11-22-2003, 06:03 PM
வெளிநாட்டில் வசிக்கும் எமது பெரும்பான்மை மக்கள் இயந்திரமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கும்;; குழந்தைகளுக்குமிடையே இடைவெளி அதிகரித்துவிட்டது. குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர்களால்; போதிய நேரம் ஒதுக்க முடியவில்;லை. பெரும்பான்மைக்குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. பண்பாடு பாதிதான் புகட்டப்பட்டுள்ளது. இன்று இது பெரிதாக தெரியாவிட்டாலும் நாளை இது புரையோடி வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த எமது சொந்தங்கள் அந்த சொந்தங்கள் பெற்றெடுத்த சொந்தங்;கள் எம்மைவிட்டு அந்நியப்;பட்டுவிடுவார்களோ என அஞ்சவேண்டியுள்ளது. எமது அடுத்த தலைமுறை வெள்ளையனாகிவிடுவதை நாம் தாங்கிக்கொள்ளமுடியுமா? ஒரு நிமிடம் சிந்;திப்போம்.
இன்னொரு மொழியினர் எம்மை இதுவரை வேண்டுமென்றே அழித்து ஒடுக்கி வந்தனர். அவை உணரப்பட்டு ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் எம் இளைய சமுதாயம் மறைமுகமாக அழிந்துகொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மொழி மறந்துவிட்டது. எம் பண்பாடு தெரியவில்லை. இதையெல்லாம் கற்றுக்கொடுக்க, அவர்களை வழிநடத்த, அவர்களின் பெற்றோருக்;கு வழிகாட்ட, நாம் ஏன் ஒன்று சேரக்கூடாது.
சின்ன சின்னதாய் ஏதாவது செய்வோம். விருப்பப்ட்டவர்கள் உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டு நீங்களும் இணைகின்றதாய் எழுதுங்கள். இதில் யாரும் பெரியவர் சிறியவர் இல்லை. பலரிடம் ஆலோசித்து ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்துவோம். முடிந்தால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு இந்துக்கல்லூரியை ஆரம்பிப்போம். இதை செயற்படுத்தப்போவது நீங்கள் ஒவ்வொருவரும்.
இன்னொரு மொழியினர் எம்மை இதுவரை வேண்டுமென்றே அழித்து ஒடுக்கி வந்தனர். அவை உணரப்பட்டு ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் எம் இளைய சமுதாயம் மறைமுகமாக அழிந்துகொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மொழி மறந்துவிட்டது. எம் பண்பாடு தெரியவில்லை. இதையெல்லாம் கற்றுக்கொடுக்க, அவர்களை வழிநடத்த, அவர்களின் பெற்றோருக்;கு வழிகாட்ட, நாம் ஏன் ஒன்று சேரக்கூடாது.
சின்ன சின்னதாய் ஏதாவது செய்வோம். விருப்பப்ட்டவர்கள் உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டு நீங்களும் இணைகின்றதாய் எழுதுங்கள். இதில் யாரும் பெரியவர் சிறியவர் இல்லை. பலரிடம் ஆலோசித்து ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்துவோம். முடிந்தால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு இந்துக்கல்லூரியை ஆரம்பிப்போம். இதை செயற்படுத்தப்போவது நீங்கள் ஒவ்வொருவரும்.

