10-31-2005, 05:12 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு - அங்கம் 6</b></span>
(முகத்தார் வெளிவிறாந்தையில் பக்கத்தி வீட்டுப் பிள்ளைக்ளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார் )
பொண்ணம்மா: இங்சருங்கோ எங்கையப்பா இருக்கிறீயள்?
முகத்தார் : ஏனடியப்பா 4 வீட்டுக்கு கேக்கிற மாதிரி கத்திறீர் இஞ்சைதான் இருக்கிறன்
பொண்ணம்மா: உங்களுக்கு தலை கிலை ஏதன் கழண்டு போச்சோ சின்னப் பிள்ளைகளை வைச்சுக் கொண்டு பெம்பிளைக்கதை சொல்லிக் கொண்டிருக்கிறீயள்
முகத்தார் : அவங்கள்தான் கேட்டாங்கள் குட்டிக் கதை சொல்லச் சொல்லி அதுதான்.
பொண்ணம்மா: முந்தி வாங்கினதுகள் காணாதுபோல திரும்பவும் தொடங்கிட்டீயள் பெடியளை கலைச்சுப் போட்டு போங்கோ பாப்பம் குசினிக்கு
(முகத்தார் பிள்ளைகளை அனுப்பி விட்டு குசினிக்கு வருகிறார்)
பொண்ணம்மா: உன்னாலையப்பா கேக்கிறன் இரவு கனவிலை ஆரைக் கண்டனீயள்?
முகத்தார் : (பயந்தபடி) எல்லாம் நீதான்டியம்மா
பொண்ணம்மா: எனக்கப்பிடி தெரியலையே கனவிலை சிரிச்ச மாதிரி கிடந்திச்சு
முகத்தார் : (சமாளித்தபடி) அதுவந்து உம்மை பழைய கோலத்திலை பாத்தன் சிரிப்பு வந்திட்டுது இப்ப எப்பிடி இருக்கிறீர்
பொண்ணம்மா: (வாய்க்குள் சிரிப்புடன்) உண்மையா. . .
முகத்தார் : (நல்ல காலம் கனவிலை ஜோதிகா எண்டு பேரைச் சொல்லிச் சிரிச்சிருந்தா இண்டைக்குச் சங்குதான்)
(இந்த நேரம் வீட்டு அழைப்பு மணியடிக்குது )
முகத்தார் : மணியடிக்குது யாரோ வந்திருக்கினம் போல
பொண்ணம்மா: பின்ன தன்ரைபாட்டிலை அது அடிக்குதே போய் பாருங்கோ பாப்பம்
(முகத்தார் எழுந்து போகிறார் பொண்ணம்மாவும் பின்னால் போறா கதவைத் திறந்ததும்)
வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்
பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ
வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்
பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்
முகத்தார் : என்னடியப்பா மாடு மாதிரி வேலை செய்யிறன் என்னையே தாரை வாக்க நிக்கிறீரே உந்தா வந்தவங்கள் படலையை திறந்திட்டுப் போட்டாங்கள் சாத்திப் போட்டு வாறன்
(படலையை சாத்திய முகத்தார் றோட்டிலை இருந்த மதகில் சிறுது நேரம் இளைப்பாறுவம் எண்டு இருக்கிறார் இந்த நேரம் சின்னப்புவும் சாத்திரியும் போவது தெரிய கை தட்டி கூப்பிடுகிறார்)
முகத்தார் : என்னடாப்பா வீட்டுப்பக்கம் திரும்பிப் பாக்காமலே போறீயள்?
