Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெ.கரிகாலனின் கவிதைகள்
#10
இருண்டவெளிகள் 3


கொதித்துக் கொப்பளிக்கும்
கடல்பரப்பின் வெகுஉயரே
உயிர் துரத்திப் பறக்கின்றன -
வெளி கடக்கும் நாரைகள்.


கடலின் ஆழத்தில்
வெடித்தன பாறைகள்.
கெண்டை மீன்கள்,
தங்கக் குஞ்சுகள் -
நம்பிவிட்டன தொட்டிகளை

இரும்புக்கூண்டுகளுக்குள்
பெரிய குருவிகள் சொல்கிற கதை
ஓமரத்தின் சாவு

எங்கிருந்தோ கேட்கிறது
வெடித்த இதயங்களின் மீது
சொட்டி ஒலிக்கும் கருணை.

உயிர்ப்பைக் கொல்லும்
விஞ்ஞானிக்கு விளங்காதது
உயிரின் பூத்தல்.

அதிர்வுகள் உண்டாக்கிய
பாவத்தெறிப்புகளின் வழி
உள்ளொழுகி இறங்கியது -
தேவதையின் மெல்லியகானம்.

எங்கும் இறைந்து கிடக்கின்றன
கவிதையின் லிபிக்கள்-
சிதைந்த கவிஞனின்
சதைத் துண்டுகளோடு.

மனிதனைப் பற்றி
இன்னும் விளங்குவதாயில்லை.
எந்த நரகத்திலிருந்து வந்தார்கள்
இந்த உலகத்திற்கு?!

தொடரும்...


----- -----
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 10-12-2005, 06:07 PM
[No subject] - by inthirajith - 10-12-2005, 07:33 PM
[No subject] - by கரிகாலன் - 10-13-2005, 01:03 AM
[No subject] - by இளைஞன் - 10-14-2005, 07:06 AM
[No subject] - by கரிகாலன் - 10-17-2005, 02:52 AM
[No subject] - by RaMa - 10-17-2005, 04:27 AM
[No subject] - by kuruvikal - 10-17-2005, 06:33 AM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:40 PM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 01:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)