடை செய்து, அல்லது குறைத்து ஆரோக்கியமான விடயங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பதா என்பதுவே கள நிர்வாகத்தின் முன் உள்ள தெரிவு. நான் இங்கே எழுதுவது பலருக்கு விருப்பம் இல்லை விளங்க இல்லைப் போல் உள்ளது அதலால் எனது நேரத்தை வேறு பயன் உள்ள வழிகளில் செலவழிக்கலாம் என்று நினத்துள்ளேன் . நேரம் வரும் போது அரட்டைகளிலும்,படம் போடுவத்திலும் அல்லது வெட்டி ஒட்டுவதிலும் செலவழிக்கிறேன்.
பொருள்முதல் வாதம் விளங்கக் கஸ்ட்டம் தான் ஆனா அசினின் படத்தைப் பார்த்து ஜொள்ளு விடுவது அலாதியானது தான் ஆனா அவர் அப்படியே வாழ் நாள் முழுவதும் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருப்பார்.மற்றவர்கள் எங்கோ போய் விடுவர்.அறிவுத் தேடல் இல்லாத இடத்தில் வளர்ச்சி எங்கே?உலகம் வளராதவர்களுக்கக நின்று விடுவதில்லை.இது தனி நபர்களுக்கும் பொருந்தும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் பொருந்தும்.
அனைவருக்கும் நன்றி.
இங்கே நான் சொல்ல வந்தது கொன்ச்சம் வித்தியாசமா விளங்கப் பட்டுள்ளது போல் உள்ளது. நான் நகச்சுவைப் பகுதயையோ அல்லது அரட்டயய்யோ மூடிவிட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் எழுதியதைக் கவனித்திருந்தீர்கள் என்றால் நான் 'மட்டும்' என்ற வார்தைப் பிரயோகத்தை பாவித்துள்ளேன்.இங்கே குறுக்கால போவனின் கோவம் எங்கிருந்து வருகிறது என்பதற்கான காரணத்திச் சொல்வதே எனது நோக்கமாக இருந்தது.அதற்காகவே இந்தக் களம் இயங்கும் நோக்கம்,முறமை பற்றி அவருக்கு எழுதினேன்.இது அவர் எதிர் பார்ப்பதைப் போன்ற நோக்கங்ககளுக்காக மட்டும் நடக்கவில்லை என்பதையே அவ்வறு எழுதினேன்.இங்கே பலரும் பலவித தேவைகளை நிவர்த்தி செய்ய வருகின்றனர்.அவர் அவர் அவர்களுக்கு விருப்பமான பகுதியில் வந்து பார்த்து விட்டு எழுதி விட்டுப் போகின்றனர்.அதில் பொழுது போக்குப் பகுதியே முகியமாக சினிமாவும் அரட்டயுமே அதிக பாவனைக்கு உள்ளாகின்றது.
குருக்ஸ் இனின் கருத்து களத்தின் நோக்கம் ஒரு ஜனரஞ்ஞகமான ஊடகமா களம் இருக்க வேண்டுமா .அல்லது ஒரு நோக்குடன் ஒரு கொள்கையுடன் இருக்க வேண்டுமா என்பதுவே.
தெரியாததைத் தெரியும் இடமா அல்லது பொழுதுபோக்குக்கா என்பதுவே இங்கே உள்ள முரண்பாடு.இரண்டுக்கும் என்பதுவே பொதுவான கருத்தாக இருக்கிறது.ஆனால் சில வேளைகளில் இந்த இரண்டு நோக்கம் முரண்படுகிறது.
உதாரணத்திற்கு அதிகம் பதில் எழுதப் படும் அரட்டயோ அன்றி ஒரு சினிமா நடிகையின் படம் போட்ட தலைப் போ தான் அதிகம் பேர் எழுதுவதனால் மேலே வருகிறது.அதனால் பிரயோசனமான விடயங்களை நேரம் மினக்கட்டு எழுதி ஒருத்தரும் பாக்காமல் அது கீழே போய் விடுகிறது.இங்கிருப்பவருக்கு இதில் நாட்டம் இல்லை என்று அவரும் தொடர்ந்து அவ்வாறனவற்றை எழுதாமல் விடுகிறார்.அப்படியே களம் மீண்டும் சினிமாவுக்குளும்,அரட்டைக்குள்ளும் அமிழ்ந்து விடுகிறது.
இப்படியான நல்ல விசயங்கள் அமிழ்ந்து விடுவதே அவரின் கோவத்திற்குக் காரணம் என்று நினைகிறேன்.
மற்றும் ஒரு சில மட்டுறுத்தினர் பக்கச் சார்பாக பிரச்சினைகளை தீர்க்காமல் அணி சேர்ப்பதுவும்,தம்மிடம் ஆயுதம் உண்டென்று விலாசம் காடுவதும் (இதைப் பல இடங்களில் காணலாம்,தாம் ஆயுதக் கடை வைத்திருக்கம் என்று சொல்லித் திரிவதும்)அணி சார்ந்தவர்களைப் பாதுகாப்பதுவும் ,முகமூடி போட்டுக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதராவக் எழுதும் படி மற்றவ்ர்களைத் தூண்டுவதும் அண்மயில் சினேகாவின் படப் பிரச்சினயில் நான் அவதானித்த விடயங்கள்.இது களத்தின் சினிமாப் பகுதியில் 'அசின்னின் படத் தலைப்புக்குள் நடந்தது.இவற்றைப் பாக்கும் போது இவருக்கு மட்டுறுத்தினர் ஆவதற்கான் தகுதி எவ்வாறு வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
இறுதியில் எனது தனிப்பட்ட கருத்து ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு நோக்கம்,பின் புலம் இருக்கு.எல்லோரும் புகை பிடிப்பதை ,மது அருந்துவதை,போதைப் பொருள் பாவிப்பதை விரும்புவர்.அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக இவற்றை வழங்குவதா அல்லது சமுதாய உணர்வுடன் இவற்றைத் தடை செய்து, அல்லது குறைத்து ஆரோக்கியமான விடயங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பதா என்பதுவே கள நிர்வாகத்தின் முன் உள்ள தெரிவு. நான் இங்கே எழுதுவது பலருக்கு விருப்பம் இல்லை விளங்க இல்லைப் போல் உள்ளது அதலால் எனது நேரத்தை வேறு பயன் உள்ள வழிகளில் செலவழிக்கலாம் என்று நினத்துள்ளேன் . நேரம் வரும் போது அரட்டைகளிலும்,படம் போடுவத்திலும் அல்லது வெட்டி ஒட்டுவதிலும் செலவழிக்கிறேன்.
பொருள்முதல் வாதம் விளங்கக் கஸ்ட்டம் தான் ஆனா அசினின் படத்தைப் பார்த்து ஜொள்ளு விடுவது அலாதியானது தான் ஆனா அவர் அப்படியே வாழ் நாள் முழுவதும் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருப்பார்.மற்றவர்கள் எங்கோ போய் விடுவர்.அறிவுத் தேடல் இல்லாத இடத்தில் வளர்ச்சி எங்கே?உலகம் வளராதவர்களுக்கக நின்று விடுவதில்லை.இது தனி நபர்களுக்கும் பொருந்தும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் பொருந்தும்.
அனைவருக்கும் நன்றி.