சின்னப்பு : இந்த நேரம் உங்கை வந்து உன்னைக் குழப்பி பொண்ணம்மாட்டை வேண்டிக் கட்ட எங்களாலை ஏலாது
சாத்திரி : இல்லை முகத்தான் ஒரு பிரச்சனை வேவின்ரை பெடிச்சுக்கு பேய் பிடிச்சிட்டுதாம் என்னை வந்து பாக்கச் சொன்னவை தனியப் போகப் பயத்திலை சின்னப்புவையும் கூட்டிட்டு போறன்
முகத்தார் : நீங்க தானே கலைக்கிற ஆட்கள் பிறகு பயப்பிட்டால் காசு கறக்கிறதுக்கு நல்ல சந்தர்ப்பம் விட்டுடாதை
சாத்திரி : சும்மா ஏத்தி விடாதை எதோ நாலு ரேகையைப் பாத்து ஆக்களிண்டை வசதியையும் வைச்சு ஒரு கணக்கிலை அள்ளிவிடுறன் அதுவும் சரியா வருகுது என்னை போய் பேய் கலையெண்டால் இரவானால் முனியம்மா இல்லாமல் வீட்டாலை இறங்க மாட்டன்
சின்னப்பு : அதுசரிதான் முனியம்மா வந்தா எந்த முனியும் கிட்ட வராதுதானே
சாத்திரி : பேய்களின்ரை வகைகளைத் தெரியாமல் சும்மா பகிடி விடுறீயள் சிலநாட்களிலை படுத்தா மூச்செடுக்க முடியாம யாரோ அமத்திற மாதிரி உங்களுக்கு நடக்கேலையோ
முகத்தார் : சாத்திரி இரவிலை சாப்பிடேக்கை ஓசிலை கிடைக்குதெண்டுட்டு கழுத்து மட்டும் தின்னப்;பிடாது அப்பிடி சாப்பிட்டா செமிக்கிறதுக்கு எங்கை இடமிருக்கு இனி சாப்பிட்டவுடனை படுக்காமல் கொஞ்சம் நடந்து திரிஞ்சுட்டுப் படுத்தா உந்த வியாதிப் பேய் எங்கை வரப் போகுது
சின்னப்பு : இன்னொண்டு மோகினிப் பேய் எண்டு சொல்லுறாங்கள் நானும் ம. .பிலை எத்தினை நாள் இரவிலை திரிஞ்சிருப்பன் கண்ணிலையே காணேலையே
சாத்திரி : உன்னைக் கண்டவுடனை மோகினிப் பேயே ஓடி ஒளிச்சிருக்கும் எங்கை
கடன் எதன் கேக்கப் போறீயோ எண்டு
முகத்தார் : இதெல்லாம் மனப் பயம் கண்டியோ தனியப் போற ஆட்களுக்குத் தானே இப்பிடியெல்லாம் நடக்குது எண்டு கேள்விப் படுறம்
சின்னப்பு : எனக்கெண்டா உந்தப் பேய்ளுக்கு பயமேயில்லை சாமத்திலும் சுடலைக்கு போட்டு வரச் சொல்லுங்கோ போட்டு வாறன்
சாத்திரி : நீ சுடலைக்கு போவாய் ஆனா உன்னைக் கண்டு மற்ற சனங்கள் பேய் எண்டு ஓடாட்டிச் சரி
முகத்தார் : சாத்திரி இந்த கதையைக் கேள் முன்னமொருக்கா மருதடிதிருவிழா மூட்டம் இரவு சோடனை வேலேலை இருக்கேக்கை ரைக்கருக்கு சொல்லச் சொல்லி என்னை நவாலிக்கு போட்டு வரச் சொல்லிச்சினம் தனியபோக விசர் எண்டுட்டு கூட்டாளி ஒருவரையும் சேர்த்துக் கொண்டு பிபிலிச் சுடலையடியாலை போனன் இரவு 1மணியிருக்கும் உனக்குத் தெரியும்தானே பிபிலிசுடலை ஒருபக்கம் எங்கடைசுடலை மற்றப் பக்கம் வேதக்காரற்றை எங்கடை சுடலைக்கை சவம் ஒண்டு எரிஞ்சு தணல் மட்டும் இருக்குது சைக்கிலை கதைச்சுக் கொண்டு போகேக்கை என்னோடை வந்தவன் இழுக்குதடா. . .இழுக்குதடா. . எண்டு கத்தத் தொடங்கினான் எழும்பி நிண்டு உழக்கினன் பார் சைக்கிலை மேடு பள்ளம் எங்கை போனதெண்டு தெரியாது தூரப் போய் ஒரு றோட் லைட்டுக்கு கீழை நிண்டு என்னோடை வந்தவனை பாத்தன் வேர்வையாலை நனைஞ்சுபோய் வாறான் எங்கை இழுத்தது எண்டு கேட்டன் கால்சட.;டையைக் காட்டினான் அதில் நாயுருவி கொளுக்கிகள் இருந்திச்சு றோட்டுக்கரையிலை இருக்கிற இந்த புல்தான் கால்சட்டேலை கொளுவி இழுத்திருக்கு இதைத்தான் பேய் இழுத்தது எண்டு பிடரிலை கால்பட நாங்கள் ஓடினது. . .
