10-31-2005, 07:03 PM
பிருந்தன், நித்திலா
இது ஓர் நகைச்சுவை கலந்த ஆரோக்கியமான போட்டிதான். கோபப்படுவதற்கோ, ஆட்சேபிப்பதற்கோ உள்ள கருத்துக்கள் அல்ல. "அத்தனையும் உண்மைகள்". அதனைத்தான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். ஏன் சீட்டு என்றதும் பிருந்தன் அதிகமாகக் கோபிக்கிறார்? எத்தனையோ தெரிந்தவர்கள் இந்தச் "சீட்டு" க்கட்டி ஏமாற்றப்பட்டதை இங்கே அறிகிறேன். அப்படிப்பட்ட ஒருவர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்து இங்கே பொதுசேவைக்குள் நுழைய முயல்கிறார். அண்மையில் ஒருவர் தனது பிள்ளைக்கு 3 ஆவது அரங்கேற்றம் செய்தார். இன்னமும் செய்யப்போவதாகவே அறிகிறோம் இத்தனைக்கும் அங்கு சென்று பார்த்திருந்தால்தான் தெரிந்திருக்கும். அரங்கேறியவர் அரைவாசிகூட தயாரில்லை. அரங்கேற்றம் செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே பலருடைய பேச்சாக இருந்தது. வீணாக விரயம் செய்யும் பணத்தை வேறு நல்ல விடயங்களுக்குக் கொடுக்கலாம்தானே. உலகமெங்கும் இலங்கைத் தமிழர்களை நம்பி பலர் வாழ்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் எமக்கு ஏற்படுகின்ற துயரங்களைத் துடைக்க அவர்கள் வருவார்களா? இன்னமும் நாம் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதும் உண்மைதானே!
இது ஓர் நகைச்சுவை கலந்த ஆரோக்கியமான போட்டிதான். கோபப்படுவதற்கோ, ஆட்சேபிப்பதற்கோ உள்ள கருத்துக்கள் அல்ல. "அத்தனையும் உண்மைகள்". அதனைத்தான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். ஏன் சீட்டு என்றதும் பிருந்தன் அதிகமாகக் கோபிக்கிறார்? எத்தனையோ தெரிந்தவர்கள் இந்தச் "சீட்டு" க்கட்டி ஏமாற்றப்பட்டதை இங்கே அறிகிறேன். அப்படிப்பட்ட ஒருவர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்து இங்கே பொதுசேவைக்குள் நுழைய முயல்கிறார். அண்மையில் ஒருவர் தனது பிள்ளைக்கு 3 ஆவது அரங்கேற்றம் செய்தார். இன்னமும் செய்யப்போவதாகவே அறிகிறோம் இத்தனைக்கும் அங்கு சென்று பார்த்திருந்தால்தான் தெரிந்திருக்கும். அரங்கேறியவர் அரைவாசிகூட தயாரில்லை. அரங்கேற்றம் செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே பலருடைய பேச்சாக இருந்தது. வீணாக விரயம் செய்யும் பணத்தை வேறு நல்ல விடயங்களுக்குக் கொடுக்கலாம்தானே. உலகமெங்கும் இலங்கைத் தமிழர்களை நம்பி பலர் வாழ்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் எமக்கு ஏற்படுகின்ற துயரங்களைத் துடைக்க அவர்கள் வருவார்களா? இன்னமும் நாம் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதும் உண்மைதானே!

