10-25-2005, 12:27 AM
பிருந்தன் எனக்கு இந்த பிற் 'கோக்கு'வாதம் முற்'பெப்சி' வாதம் எல்லாம் எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்தது இலக்கியம் என்பது பொய்யும் புனைசுருட்டுமாக இல்லாமல் யதார்த்தமாக இருக்கவேண்டும்.
பிருந்தன் அவ்வையாரும் வள்ளுவரும் இன்னும் சங்ககாலத்தில் திணைக்கொரு ஒழுக்கம் சொல்லி களவியல் பற்றியெல்லாம் பாடி வைத்தவர்கள் தமிழர்கள் இல்லை தமிழ்க்கலாச்சாரத்தைப் பாடவில்லை என்று சொல்ல வருகிறீர்களா.நீங்கள் மட்டும்தான் தமிழர் நீங்கள் நினைத்தது தான் தமிழர் கலாச்சாரம் என்று வாதிடுவது பூனை கண்ணை மூடிக்கொண்டுவிட்டது போலத் தான் எனக்குப் படுகிறது.
கண்ணகி மட்டுமல்ல மாதவியும் தமிழ் நாட்டில் தமிழ்க்கலாச்சாரத்தில் இருந்துதான் வந்தால்.ஆனானப்பட்ட கம்பனே தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை என்று எழுத்தாதனம் பண்ணிக் கொடுத்தான் என்று சொல்வது அந்தக் காலத்தில் எம்மவர்கள் இதைப் பற்றி தெளிவுடன் இருந்தார்கள் என்பதைக் காட்டத்தான்
அகத்தில் ஒன்று வைத்துப் புறத்தில் இன்னொன்று பாடவில்லை. சொல்லும் செயலும் எழுத்தும் என்றாகவே இருந்தது.
இன்று நாங்கள் பேசுவது போன்று எழுதுவதில்லை.எழுத ஆரம்பித்தாலே எங்களை அறியாப் புனிதம் எங்களிடம் ஒட்டிக்கொண்டுவிடுகிறது.முன்னிரவில் செய்தவற்றை மறந்து விடியற்காலையில் பட்டாடை அணிந்துகொண்டு எழுத ஆரம்பிக்கிறோம்.தமிழ் மொழி பொய்மையாலும் புனைவாலும் நிறைந்துகொண்டே போகிறது.
ஐரோப்பாவில் சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில் இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது ஏனெறால் ஐரோப்பாவிலும் சிங்கப்பூரிலும் வசிக்கும் நீங்களும் நானும் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் எங்களுக்கு பாலியல் சுதந்திரம் உண்டு ஆனால் ஈழத்தில் அவற்றை அனுபவித்துவிடக் கூடாது.
அப்படித்தானே?
சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில்,ஒரு பாலுறவு போன்றவை உள்ள ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் கெட்டுப்போகமாட்டீர்கள் ஆனால் ஈழத்தில் அவை சட்டபூர்வமாக்கப்பட்டால் அவர்கள் கெட்டுப்போவார்கள் ஏனென்றால் அங்கிருப்பவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்கத் தெரியாத அறிவிலிகள்.அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்துக் கொடுக்கும் வேலையை நீங்கள் பார்க்கிறீர்கள்.
யாழ் களத்தில் எழுதக் கூடாது என்பது உங்களின் சுய விருப்பாகவே இருக்கிறதே ஒழிய அதனால் வாசிப்பவர்கள் கெட்டுப்போவார்கள் என்றல்ல.இங்கே எழுதுபவர்களில் 90 சதவீதமானோர் புலத்தில் அதுவும் அதிகமாக ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருக்கிறார்கள் அவர்கள் உள்ள நாடுகளில் பாலியல் பற்றிய பேச்சுகளும் எழுத்துக்களும் வெளிப்படையாக வருகின்றன.அவர்கள் யாழ் களத்தைப் படித்துத் தான் கெட்டுப்போக வேண்டுமென்றில்லை.
யாழ் களம் வெளிப்படையான கருத்தியல் விவாதங்களுக்கானது.அதை புனிதமாகக் கட்டமைக்காதீர்கள்.பலமும் பலவீனமும் இச்சைகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை.அவை இல்லாதவர்கள் இமய மலைக்குத் தவம் செய்யப்போகலாம்.