சாத்திரி : முந்தி சங்கானேலையிருந்து இரவிலை குழைக்கட்டு ஏத்திக் கொண்டு வாற வண்டில் மாடுகள் சில இடத்திலை அசையமுடியாமல் கஸ்டப்படுமாம் பேய்கள்தான் வழி மறிக்கிறதெண்டு அப்பு சொல்லுறவர்
முகத்தார் : அளவுக்கதிகமா லோட்டை வண்டிலிலை ஏத்தினா மாடுதான் என்ன செய்யும்
சின்னப்பு : சாத்திரி சங்குவேலிக்கை ஒரு பெம்பிளை பேயாட்டுறாவாம் அவவிட்டை அந்த பிள்ளையை அனுப்பி விடன்
சாத்திரி : எதுக்கும் ஒருக்கா நான் போய் பாத்திட்டு சொல்லுவம்
முகத்தார் : சின்னப்பு நானும் சில நாளிலை இரவுநேரம் சங்குவேலிக்கிலாலை போகேக்கை உடுக்குச் சத்தங்கள் கே;கிறதுதான் அது உந்த கூத்தோ. . .?
சின்னப்பு : அது பெரிய ஆட்டம் மச்சான் வேப்பமிலையடிச்சு ஆட பெடிச்சிகளும் எழும்பி ஆட சிலுக்கு டான்ஸ் தோத்துப் போகும்
சாத்திரி : சின்னப்பு என்ன போய் பாத்திருக்கிறாய் போலக்கிடக்கு
சின்னப்பு : ஓம். . .ஓம் . . ஒருக்கா என்ன நடக்குதெண்டு பாக்கிறதுக்கு போனனான் போகேக்கை கொஞ்சம் போட்டுட்டு போனதாலை பம்பலாக்கிடந்திச்சு மனுசி வந்து பலகேலை இருந்திட்டு நிமிந்து பாத்தா நான் நேரை நிக்கிறன் உள்ளுக்கை போனதும் வேலை செய்ய சிரிச்சபடிதான் நிண்டன் மனிசி இதைக்கண்டுட்டு கண்ணை மூடி ஏதோ எல்லாம் சொல்லிச்சு கண்ணை திறந்து பாத்தா நான் பழைய மாதிரித்தான் உடனை உடுக்கடிக்கிறவனைக் கூப்பிட்டு சொல்லிச்சு இந்த கூட்டத்திலை கெட்ட நோக்கத்தோடை ஒருதன் வந்திருக்கிறான் அவனைப் போகச் சொல்லு எண்டு அவனும் நீ தான் தாயே அவனை அடையாளம் காட்ட வேணும் எண்டான் மனுசி மெல்ல எழும்பி கையிலை வேப்பமிலையுடன் ஆடி ஆடி எனக்குக் கிட்ட வந்திச்சு இவன்தான் எண்டு கொஞ்ச விபுதியை எறிஞ்சிட்டு வேப்பமிலையாலை சாத்திச்சு பார் சாத்து அடிச்சதெல்லாம் குப் பெண்டு இறங்கிட்டுது எப்பிடி தப்பி வந்ததே பெரிய காரியம்
முகத்தார் : என்ன சின்னப்பு வீட்டிலைதான் அப்பிடி எண்டா வெளியிலுமா. . .?
