10-31-2005, 04:00 PM
Michael Palin தனது பயண அனுபவத்தில் கவனித்ததாக கூறிய ஒன்று: சீனாவில் தனது படப்பிடிப்புக் குழுவோடு நடமாடிய பொழுது தங்களைச்சுற்றி விடுப்புப் பாக்கிற கூட்டம் கூடவில்லை. எல்லோரும் தத்தமது வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் போகுமிடமெல்லாம் விடுப்புப்பாக்கிற கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்ததாம்.
இந்தியாவில் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் இருக்கவில்லை. எமது பலவீனம் அது. விடுப்புப் பாக்கிறது தெருக்கூத்தை ரசிக்கிறது விசிலடிச்சு குசுகுசுத்துப்போட்டு போறது எங்களுக்கு அபிமானப் பொழுது போக்கு.
பலவீனத்தை (பொறுப்பற்ற நடத்தையை) நிவர்த்தி செய்ய விதிமுறைகள் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். சிறுவருக்கு உகந்த களமாக பயனுள்ள தளமாக இருக்க விரும்பிற இடத்தில் ஆபாசம் கவர்ச்சி மாத்திரம் தான்தடை செய்யப்படவேண்டியதல்ல.
இணையத்திற்கு முன்னர் கிடைத்த தொழில் நுட்பமான தொலைக்காட்சியை எடுத்தால் என்ன சாதித்துள்ளோம்? திரைப்படங்கள் நாடகங்கள் என்ற குப்பைகளை எம்மீது கொட்டத்தான் பயன்படுத்தியுள்ளோம். எத்தனை அறிவியல் தொழில்நுட்பம் விஞ்ஞானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் தமிழ் தொலைக்காட்சிகளில்? சொந்தமாக தயாரிக்காவிட்டாலும் எத்தனை ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை குறைந்த பட்ச்சம் மொழிப்பெயர்பாவது செய்து தன்னும் போடுகிறார்கள்? ஒரு நாளின் அல்லது ஒருவாரத்திற்கான வான் அலை நேரங்களில் ஒவ்வொரு தமிழ் வானொலி தொலைக்காட்ச்சி நிலையத்தாரும் எத்தனை வீதத்தை திரை, சின்னத்திரை குப்பைகள் அற்ற சிகழ்ச்சிகளிற்கு ஒதுக்குகிறார்கள்.
இன்று தமிழ் இணையத்தளங்களை எடுத்தால் பொரும்பாலானவை என்ன வழங்குகிறார்கள்?
திரைப்பாடல்கள், திரை நடிகர் நடிகைகளின் படங்கள், அவர்கள் சார்ந்த செய்திகள், கவிதை, நகச்சுவை, அரட்டை. ஏதோ பொறுப்புள்ள தளமாக காட்டிக் கொள்ள 100...200 தளங்கள் 2..3 மூலத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை வெட்டி ஒட்டிக் கொள்கின்றன.
சொந்தமாக ஆக்கபூர்வமாக என்ன பயன்தரக்கூடிய வகையில் என்ன content அய் உருவாக்கியிருக்கிறார்கள் தமிழ் இணையத்தளப் பயன் பாட்டில்?
இணையத் தொழில்நுட்பத்தினூடாக தகவல்களை இலகுவாகவும் துரிதமாகவும் பரிமாறிக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் எவ்வாறு யாழ்களத்தில் பெரும்பாலும் செலவிடும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்?
எல்லோருக்கும் படிப்பு வேலை குடும்பம் என பல பொறுப்புக்கள் மத்தியில் இணையத்திற்கு, யாழிற்கு வரக் கிடைக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது எமது மேல் கூறிய பலவீனம் காரணமாக எம்மை இணைக்கும் களவிதிகளாலும் கட்டுப்படுத்தப்படவேண்டும். பொதுவாக தெருக்கூத்தை ரசித்து விசிலடித்துவிட்டு போவதற்கு ஊக்குவிப்பு தேவையில்லை. சிறுவர்களும் குளந்தைகளுக்கும் 24 மணத்தியாலங்களும் 7 நாளும் அனுமதித்தால் அதைத்தான் செய்யவிரும்புவார்கள்.
