10-25-2005, 03:22 AM
இனி சற்று சீரியசாக,
மரணதண்டனை கூட பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் நடைமுறையில் இருக்கிறது. அதற்காக இன்னார் செய்வது சரி, இன்னார் செய்வது பிழை என்று ஒரேயடியாகத் தீர்ப்புக்கூற முடியுமா?
தற்பால் திருமணத்துக்கு இரண்டொரு நாடுகள் அனுமதியளித்துள்ளன. மற்றவை அளிக்கவில்லை. யார் சரி. யார் பிழை?
சரி. இவை அனுமதியளிக்கப்படாத நாடுகளில் அவற்றைப்பற்றிக் கதைப்பதில்லையா? பாராளுமன்றங்களில்கூட பகிரங்கவிவாதம் நடக்கிறது.
இது தமிமீழத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்று சொல்வது இங்குமட்டும்தான் நடக்கிறது.
கருத்துக்களால் இவற்றைத் தீயவையென்று மறுக்க முடியாத, மறுக்கத் திராணியற்றவர்களின் கூச்சல் தான் இவைகள்.
சரி. பெரிய பண்பாடு, ஒழுக்கம் பற்றிக் கதைப்பவர்களே, இந்த விவாதத்தைக்கூட எதிர்கொள்ளப் பயப்படும் உங்கள் உயர்ந்த பண்பாட்டுக் கட்டமைப்பு எத்தகையது. கதைத்தாலே எல்லாம சிதறி மக்கள் வழிதவறிப்போய்விடுவர் என்று பயப்படும் உங்கள் பண்பாட்டு இறுக்கம் எத்தகையது?
எல்லாம் வெறும் கோறைதான். வெறும் சோத்தி மரங்கள்தான். முழுக்க முழுக்கப் பலவீனமான மக்கள் சமுதாயம்தான் எங்களது என்று நிங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.
சும்மாவொரு கவிதை பார்த்தாலே எங்கட சனம் குழம்பி சமூகக் கட்மைப்புக் குலைந்துபோறதெண்டா, எவ்வளவு பலவீனமான சமுதாயம் எங்களது?
இதை நான் சொல்லவில்லை. இங்கே கூப்பாடு போடுபவர்கள் சொல்கிறார்கள்.
"உவங்களெல்லாம் கூடி ஏதோ பாலியல் அரட்டை அடிக்கப்போகிறார்கள். ஐயகோ! அதெப்படி இன்னொருத்தன் உப்பிடி சுகம் அடையலாம்? உவங்கள விடக்கூடாது."
என்பது போன்ற மனநிலையும் காரணமாக இருக்கலாம். அல்லது இன்னொருவரைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதன்மூலம் அவர்களைப் பயப்படுத்தி ஒதுங்கவைக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். "நீயும் அப்படித்தான். நீ விபச்சாரி. உன்ர தங்கச்சியை அனுப்பிவை. நீ எந்த நேரமும் அந்த யோசினையில தான் திரியிறனி" என்றவாறாகச் சொல்லி மற்றவர்களைப் பயப்படுத்தி விவாதத்திலிருந்து ஒதுங்கச் செய்வதுதான் அது.
கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் முதல்வேலை குடும்பத்தை இழுப்பது. நடிகைக்கு ஆதரவாகக் கதைக்கும் பெண்ணை, நீயும் விபச்சாரிபோல கிடக்கு எண்டு சொல்லி ஒதுங்கச் செய்வது முதல் பலதரப்பட்ட நிலைகளில் இது நடக்கிறது. எங்கட சமூகத்திலயும் இதுதான் நடக்கிறது. இதுபற்றி விரிவா தனியொரு பதிவாக எழுதிப்போடுறன். இப்ப வாறன்.
மரணதண்டனை கூட பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் நடைமுறையில் இருக்கிறது. அதற்காக இன்னார் செய்வது சரி, இன்னார் செய்வது பிழை என்று ஒரேயடியாகத் தீர்ப்புக்கூற முடியுமா?
தற்பால் திருமணத்துக்கு இரண்டொரு நாடுகள் அனுமதியளித்துள்ளன. மற்றவை அளிக்கவில்லை. யார் சரி. யார் பிழை?
சரி. இவை அனுமதியளிக்கப்படாத நாடுகளில் அவற்றைப்பற்றிக் கதைப்பதில்லையா? பாராளுமன்றங்களில்கூட பகிரங்கவிவாதம் நடக்கிறது.
இது தமிமீழத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்று சொல்வது இங்குமட்டும்தான் நடக்கிறது.
கருத்துக்களால் இவற்றைத் தீயவையென்று மறுக்க முடியாத, மறுக்கத் திராணியற்றவர்களின் கூச்சல் தான் இவைகள்.
சரி. பெரிய பண்பாடு, ஒழுக்கம் பற்றிக் கதைப்பவர்களே, இந்த விவாதத்தைக்கூட எதிர்கொள்ளப் பயப்படும் உங்கள் உயர்ந்த பண்பாட்டுக் கட்டமைப்பு எத்தகையது. கதைத்தாலே எல்லாம சிதறி மக்கள் வழிதவறிப்போய்விடுவர் என்று பயப்படும் உங்கள் பண்பாட்டு இறுக்கம் எத்தகையது?
எல்லாம் வெறும் கோறைதான். வெறும் சோத்தி மரங்கள்தான். முழுக்க முழுக்கப் பலவீனமான மக்கள் சமுதாயம்தான் எங்களது என்று நிங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.
சும்மாவொரு கவிதை பார்த்தாலே எங்கட சனம் குழம்பி சமூகக் கட்மைப்புக் குலைந்துபோறதெண்டா, எவ்வளவு பலவீனமான சமுதாயம் எங்களது?
இதை நான் சொல்லவில்லை. இங்கே கூப்பாடு போடுபவர்கள் சொல்கிறார்கள்.
"உவங்களெல்லாம் கூடி ஏதோ பாலியல் அரட்டை அடிக்கப்போகிறார்கள். ஐயகோ! அதெப்படி இன்னொருத்தன் உப்பிடி சுகம் அடையலாம்? உவங்கள விடக்கூடாது."
என்பது போன்ற மனநிலையும் காரணமாக இருக்கலாம். அல்லது இன்னொருவரைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதன்மூலம் அவர்களைப் பயப்படுத்தி ஒதுங்கவைக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். "நீயும் அப்படித்தான். நீ விபச்சாரி. உன்ர தங்கச்சியை அனுப்பிவை. நீ எந்த நேரமும் அந்த யோசினையில தான் திரியிறனி" என்றவாறாகச் சொல்லி மற்றவர்களைப் பயப்படுத்தி விவாதத்திலிருந்து ஒதுங்கச் செய்வதுதான் அது.
கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் முதல்வேலை குடும்பத்தை இழுப்பது. நடிகைக்கு ஆதரவாகக் கதைக்கும் பெண்ணை, நீயும் விபச்சாரிபோல கிடக்கு எண்டு சொல்லி ஒதுங்கச் செய்வது முதல் பலதரப்பட்ட நிலைகளில் இது நடக்கிறது. எங்கட சமூகத்திலயும் இதுதான் நடக்கிறது. இதுபற்றி விரிவா தனியொரு பதிவாக எழுதிப்போடுறன். இப்ப வாறன்.