சாத்திரி : பின்னை என்ன பல்லைக் காட்டிக் கொண்டு மனுசிக்கு முன்னாலை நிண்டா ஆருக்குத்தான் கோவம் வராது
முகத்தார் : இனி இதோடை சின்னப்புவோடை பழைய கறளுகளோ தெரியலை என்ன
சின்னப்பு : ஆனா இந்த உடுக்கடிக்கு குமர்ப்பிள்ளையள் எழும்பி ஆடுதுகள் எண்டாப் பாரன்
முகத்தார் : இது நரம்புதளர்ச்சி சிலபேருக்கு இந்த உடுக்குச் சத்தம் வேப்பமிலை மணம் இதெல்லாம் கேட்டவுடனை தங்களையே மறந்து விடுவினம்
சாத்திரி : இப்ப கோயில்களிலை உரு ஆடுறதும் இது மாதிரி ஒண்டுதான் என்ன.
சின்னப்பு : கோயிலிலை சில பேருக்கு பெட்டையளைக் கண்டவுடனை எல்லோ உரு வரும் ஆடிக் கொண்டு கிட்டப் போய் பாக்கலாமே
முகத்தார் : கிட்டப் போய் பாக்கலாம்தான் ஆனா சாமி வருகுது எண்டுட்டு தேங்காயை தலையிலை உடைச்சாளவை எண்டா கபாளம் பிளந்திடுமே. . . .
சாத்திரி : உங்களேடை கதைச்சு நேரம் போட்டுது வா சின்னப்பு வேவி வீட்டைப் போட்டு வருவம்
முகத்தார் : சாத்திரி உந்த பேய் பிடிச்ச பெடிச்சிக்கு என்ன வயசிருக்கும்
சாத்திரி : ஒரு 25க்கும் 30க்கும் இடையிலைதான் எண்டு நினைக்கிறன்
முகத்தார் : இதுக்கொரு வைத்தியம் சொல்லட்டே ஒரு இளம்தாரி பெடியனைக் கூட்டிட்டு போ மெல்ல அந்த பெடிச்சின்ரை காதுக்கை ஜ லவ் யு எண்டு பெடியனை சொல்ல சொல்லு பிறகு பாரன்
சாத்திரி : சின்னப்பு உவன் முகத்தான் வேப்பமரத்திலை கட்டி வைச்சு அடி வாங்கிறத்துக்கு வழி சொல்லறான் கேளன். . .
(கற்பனை)
(முகத்தார் வெளிவிறாந்தையில் பக்கத்தி வீட்டுப் பிள்ளைக்ளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார் )
பொண்ணம்மா: இங்சருங்கோ எங்கையப்பா இருக்கிறீயள்?
முகத்தார் : ஏனடியப்பா 4 வீட்டுக்கு கேக்கிற மாதிரி கத்திறீர் இஞ்சைதான் இருக்கிறன்
பொண்ணம்மா: உங்களுக்கு தலை கிலை ஏதன் கழண்டு போச்சோ சின்னப் பிள்ளைகளை வைச்சுக் கொண்டு பெம்பிளைக்கதை சொல்லிக் கொண்டிருக்கிறீயள்
முகத்தார் : அவங்கள்தான் கேட்டாங்கள் குட்டிக் கதை சொல்லச் சொல்லி அதுதான்.
பொண்ணம்மா: முந்தி வாங்கினதுகள் காணாதுபோல திரும்பவும் தொடங்கிட்டீயள் பெடியளை கலைச்சுப் போட்டு போங்கோ பாப்பம் குசினிக்கு
(முகத்தார் பிள்ளைகளை அனுப்பி விட்டு குசினிக்கு வருகிறார்)
பொண்ணம்மா: உன்னாலையப்பா கேக்கிறன் இரவு கனவிலை ஆரைக் கண்டனீயள்?
முகத்தார் : (பயந்தபடி) எல்லாம் நீதான்டியம்மா
பொண்ணம்மா: எனக்கப்பிடி தெரியலையே கனவிலை சிரிச்ச மாதிரி கிடந்திச்சு
முகத்தார் : (சமாளித்தபடி) அதுவந்து உம்மை பழைய கோலத்திலை பாத்தன் சிரிப்பு வந்திட்டுது இப்ப எப்பிடி இருக்கிறீர்
பொண்ணம்மா: (வாய்க்குள் சிரிப்புடன்) உண்மையா. . .
