10-26-2005, 01:19 AM
Eelavan Wrote:பிருந்தன் நீங்கள் எழுதியதை வாசிக்காமலேயே உங்கள் பதிலை எழுதுகிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு.
அவ்வையாரையும் கம்பனையும் நான் உதாரணம் காட்டியது தமிழில் காலம் காலமாக இவை உள்ளன என்று காட்டத்தான்.
நவீனத்துவம் என்பது இரண்டாயிரம் வருடம் பாரம்பரியமுள்ள எமது மரபிலிருந்து கட்டமைக்கப்படவேண்டும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை மரபை நிராகரித்து நவீனத்தை வசியப்படுத்துவது அத்திவாரமில்லாமற் கோட்டை கட்டுவதற்குச் சமானமானது.நான் இன்றும்
இதைதான் நானும் கூறுகிறேன் எமது மரபில் இருந்து நாம் மாறுபடக்கூடாது அதனுடன் சேர்ந்த நவீனத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும், ஆனால் ஓரினசேர்க்கை எமது மரபா? ஏதோ ஒரு இருவர் அப்படி இருந்தார்கள் என்பதற்காக அதுதான் எம்மரபு என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஒருத்தனுக்கு ஒருத்தி இதுதானே மரபு ஒருத்தனுக்கு ஒருத்தன் எப்போது வந்தது.
திருவாசகத்தையும்,அவ்வையாரையும்,சிலப்பதிகாரத்தையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
மரமானது இரண்டு பக்கமும் வளரவேண்டும்.கிளைகள் மேலே மேலே உயரும் அதே சமயம் வேர்கள் ஆழ ஆழ உள்ளே போகவேண்டும்.
நீங்கள் இருக்கிற வேரே போதும் கிளைகள் எதற்கு வளர்வேண்டும் என்கிறீர்கள்.நானோ வேரின் ஆழத்தை பரிசோதித்து இன்னும் ஆழப்படுத்தியவாறே கிளைகளை நீட்ட விரும்புகிறேன்.
நீங்கள் கிளைகள் வளரவேண்டுமென விரும்பவில்லை, வேற்று கிளைகளைக் கொண்டுவந்து எமது மரத்தில் ஒட்டுகிறீர்கள். ஒட்டுங்கள் நல்ல இனகிளைகளாக எம்சமுதாயத்துக்கு பயன்தரக்கூடிய கிளைகளாக ஒட்டுங்கள், ஏன் நச்சுக்கிளைகளை கொண்டுவந்து ஒட்டுகிறீர்கள்.
உங்கள் நம்பிக்கைகளும் எங்கள் நம்பிக்கைகளும் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நானும் நீங்களும் ஒரே தளத்தில் தான் இருக்கிறோம் உங்கள் கருத்தை நீங்கள் முன்வையுங்கள் அதற்காக களத்தில் இடம் வேண்டாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் பழமொழியையே மீளவும் நினைவுறுத்துகிறது.
தமிழீழத்தில் ஓரினச் சேர்க்கை எதற்கு என்று கேட்கிறீர்களா அப்படியானால் இப்போது இருக்கும் பாலியல் தொழிலாளர்களையும்,ஓரினச் சேர்க்கையாளர்களையும் நாடு கடத்தலாமா அல்லது மின்கம்பத்தில் தொங்கவிடலாமா.
பாருங்கள் எவ்வளவு வக்கிரபுத்தி தமிழீழத்தில் வேண்டுமா வேண்டாமா என்று ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் தீர்மானிக்கும் அவலம் அங்குள்ள மக்களுக்கு.
அப்ப ஓரினசேர்கையாளருக்கு சட்ட அங்கிகாரம் கொடுத்து றேஷன்(குடும்ப முத்திரை) காட்டும் கொடுத்து, குடித்தனம் நடத்தவிடுவோமா? இதுதானா? குடும்பம் குட்டி(குட்டி எப்படிவரும்) அழகான குடுப்ப வாழ்வு இருக்க ஏன் வக்கிர வாழ்வு எனக்கேட்ட நான் வக்கிரபுத்திகாரனா?
வாழ்க உங்கள் நவீனத்துவம்.
களத்தில் தனியான பக்கம் திறந்தாலும் நீங்களும் அங்கு வரவேண்டும் இல்லையானால் இவற்றையெல்லாம் யாருடன் விவாதித்துத் தெளிவது
.
.
.

