10-30-2005, 06:57 PM
yalini Wrote:Quote: யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாரதர் உங்களுக்கு புரியுது அந்த படங்கள் கவர்ச்சியாத்தான் இருக்கிறது என்று. இதை விட மோசமாய் இருந்த படங்கள் தான் நீக்கப்பட்டது. நீங்க நினைத்தது போல ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் இணைக்கும் படத்தினை மதிப்பிட்டு இணைத்தால் பிரச்சனையே இல்லையே.![]()
ஒவ்வொருவரது அளவீடும் வேறுபடலாம். குறைந்தபட்சம் நாகரீகமாய் இணைப்பது களத்திற்கு நல்லது. அதைத்தான் கோரப்படுகிறது. அப்படி மோசமான படங்கள் தான் நீக்கப்பட்டன.
:wink:
அன்புக்குரிய தோழி யாழினி அவர்களே,
உங்கள் பதிலிலேயே முரண் இருப்பதைக் கவனிக்கவில்லயா.
ஒவ்வொருவர் மதிப்பீடும் வெறு படும் என்றும் கூறுகிறீர்கள் பிறகு அங்கத்துவர்களே சுய மதிப் பிட்டு படங்களைப் போடலாம் என்கிறீர்கள்.குறுக்ஸின் சுய மதிபீடும் உங்கள் மதிப்பீடும் வேறு பட்டதால் தானே பிரச்சினை.அதனால் தான் கேக்கிறேன் யாழிற்கு ஏன் தேவை இந்த நடிகை, நடிகர்களது படங்கள்.தமிழ் சினிமாவின் அழிவாம்சங்களையும் தாங்கி வரவேண்டுமா யாழ் களம்.எமது இழஞர்களை இங்கே இழுப்பதற்கு இதைத்தவிர வேறு வழி இல்லயா.
சினிமாப்பகுதியில் நல்ல சினிமாவைப் பற்றி எழுதலாம். நடிகயிரின் படத்தைப் போட்டு ரசிப்பதில் என்ன இருக்கிறது.இதில் என்ன அவயவம் தெரிகிறது என்பதுவா நாகரீகத்தின் அளவு கோல்? ஈற்றில் முடிவெடுப்பது யாழ் கள நிர்வாகமும்,மட்டுறுத்தினர்களும் , நீங்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.யாழ் களம் ஈழத் தமிழரின் கண்ணாடி. நாங்கள் தமிழ் சினிமாவையும் அதன் சீரழிப்புக்களையும் தமிழகத்தில் அது எவ்வறு மக்களைச் சீரழிக்கிறது என்று கூறிய படியே களத்திலும் இதனைத் தொடருகிறோம்.இது முரண் பாடானதாகத் தெரியவில்லையா? இதைத் தானே ஒரு பேப்பரில் எழுதிய இந்தியன் தாத்தா சுட்டிக் காட்டிய போது கிளர்ந்து எழுந்தோம்.