முகத்தார் : (நல்ல காலம் கனவிலை ஜோதிகா எண்டு பேரைச் சொல்லிச் சிரிச்சிருந்தா இண்டைக்குச் சங்குதான்)
(இந்த நேரம் வீட்டு அழைப்பு மணியடிக்குது )
முகத்தார் : மணியடிக்குது யாரோ வந்திருக்கினம் போல
பொண்ணம்மா: பின்ன தன்ரைபாட்டிலை அது அடிக்குதே போய் பாருங்கோ பாப்பம்
(முகத்தார் எழுந்து போகிறார் பொண்ணம்மாவும் பின்னால் போறா கதவைத் திறந்ததும்)
வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்
பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ
வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்
பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்
முகத்தார் : என்னடியப்பா மாடு மாதிரி வேலை செய்யிறன் என்னையே தாரை வாக்க நிக்கிறீரே உந்தா வந்தவங்கள் படலையை திறந்திட்டுப் போட்டாங்கள் சாத்திப் போட்டு வாறன்
(படலையை சாத்திய முகத்தார் றோட்டிலை இருந்த மதகில் சிறுது நேரம் இளைப்பாறுவம் எண்டு இருக்கிறார் இந்த நேரம் சின்னப்புவும் சாத்திரியும் போவது தெரிய கை தட்டி கூப்பிடுகிறார்)
முகத்தார் : என்னடாப்பா வீட்டுப்பக்கம் திரும்பிப் பாக்காமலே போறீயள்?
சின்னப்பு : இந்த நேரம் உங்கை வந்து உன்னைக் குழப்பி பொண்ணம்மாட்டை வேண்டிக் கட்ட எங்களாலை ஏலாது
சாத்திரி : இல்லை முகத்தான் ஒரு பிரச்சனை வேவின்ரை பெடிச்சுக்கு பேய் பிடிச்சிட்டுதாம் என்னை வந்து பாக்கச் சொன்னவை தனியப் போகப் பயத்திலை சின்னப்புவையும் கூட்டிட்டு போறன்
முகத்தார் : நீங்க தானே கலைக்கிற ஆட்கள் பிறகு பயப்பிட்டால் காசு கறக்கிறதுக்கு நல்ல சந்தர்ப்பம் விட்டுடாதை
சாத்திரி : சும்மா ஏத்தி விடாதை எதோ நாலு ரேகையைப் பாத்து ஆக்களிண்டை வசதியையும் வைச்சு ஒரு கணக்கிலை அள்ளிவிடுறன் அதுவும் சரியா வருகுது என்னை போய் பேய் கலையெண்டால் இரவானால் முனியம்மா இல்லாமல் வீட்டாலை இறங்க மாட்டன்
சின்னப்பு : அதுசரிதான் முனியம்மா வந்தா எந்த முனியும் கிட்ட வராதுதானே
சாத்திரி : பேய்களின்ரை வகைகளைத் தெரியாமல் சும்மா பகிடி விடுறீயள் சிலநாட்களிலை படுத்தா மூச்செடுக்க முடியாம யாரோ அமத்திற மாதிரி உங்களுக்கு நடக்கேலையோ
முகத்தார் : சாத்திரி இரவிலை சாப்பிடேக்கை ஓசிலை கிடைக்குதெண்டுட்டு கழுத்து மட்டும் தின்னப்;பிடாது அப்பிடி சாப்பிட்டா செமிக்கிறதுக்கு எங்கை இடமிருக்கு இனி சாப்பிட்டவுடனை படுக்காமல் கொஞ்சம் நடந்து திரிஞ்சுட்டுப் படுத்தா உந்த வியாதிப் பேய் எங்கை வரப் போகுது
