10-27-2005, 03:43 AM
இவோன்
உங்களுக்கு ஒரு விடயத்தை புரியவைக்க விரும்புகின்றேன். இன்று இலட்சக் கணக்கில் தளங்கள் உள்ளன. அவற்றில் பாலியல்ரீதியான தளங்கள் ஏராளம் உண்டு. அப்படியிருக்க நாம் எல்லோரும் அதற்கெதிராக கூச்சல் போட்டுக்கொண்டு திரியவில்லை. நாம் சொல்லுகின்ற விளக்கம் என்பது யாழ் களத்தோடு சாந்த பக்கமாக இது வடிவமைக்கப்படாமல் தனித்து இயங்க வைக்க வேண்டும் என்பது தான். அங்கே செய்யப்படும் எவ்வித விமர்சனங்கள் குறித்தோ நாம் அலட்டிக் கொள்ளப்போவதில்லை.
ஆனால் யாழ் களத்தோடு இணைந்தாக அமைக்கும் பட்சத்தில் ஏற்படும் சங்கடங்கள் குறித்தே நான் சொல்ல வருகின்றேன். உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு தெரியும் தனித்து இயக்கப்படுவதால் அதனால் எவ்வித பிரச்சனைகளையும் உங்களுக்கும் உருவாக்கப் போவதில்லை. எமக்கும் உருவாக்கப்போவதில்லை. இதற்கான விளக்க மடலாகத் தான் நான் குறித்தது. அதை விட சென்ற ஞாயிறு அரட்டை அறையில் விவாதித்தவைக்கான பதிலும் கூடவே.ஆனால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைத்துக் கொண்டு தான் நீங்கள் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
ஆனாலும் நீங்கள் கொண்டுள்ள விவாதக் கருப்பொருளில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதைக் குறித்துக் காட்டவிரும்புகின்றேன்.
உங்கள் கேள்வியின் படி புறக்கணிக்கப்பட்ட பெண் என்னசெய்வாள் என்பது தானே. என்ன செய்வாள் என்ற கேள்விக்கு முதல் தன் ஏக்கங்களை எழுத்துக்கள் மூலம் வெளியிடுகின்றாள் என்றால் தன் ஏக்கங்களை தீர்ப்பதையும் தாண்டி எழுத்துக்கு கொடுக்கும் மரியாதை ஏன்? அவ் எழுத்துக்கள மூலம் தன்னை திருப்தி செய்யமுடியும் என நம்புகின்றாளா? எனவே எழுத்துக்கள் மூலம் தீர்க்கப்படுவது என்பது சூது நிறைந்த ஒரு பார்வை.
அங்கே பெண்ணுக்கான தீர்வுகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற வாதங்களுக்கு பின்னால் தங்கள் காமத்துக்கே களம் அமைக்கப்படுகின்றது.
அப்படி நீங்கள் சொல்லும் விதத்தில் ஒரு பெண் அதே எண்ணத்திலேயே அலைந்து திரிந்தால் அதற்கு வேறு பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார். விபச்சாரி என்பது பணத்துக்காக உடலை விற்பவளே தவிர அவ் எண்ணம் கொண்டு திரிபவள் கிடையாது.
விருப்பமின்றி திணிக்கப்படுவதை தடுப்பதற்கு வீரம் தான் தேவையே ஒழிய வேறு ஏதும் இல்லை. டிசேயின் வரிகளில் உள்ள குமுறலை விட உங்கள் குமுறல் தான் பரிதாபமாகத் தெரிகின்றது. நீங்கள் கேட்டது போல உங்கே இரட்டை வேடம் போடும் ஆணின் அயோக்கியத் தனம் தெளிவாகத் தெரிகின்றது. பாலியல் உணர்வைத் து}ண்டும் கவிதை என்பதை விட பாலியல் உணர்வு நிறைந்தவரின் எண்ணங்களின் வடிகால் தான் அக்கவிதை.
சினிமாவில் ஒரு பெண் அடக்குமுறைகளுக்கு எதிராகப் புறப்படுவதாக கதை அமைத்தால் அப் பெண் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளை மொத்தநேரத்தில் காட்டி விட்டு கடைசி சில நிமிடத்தில் தான் பெண்ணின் எழுச்சி காட்டப்படும். உண்மையில் அப்படம் கொண்டிருக்கும் பெயர் என்னவென்றால் பெண்விடுதலைப் படம். இது தான் நீங்கள் செய்யப்போவது.
நண்பனே...
என்றும் வக்கிரகங்கள் பற்றியும், கொடூரம் பற்றி பேசப்படுவதும் சகஜமாகப் போகின்றதோ அன்றே அவை நிஜத்தில் சகஜமாகி விடும். நீங்கள் விவாதம் என்ற பெயரில் இவ் இழிச் செயலைத் தான் செய்யப்போகின்றீர்கள். முகமூடிகளை அதிக காலம் போட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது வெளிப்படை.
பெண்ணின் பெயரில் கட்டுரைகளை எழுதுவதன் மூலம் தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முறைமையை எவ்வாறு எதிர்கொள்வது? அங்கு பெண் மீது அனுதாபத்தை காட்டுவது போல நளினம் செய்வது என்பது வேடிக்கையான உண்மை தானே. இங்கே தான் தெளிவான இரட்டை வேடம் தெரிகின்றது.
குலம் சொன்னது போல வீணாக எண்ணங்களைச் சுமந்து நின்று விவாதம் என்ற பெயரிலேயே து}க்கிக் கொண்டு திரியப்போகின்றீர்கள். ஒவ்வொரு முறையும் இதைத் தானா விவாதம் செய்தோம் என்று உற்று நோக்கவேண்டிவரும்.
