11-01-2005, 10:16 AM
யாழ் களம் சிந்தனைக்கு இடம்கொடுப்பதாய் வளர் போக்கிற்கு வழிசமைப்பதாய் இருக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் குறுக்காலைபோவான் இப்படி எழுதியிருக்கிறார் என்று புரிந்து கொள்கிறேன்.சாதாரணமாக களத்தின் போக்கில் அக்கறை கொண்ட எவருக்குமே எழும் அக்கறை இது.
ஆனால் விமர்சன நோக்கில் குறுக்காலை போவானின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.ஒரு பல்சுவைக் களம் என்ற ரீதியில் நகைச்சுவை அரட்டையில் இருந்து தத்துவச் சிந்தனை வரையிலும் அவை அவற்றிற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் வாதிடுதல் நிகழ் வேண்டும் அப்போதுதான் களம் சமானமாகச் செல்லும்.தனித்த அரட்டையும் வாழ்வுக்குதவாது.உணர்வுத்தளத்தைத் தொடாத சிந்தனைகளும் வளமான வாழ்க்கைக்கு உதவாது.
ஆனால் கள உறவுகள் இரண்டினதும் தேவையைச் சரியாகப் புரிந்துகொண்டு இரண்டையுமே வளர்த்தெடுக்கவேண்டும் என்பதை சக உறிஉப்பினனானக வேண்டிக்கொள்கிறேன்.தனியே அரட்டையில் மட்டும் காலங்கடத்தாது சமூகத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய விடயங்களிலும் கவனஞ் செலுத்துங்கள்.
முக்கியமாக ஈழத்திலும் புலத்திலும் வெளிவரும் நூல்கள்.மற்றும் நீங்கள் படித்த நூல்கள்,பார்த்த ஆங்கில,தமிழ்,பிறமொழித் திரைப்படங்கள்,குறும்படங்கள்,உங்களுக்குப் பிடித்த ஓவியங்கள் கலைகள் பற்றியோ
அல்லது முகத்தார் சொன்னது போன்ற அருகி வரும் எம் தேசத்துக் கலைகள் பற்றியே இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.ஒப்பீட்டளவில் அவ்பற்றுக்கான பக்கங்கள் குறைந்தளவு பயனீட்டாளரைக் கொண்டிருப்பதாகப் படுகிறது ஏனிந்த சிந்தனை வெறுமை.
அதே போன்று அரட்டையே அடித்தாலும் ஜொள்ளு,ஜோக்கு,லொள்ளு போன்ற அழகு தமிழ்ப் பிரயோகங்களை விட்டுவிடலாமே.அதே பொருள் தரும் தமிழ்ச் சொல் இருக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே.
ஒருவர் ஒருவரைக் குறை சொல்வதை விடுத்து.எம்மிலிருந்தே ஆரம்பிப்போம்
ஆனால் விமர்சன நோக்கில் குறுக்காலை போவானின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.ஒரு பல்சுவைக் களம் என்ற ரீதியில் நகைச்சுவை அரட்டையில் இருந்து தத்துவச் சிந்தனை வரையிலும் அவை அவற்றிற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் வாதிடுதல் நிகழ் வேண்டும் அப்போதுதான் களம் சமானமாகச் செல்லும்.தனித்த அரட்டையும் வாழ்வுக்குதவாது.உணர்வுத்தளத்தைத் தொடாத சிந்தனைகளும் வளமான வாழ்க்கைக்கு உதவாது.
ஆனால் கள உறவுகள் இரண்டினதும் தேவையைச் சரியாகப் புரிந்துகொண்டு இரண்டையுமே வளர்த்தெடுக்கவேண்டும் என்பதை சக உறிஉப்பினனானக வேண்டிக்கொள்கிறேன்.தனியே அரட்டையில் மட்டும் காலங்கடத்தாது சமூகத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய விடயங்களிலும் கவனஞ் செலுத்துங்கள்.
முக்கியமாக ஈழத்திலும் புலத்திலும் வெளிவரும் நூல்கள்.மற்றும் நீங்கள் படித்த நூல்கள்,பார்த்த ஆங்கில,தமிழ்,பிறமொழித் திரைப்படங்கள்,குறும்படங்கள்,உங்களுக்குப் பிடித்த ஓவியங்கள் கலைகள் பற்றியோ
அல்லது முகத்தார் சொன்னது போன்ற அருகி வரும் எம் தேசத்துக் கலைகள் பற்றியே இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.ஒப்பீட்டளவில் அவ்பற்றுக்கான பக்கங்கள் குறைந்தளவு பயனீட்டாளரைக் கொண்டிருப்பதாகப் படுகிறது ஏனிந்த சிந்தனை வெறுமை.
அதே போன்று அரட்டையே அடித்தாலும் ஜொள்ளு,ஜோக்கு,லொள்ளு போன்ற அழகு தமிழ்ப் பிரயோகங்களை விட்டுவிடலாமே.அதே பொருள் தரும் தமிழ்ச் சொல் இருக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே.
ஒருவர் ஒருவரைக் குறை சொல்வதை விடுத்து.எம்மிலிருந்தே ஆரம்பிப்போம்
\" \"