சின்னப்பு : இன்னொண்டு மோகினிப் பேய் எண்டு சொல்லுறாங்கள் நானும் ம. .பிலை எத்தினை நாள் இரவிலை திரிஞ்சிருப்பன் கண்ணிலையே காணேலையே
சாத்திரி : உன்னைக் கண்டவுடனை மோகினிப் பேயே ஓடி ஒளிச்சிருக்கும் எங்கை
கடன் எதன் கேக்கப் போறீயோ எண்டு
முகத்தார் : இதெல்லாம் மனப் பயம் கண்டியோ தனியப் போற ஆட்களுக்குத் தானே இப்பிடியெல்லாம் நடக்குது எண்டு கேள்விப் படுறம்
சின்னப்பு : எனக்கெண்டா உந்தப் பேய்ளுக்கு பயமேயில்லை சாமத்திலும் சுடலைக்கு போட்டு வரச் சொல்லுங்கோ போட்டு வாறன்
சாத்திரி : நீ சுடலைக்கு போவாய் ஆனா உன்னைக் கண்டு மற்ற சனங்கள் பேய் எண்டு ஓடாட்டிச் சரி
முகத்தார் : சாத்திரி இந்த கதையைக் கேள் முன்னமொருக்கா மருதடிதிருவிழா மூட்டம் இரவு சோடனை வேலேலை இருக்கேக்கை ரைக்கருக்கு சொல்லச் சொல்லி என்னை நவாலிக்கு போட்டு வரச் சொல்லிச்சினம் தனியபோக விசர் எண்டுட்டு கூட்டாளி ஒருவரையும் சேர்த்துக் கொண்டு பிபிலிச் சுடலையடியாலை போனன் இரவு 1மணியிருக்கும் உனக்குத் தெரியும்தானே பிபிலிசுடலை ஒருபக்கம் எங்கடைசுடலை மற்றப் பக்கம் வேதக்காரற்றை எங்கடை சுடலைக்கை சவம் ஒண்டு எரிஞ்சு தணல் மட்டும் இருக்குது சைக்கிலை கதைச்சுக் கொண்டு போகேக்கை என்னோடை வந்தவன் இழுக்குதடா. . .இழுக்குதடா. . எண்டு கத்தத் தொடங்கினான் எழும்பி நிண்டு உழக்கினன் பார் சைக்கிலை மேடு பள்ளம் எங்கை போனதெண்டு தெரியாது தூரப் போய் ஒரு றோட் லைட்டுக்கு கீழை நிண்டு என்னோடை வந்தவனை பாத்தன் வேர்வையாலை நனைஞ்சுபோய் வாறான் எங்கை இழுத்தது எண்டு கேட்டன் கால்சட.;டையைக் காட்டினான் அதில் நாயுருவி கொளுக்கிகள் இருந்திச்சு றோட்டுக்கரையிலை இருக்கிற இந்த புல்தான் கால்சட்டேலை கொளுவி இழுத்திருக்கு இதைத்தான் பேய் இழுத்தது எண்டு பிடரிலை கால்பட நாங்கள் ஓடினது. . .
சாத்திரி : முந்தி சங்கானேலையிருந்து இரவிலை குழைக்கட்டு ஏத்திக் கொண்டு வாற வண்டில் மாடுகள் சில இடத்திலை அசையமுடியாமல் கஸ்டப்படுமாம் பேய்கள்தான் வழி மறிக்கிறதெண்டு அப்பு சொல்லுறவர்
முகத்தார் : அளவுக்கதிகமா லோட்டை வண்டிலிலை ஏத்தினா மாடுதான் என்ன செய்யும்
சின்னப்பு : சாத்திரி சங்குவேலிக்கை ஒரு பெம்பிளை பேயாட்டுறாவாம் அவவிட்டை அந்த பிள்ளையை அனுப்பி விடன்
சாத்திரி : எதுக்கும் ஒருக்கா நான் போய் பாத்திட்டு சொல்லுவம்
முகத்தார் : சின்னப்பு நானும் சில நாளிலை இரவுநேரம் சங்குவேலிக்கிலாலை போகேக்கை உடுக்குச் சத்தங்கள் கே;கிறதுதான் அது உந்த கூத்தோ. . .?