உங்களுக்கு ஒரு விடயத்தை புரியவைக்க விரும்புகின்றேன். இன்று இலட்சக் கணக்கில் தளங்கள் உள்ளன. அவற்றில் பாலியல்ரீதியான தளங்கள் ஏராளம் உண்டு. அப்படியிருக்க நாம் எல்லோரும் அதற்கெதிராக கூச்சல் போட்டுக்கொண்டு திரியவில்லை. நாம் சொல்லுகின்ற விளக்கம் என்பது யாழ் களத்தோடு சாந்த பக்கமாக இது வடிவமைக்கப்படாமல் தனித்து இயங்க வைக்க வேண்டும் என்பது தான். அங்கே செய்யப்படும் எவ்வித விமர்சனங்கள் குறித்தோ நாம் அலட்டிக் கொள்ளப்போவதில்லை.
ஆனால் யாழ் களத்தோடு இணைந்தாக அமைக்கும் பட்சத்தில் ஏற்படும் சங்கடங்கள் குறித்தே நான் சொல்ல வருகின்றேன். உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு தெரியும் தனித்து இயக்கப்படுவதால் அதனால் எவ்வித பிரச்சனைகளையும் உங்களுக்கும் உருவாக்கப் போவதில்லை. எமக்கும் உருவாக்கப்போவதில்லை. இதற்கான விளக்க மடலாகத் தான் நான் குறித்தது. அதை விட சென்ற ஞாயிறு அரட்டை அறையில் விவாதித்தவைக்கான பதிலும் கூடவே.ஆனால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைத்துக் கொண்டு தான் நீங்கள் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
ஆனாலும் நீங்கள் கொண்டுள்ள விவாதக் கருப்பொருளில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதைக் குறித்துக் காட்டவிரும்புகின்றேன்.
உங்கள் கேள்வியின் படி புறக்கணிக்கப்பட்ட பெண் என்னசெய்வாள் என்பது தானே. என்ன செய்வாள் என்ற கேள்விக்கு முதல் தன் ஏக்கங்களை எழுத்துக்கள் மூலம் வெளியிடுகின்றாள் என்றால் தன் ஏக்கங்களை தீர்ப்பதையும் தாண்டி எழுத்துக்கு கொடுக்கும் மரியாதை ஏன்? அவ் எழுத்துக்கள மூலம் தன்னை திருப்தி செய்யமுடியும் என நம்புகின்றாளா? எனவே எழுத்துக்கள் மூலம் தீர்க்கப்படுவது என்பது சூது நிறைந்த ஒரு பார்வை.
அங்கே பெண்ணுக்கான தீர்வுகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற வாதங்களுக்கு பின்னால் தங்கள் காமத்துக்கே களம் அமைக்கப்படுகின்றது.
அப்படி நீங்கள் சொல்லும் விதத்தில் ஒரு பெண் அதே எண்ணத்திலேயே அலைந்து திரிந்தால் அதற்கு வேறு பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார். விபச்சாரி என்பது பணத்துக்காக உடலை விற்பவளே தவிர அவ் எண்ணம் கொண்டு திரிபவள் கிடையாது.
விருப்பமின்றி திணிக்கப்படுவதை தடுப்பதற்கு வீரம் தான் தேவையே ஒழிய வேறு ஏதும் இல்லை. டிசேயின் வரிகளில் உள்ள குமுறலை விட உங்கள் குமுறல் தான் பரிதாபமாகத் தெரிகின்றது. நீங்கள் கேட்டது போல உங்கே இரட்டை வேடம் போடும் ஆணின் அயோக்கியத் தனம் தெளிவாகத் தெரிகின்றது. பாலியல் உணர்வைத் து}ண்டும் கவிதை என்பதை விட பாலியல் உணர்வு நிறைந்தவரின் எண்ணங்களின் வடிகால் தான் அக்கவிதை.
சினிமாவில் ஒரு பெண் அடக்குமுறைகளுக்கு எதிராகப் புறப்படுவதாக கதை அமைத்தால் அப் பெண் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளை மொத்தநேரத்தில் காட்டி விட்டு கடைசி சில நிமிடத்தில் தான் பெண்ணின் எழுச்சி காட்டப்படும். உண்மையில் அப்படம் கொண்டிருக்கும் பெயர் என்னவென்றால் பெண்விடுதலைப் படம். இது தான் நீங்கள் செய்யப்போவது.
நண்பனே...
என்றும் வக்கிரகங்கள் பற்றியும், கொடூரம் பற்றி பேசப்படுவதும் சகஜமாகப் போகின்றதோ அன்றே அவை நிஜத்தில் சகஜமாகி விடும். நீங்கள் விவாதம் என்ற பெயரில் இவ் இழிச் செயலைத் தான் செய்யப்போகின்றீர்கள். முகமூடிகளை அதிக காலம் போட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது வெளிப்படை.
பெண்ணின் பெயரில் கட்டுரைகளை எழுதுவதன் மூலம் தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முறைமையை எவ்வாறு எதிர்கொள்வது? அங்கு பெண் மீது அனுதாபத்தை காட்டுவது போல நளினம் செய்வது என்பது வேடிக்கையான உண்மை தானே. இங்கே தான் தெளிவான இரட்டை வேடம் தெரிகின்றது.
குலம் சொன்னது போல வீணாக எண்ணங்களைச் சுமந்து நின்று விவாதம் என்ற பெயரிலேயே து}க்கிக் கொண்டு திரியப்போகின்றீர்கள். ஒவ்வொரு முறையும் இதைத் தானா விவாதம் செய்தோம் என்று உற்று நோக்கவேண்டிவரும்.

