Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"நல்ல தமிழ் அறிவோம்' நூலிலிருந்து.
#1
பெரிய கடற்கரை நகரங்களில் கடலில் வரும் கப்பல்களுக்கு அடையாளம் காட்ட பழங்காலத்தில் விளக்கு உள்ள கட்டடங்களை எழுப்பியிருந்தனர். இப்போது விளக்கு இல்லம் என்ற பொருளுடைய "லைட் ஹவுஸ்' என்ற ஆங்கிலப் பெயரால் குறிக்கும் இடம் போன்றது அது. கலங்கரை விளக்கம் என்று அங்குள்ள விளக்குகளைச் சொல்வது வழக்கம்.

கலம் என்பது கப்பல். கரைதல் என்பது அழைத்தல் என்னும் பொருளுடைய சொல். கடலில் செல்லும் கப்பல்களை, "இங்கே ஊர் இருக்கிறது; வாருங்கள்' என்று அழைப்பது போல் அந்த விளக்கு என்ற பெயர் அமைந்தது.

"இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்' என்பது சிலப்பதிகாரம். "ஓடுகலங் கரையும்' என்று விளக்குகள் அழைப்பதைப் பத்துப் பாட்டு கூறுகிறது. கலங்கள் வந்து சேரும் கரையில் உள்ள விளக்கு என்று சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர். கலம் வந்து சேருவது துறையிலேயன்றிக் கரையில் அன்று. அப்படி இருப்பினும் கலக்கரை விளக்கம் என்று வருமேயன்றி கலங்கரை விளக்கம் என்று வராது.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
"நல்ல தமிழ் அறிவோம்' - by சாமி - 11-22-2003, 11:14 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:13 PM
[No subject] - by kuruvikal - 01-29-2004, 01:04 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 01:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)