சின்னப்பு : அது பெரிய ஆட்டம் மச்சான் வேப்பமிலையடிச்சு ஆட பெடிச்சிகளும் எழும்பி ஆட சிலுக்கு டான்ஸ் தோத்துப் போகும்
சாத்திரி : சின்னப்பு என்ன போய் பாத்திருக்கிறாய் போலக்கிடக்கு
சின்னப்பு : ஓம். . .ஓம் . . ஒருக்கா என்ன நடக்குதெண்டு பாக்கிறதுக்கு போனனான் போகேக்கை கொஞ்சம் போட்டுட்டு போனதாலை பம்பலாக்கிடந்திச்சு மனுசி வந்து பலகேலை இருந்திட்டு நிமிந்து பாத்தா நான் நேரை நிக்கிறன் உள்ளுக்கை போனதும் வேலை செய்ய சிரிச்சபடிதான் நிண்டன் மனிசி இதைக்கண்டுட்டு கண்ணை மூடி ஏதோ எல்லாம் சொல்லிச்சு கண்ணை திறந்து பாத்தா நான் பழைய மாதிரித்தான் உடனை உடுக்கடிக்கிறவனைக் கூப்பிட்டு சொல்லிச்சு இந்த கூட்டத்திலை கெட்ட நோக்கத்தோடை ஒருதன் வந்திருக்கிறான் அவனைப் போகச் சொல்லு எண்டு அவனும் நீ தான் தாயே அவனை அடையாளம் காட்ட வேணும் எண்டான் மனுசி மெல்ல எழும்பி கையிலை வேப்பமிலையுடன் ஆடி ஆடி எனக்குக் கிட்ட வந்திச்சு இவன்தான் எண்டு கொஞ்ச விபுதியை எறிஞ்சிட்டு வேப்பமிலையாலை சாத்திச்சு பார் சாத்து அடிச்சதெல்லாம் குப் பெண்டு இறங்கிட்டுது எப்பிடி தப்பி வந்ததே பெரிய காரியம்
முகத்தார் : என்ன சின்னப்பு வீட்டிலைதான் அப்பிடி எண்டா வெளியிலுமா. . .?
சாத்திரி : பின்னை என்ன பல்லைக் காட்டிக் கொண்டு மனுசிக்கு முன்னாலை நிண்டா ஆருக்குத்தான் கோவம் வராது
முகத்தார் : இனி இதோடை சின்னப்புவோடை பழைய கறளுகளோ தெரியலை என்ன
சின்னப்பு : ஆனா இந்த உடுக்கடிக்கு குமர்ப்பிள்ளையள் எழும்பி ஆடுதுகள் எண்டாப் பாரன்
முகத்தார் : இது நரம்புதளர்ச்சி சிலபேருக்கு இந்த உடுக்குச் சத்தம் வேப்பமிலை மணம் இதெல்லாம் கேட்டவுடனை தங்களையே மறந்து விடுவினம்
சாத்திரி : இப்ப கோயில்களிலை உரு ஆடுறதும் இது மாதிரி ஒண்டுதான் என்ன.
சின்னப்பு : கோயிலிலை சில பேருக்கு பெட்டையளைக் கண்டவுடனை எல்லோ உரு வரும் ஆடிக் கொண்டு கிட்டப் போய் பாக்கலாமே
முகத்தார் : கிட்டப் போய் பாக்கலாம்தான் ஆனா சாமி வருகுது எண்டுட்டு தேங்காயை தலையிலை உடைச்சாளவை எண்டா கபாளம் பிளந்திடுமே. . . .
சாத்திரி : உங்களேடை கதைச்சு நேரம் போட்டுது வா சின்னப்பு வேவி வீட்டைப் போட்டு வருவம்
முகத்தார் : சாத்திரி உந்த பேய் பிடிச்ச பெடிச்சிக்கு என்ன வயசிருக்கும்
சாத்திரி : ஒரு 25க்கும் 30க்கும் இடையிலைதான் எண்டு நினைக்கிறன்
முகத்தார் : இதுக்கொரு வைத்தியம் சொல்லட்டே ஒரு இளம்தாரி பெடியனைக் கூட்டிட்டு போ மெல்ல அந்த பெடிச்சின்ரை காதுக்கை ஜ லவ் யு எண்டு பெடியனை சொல்ல சொல்லு பிறகு பாரன்
சாத்திரி : சின்னப்பு உவன் முகத்தான் வேப்பமரத்திலை கட்டி வைச்சு அடி வாங்கிறத்துக்கு வழி சொல்லறான் கேளன். . .
(கற்பனை)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