எனக்குத் தெரிந்தது இலக்கியம் என்பது பொய்யும் புனைசுருட்டுமாக இல்லாமல் யதார்த்தமாக இருக்கவேண்டும்.
பிருந்தன் அவ்வையாரும் வள்ளுவரும் இன்னும் சங்ககாலத்தில் திணைக்கொரு ஒழுக்கம் சொல்லி களவியல் பற்றியெல்லாம் பாடி வைத்தவர்கள் தமிழர்கள் இல்லை தமிழ்க்கலாச்சாரத்தைப் பாடவில்லை என்று சொல்ல வருகிறீர்களா.நீங்கள் மட்டும்தான் தமிழர் நீங்கள் நினைத்தது தான் தமிழர் கலாச்சாரம் என்று வாதிடுவது பூனை கண்ணை மூடிக்கொண்டுவிட்டது போலத் தான் எனக்குப் படுகிறது.
கண்ணகி மட்டுமல்ல மாதவியும் தமிழ் நாட்டில் தமிழ்க்கலாச்சாரத்தில் இருந்துதான் வந்தால்.ஆனானப்பட்ட கம்பனே தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை என்று எழுத்தாதனம் பண்ணிக் கொடுத்தான் என்று சொல்வது அந்தக் காலத்தில் எம்மவர்கள் இதைப் பற்றி தெளிவுடன் இருந்தார்கள் என்பதைக் காட்டத்தான்
அகத்தில் ஒன்று வைத்துப் புறத்தில் இன்னொன்று பாடவில்லை. சொல்லும் செயலும் எழுத்தும் என்றாகவே இருந்தது.
இன்று நாங்கள் பேசுவது போன்று எழுதுவதில்லை.எழுத ஆரம்பித்தாலே எங்களை அறியாப் புனிதம் எங்களிடம் ஒட்டிக்கொண்டுவிடுகிறது.முன்னிரவில் செய்தவற்றை மறந்து விடியற்காலையில் பட்டாடை அணிந்துகொண்டு எழுத ஆரம்பிக்கிறோம்.தமிழ் மொழி பொய்மையாலும் புனைவாலும் நிறைந்துகொண்டே போகிறது.
ஐரோப்பாவில் சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில் இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது ஏனெறால் ஐரோப்பாவிலும் சிங்கப்பூரிலும் வசிக்கும் நீங்களும் நானும் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் எங்களுக்கு பாலியல் சுதந்திரம் உண்டு ஆனால் ஈழத்தில் அவற்றை அனுபவித்துவிடக் கூடாது.
அப்படித்தானே?
சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில்,ஒரு பாலுறவு போன்றவை உள்ள ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் கெட்டுப்போகமாட்டீர்கள் ஆனால் ஈழத்தில் அவை சட்டபூர்வமாக்கப்பட்டால் அவர்கள் கெட்டுப்போவார்கள் ஏனென்றால் அங்கிருப்பவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்கத் தெரியாத அறிவிலிகள்.அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்துக் கொடுக்கும் வேலையை நீங்கள் பார்க்கிறீர்கள்.
யாழ் களத்தில் எழுதக் கூடாது என்பது உங்களின் சுய விருப்பாகவே இருக்கிறதே ஒழிய அதனால் வாசிப்பவர்கள் கெட்டுப்போவார்கள் என்றல்ல.இங்கே எழுதுபவர்களில் 90 சதவீதமானோர் புலத்தில் அதுவும் அதிகமாக ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருக்கிறார்கள் அவர்கள் உள்ள நாடுகளில் பாலியல் பற்றிய பேச்சுகளும் எழுத்துக்களும் வெளிப்படையாக வருகின்றன.அவர்கள் யாழ் களத்தைப் படித்துத் தான் கெட்டுப்போக வேண்டுமென்றில்லை.
யாழ் களம் வெளிப்படையான கருத்தியல் விவாதங்களுக்கானது.அதை புனிதமாகக் கட்டமைக்காதீர்கள்.பலமும் பலவீனமும் இச்சைகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை.அவை இல்லாதவர்கள் இமய மலைக்குத் தவம் செய்யப்போகலாம்.
\" \"

