10-27-2005, 03:58 PM
திலகபாமா:
Quote:எனக்குத் தெரிந்து என் பார்வைக்கு வந்ததில் கடந்த இரண்டாண்டுகளாக புதிய புத்தகங்களில் வாசிப்பின் மேல் ஒரு தொடர் சலிப்பு ஏற்படிருந்தது
நவீனம் , தீவிர இலக்கியம் எனும் பெயரில் ஒரு பக்கம் மேலைத் தேய நாடுகள் தூக்கி எரிந்த விடயங்களை இதுவரை இங்கு காணாத ஒன்றாக இருந்ததினாலேயே புதிய ஒன்றாக அல்லது மறைக்கப் பட்ட நிழலுக்குள்ளிருக்கும் விசயங்களை கட்டுடைத்து வெளிக் கொண்டு வருவதாக சொல்லி ஒருவகை அதீதங்களை கையிலெடுக்கும் போக்கு தரும் அதிர்ச்சியும் புதிதாய் தலையெடுக்கும் இளைஞர்களின் ஒட்டு மொத்த சிந்தனைப் போக்கை தான் கைக்கொள்ள நினைக்கும் அந்நிய நாடுகளின் திக்கங்களுக்கு , சிந்தனைகளை முளையிலேயே குறைப்பிரசவமாக்கிவிட அவர்கள் போடும் எழும்புத் துண்டுகளுக்காக விலை பேசும் இலக்கிய பத்திரிக்கை எனும் போர்வையில் நாட்டின் பெருமையை அடகு வைக்கும் இலக்கிய அறிவில்லாது ஏன் சமுதாய பிரக்ஞை துளி கூட இல்லாது வெறும் வியாபார தந்திரங்களில் “அடக்குமுறைக்கெதிராக, வன்முறைக்கெதிரான” எனும் கோசங்களின் பின் செயல்படும் சிற்றிலக்கியப் போக்கும் இவற்றை வன்மையோடு ஓன்று கூடி எதிர்த்து விட முடியா நேர்மையான சிந்தனையாளர்களின் இலக்கிய வாதிகளின் இயக்கவாதிகளின் ஒற்றுமையின்மையும் அவ்வொற்றுமையின்மையாள் அவர்கள் நல்ல விசயங்களை நிலை நிறுத்த முடியாமல் போன போக்கும் தந்திருந்த சலிப்புக்கிடையில் இன்னமும் அவ்வப் போது சில புத்தகங்கள் வந்து என் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கின்றன.

