11-24-2003, 06:51 PM
<b>பாராட்டுகள்</b>
வணக்கம் நண்பர்களே...
இங்கு கருத்தாடும், மற்றும் புதிய தகவல்களை பரிமாறும் அனைத்து கருத்துக்கள நண்பர்களையும் ஊக்குவிக்கும் வண்ணமும், இன்னமும் தொடர்ந்து எழுத ஆர்வத்தை உண்டுபண்ணும் வண்ணமும் களத்தில் அவர்களுடைய தனிச் சிறப்புகளைக் கண்டறிந்து பாராட்டுவோம்.
பாராட்டுவதன் மூலம் கள அங்கத்துவர்களிடையே ஒரு புரிந்துணர்வும், நட்புடனான பிணைப்பும் உண்டாகும் என்பதால் தான் இந்தத் தலைப்பு. மற்றும் கள நண்பர்களிடம் பொறுப்புணர்வை வளர்க்கவும் இது பயன்படும் என்பது எனது நம்பிக்கை.
அந்தவகையில் நான் முதலாவதாக இருவரைப் பாராட்டுகிறேன்:
<b>ஆதிபன்</b>
யாழ் கருத்துக்களத்தில் இணைந்ததிலிருந்து இதுவரையிலும் பண்பாக அருமையான பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். இன்று அவர் தனது 200 ஆவது பதிப்பினை இங்கு பதித்துள்ளார். காதல் பொங்க கவிதைகள் படைப்பார். சமூகம் சார்ந்த நற் கருத்துக்கள் தருவார். அறிவியலுக்குள்ளும் காலெடுத்து வைத்துள்ளார். வந்த வேகத்தில் 200 படைப்பு - அற்புதம்! தொடர்ந்தும் இவர் நிறைய எழுதி எம்மை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
<b>வானதி</b>
யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடும் இளைஞர்களில் ஒருவர் இவர். இதுவரை 35 பதிப்புகள் பதித்துள்ளார். தமிழில் எழுதுவதில் கவனமாகவும், ஆர்வமாகவும் இருப்பவர். தொடர்ந்தும் சோராமல் களமாடுபவர். இன்னும் 15 பதிப்புகள் எழுதினால் இவருக்கு இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படும். அந்த வகையில் வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். அதேநேரம் உங்களிடமிருந்து நிறைய அரியபல தகவல்களையும் எதிர்பார்க்கிறோம்!
மற்றவர்கள் தொடருங்கள்...
வணக்கம் நண்பர்களே...
இங்கு கருத்தாடும், மற்றும் புதிய தகவல்களை பரிமாறும் அனைத்து கருத்துக்கள நண்பர்களையும் ஊக்குவிக்கும் வண்ணமும், இன்னமும் தொடர்ந்து எழுத ஆர்வத்தை உண்டுபண்ணும் வண்ணமும் களத்தில் அவர்களுடைய தனிச் சிறப்புகளைக் கண்டறிந்து பாராட்டுவோம்.
பாராட்டுவதன் மூலம் கள அங்கத்துவர்களிடையே ஒரு புரிந்துணர்வும், நட்புடனான பிணைப்பும் உண்டாகும் என்பதால் தான் இந்தத் தலைப்பு. மற்றும் கள நண்பர்களிடம் பொறுப்புணர்வை வளர்க்கவும் இது பயன்படும் என்பது எனது நம்பிக்கை.
அந்தவகையில் நான் முதலாவதாக இருவரைப் பாராட்டுகிறேன்:
<b>ஆதிபன்</b>
யாழ் கருத்துக்களத்தில் இணைந்ததிலிருந்து இதுவரையிலும் பண்பாக அருமையான பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். இன்று அவர் தனது 200 ஆவது பதிப்பினை இங்கு பதித்துள்ளார். காதல் பொங்க கவிதைகள் படைப்பார். சமூகம் சார்ந்த நற் கருத்துக்கள் தருவார். அறிவியலுக்குள்ளும் காலெடுத்து வைத்துள்ளார். வந்த வேகத்தில் 200 படைப்பு - அற்புதம்! தொடர்ந்தும் இவர் நிறைய எழுதி எம்மை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
<b>வானதி</b>
யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடும் இளைஞர்களில் ஒருவர் இவர். இதுவரை 35 பதிப்புகள் பதித்துள்ளார். தமிழில் எழுதுவதில் கவனமாகவும், ஆர்வமாகவும் இருப்பவர். தொடர்ந்தும் சோராமல் களமாடுபவர். இன்னும் 15 பதிப்புகள் எழுதினால் இவருக்கு இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படும். அந்த வகையில் வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். அதேநேரம் உங்களிடமிருந்து நிறைய அரியபல தகவல்களையும் எதிர்பார்க்கிறோம்!
மற்றவர்கள் தொடருங்கள்...