யாழ்களத்தில் தெருக்கூத்தை அனுமதிப்பது மனித உரிமை அடிப்படையில் நியாமாக இருக்கலாம் ஆனால் எமது பலவீனத்தின் நோக்கில் பார்க்கும் போது அது ஆரோக்கியமானதா?
இந்தியாவில் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் இருக்கவில்லை. எமது பலவீனம் அது. விடுப்புப் பாக்கிறது தெருக்கூத்தை ரசிக்கிறது விசிலடிச்சு குசுகுசுத்துப்போட்டு போறது எங்களுக்கு அபிமானப் பொழுது போக்கு.
பலவீனத்தை (பொறுப்பற்ற நடத்தையை) நிவர்த்தி செய்ய விதிமுறைகள் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். சிறுவருக்கு உகந்த களமாக பயனுள்ள தளமாக இருக்க விரும்பிற இடத்தில் ஆபாசம் கவர்ச்சி மாத்திரம் தான்தடை செய்யப்படவேண்டியதல்ல.
இணையத்திற்கு முன்னர் கிடைத்த தொழில் நுட்பமான தொலைக்காட்சியை எடுத்தால் என்ன சாதித்துள்ளோம்? திரைப்படங்கள் நாடகங்கள் என்ற குப்பைகளை எம்மீது கொட்டத்தான் பயன்படுத்தியுள்ளோம். எத்தனை அறிவியல் தொழில்நுட்பம் விஞ்ஞானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் தமிழ் தொலைக்காட்சிகளில்? சொந்தமாக தயாரிக்காவிட்டாலும் எத்தனை ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை குறைந்த பட்ச்சம் மொழிப்பெயர்பாவது செய்து தன்னும் போடுகிறார்கள்? ஒரு நாளின் அல்லது ஒருவாரத்திற்கான வான் அலை நேரங்களில் ஒவ்வொரு தமிழ் வானொலி தொலைக்காட்ச்சி நிலையத்தாரும் எத்தனை வீதத்தை திரை, சின்னத்திரை குப்பைகள் அற்ற சிகழ்ச்சிகளிற்கு ஒதுக்குகிறார்கள்.
இன்று தமிழ் இணையத்தளங்களை எடுத்தால் பொரும்பாலானவை என்ன வழங்குகிறார்கள்?
திரைப்பாடல்கள், திரை நடிகர் நடிகைகளின் படங்கள், அவர்கள் சார்ந்த செய்திகள், கவிதை, நகச்சுவை, அரட்டை. ஏதோ பொறுப்புள்ள தளமாக காட்டிக் கொள்ள 100...200 தளங்கள் 2..3 மூலத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை வெட்டி ஒட்டிக் கொள்கின்றன.
சொந்தமாக ஆக்கபூர்வமாக என்ன பயன்தரக்கூடிய வகையில் என்ன content அய் உருவாக்கியிருக்கிறார்கள் தமிழ் இணையத்தளப் பயன் பாட்டில்?
இணையத் தொழில்நுட்பத்தினூடாக தகவல்களை இலகுவாகவும் துரிதமாகவும் பரிமாறிக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் எவ்வாறு யாழ்களத்தில் பெரும்பாலும் செலவிடும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்?
எல்லோருக்கும் படிப்பு வேலை குடும்பம் என பல பொறுப்புக்கள் மத்தியில் இணையத்திற்கு, யாழிற்கு வரக் கிடைக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது எமது மேல் கூறிய பலவீனம் காரணமாக எம்மை இணைக்கும் களவிதிகளாலும் கட்டுப்படுத்தப்படவேண்டும். பொதுவாக தெருக்கூத்தை ரசித்து விசிலடித்துவிட்டு போவதற்கு ஊக்குவிப்பு தேவையில்லை. சிறுவர்களும் குளந்தைகளுக்கும் 24 மணத்தியாலங்களும் 7 நாளும் அனுமதித்தால் அதைத்தான் செய்யவிரும்புவார்கள்.
யாழ்களத்தில் தெருக்கூத்தை அனுமதிப்பது மனித உரிமை அடிப்படையில் நியாமாக இருக்கலாம் ஆனால் எமது பலவீனத்தின் நோக்கில் பார்க்கும் போது அது ஆரோக்கியமானதா?

