10-24-2005, 01:40 PM
இருண்டவெளிகள் 3
கொதித்துக் கொப்பளிக்கும்
கடல்பரப்பின் வெகுஉயரே
உயிர் துரத்திப் பறக்கின்றன -
வெளி கடக்கும் நாரைகள்.
கடலின் ஆழத்தில்
வெடித்தன பாறைகள்.
கெண்டை மீன்கள்,
தங்கக் குஞ்சுகள் -
நம்பிவிட்டன தொட்டிகளை
இரும்புக்கூண்டுகளுக்குள்
பெரிய குருவிகள் சொல்கிற கதை
ஓமரத்தின் சாவு
எங்கிருந்தோ கேட்கிறது
வெடித்த இதயங்களின் மீது
சொட்டி ஒலிக்கும் கருணை.
உயிர்ப்பைக் கொல்லும்
விஞ்ஞானிக்கு விளங்காதது
உயிரின் பூத்தல்.
அதிர்வுகள் உண்டாக்கிய
பாவத்தெறிப்புகளின் வழி
உள்ளொழுகி இறங்கியது -
தேவதையின் மெல்லியகானம்.
எங்கும் இறைந்து கிடக்கின்றன
கவிதையின் லிபிக்கள்-
சிதைந்த கவிஞனின்
சதைத் துண்டுகளோடு.
மனிதனைப் பற்றி
இன்னும் விளங்குவதாயில்லை.
எந்த நரகத்திலிருந்து வந்தார்கள்
இந்த உலகத்திற்கு?!
தொடரும்...
கொதித்துக் கொப்பளிக்கும்
கடல்பரப்பின் வெகுஉயரே
உயிர் துரத்திப் பறக்கின்றன -
வெளி கடக்கும் நாரைகள்.
கடலின் ஆழத்தில்
வெடித்தன பாறைகள்.
கெண்டை மீன்கள்,
தங்கக் குஞ்சுகள் -
நம்பிவிட்டன தொட்டிகளை
இரும்புக்கூண்டுகளுக்குள்
பெரிய குருவிகள் சொல்கிற கதை
ஓமரத்தின் சாவு
எங்கிருந்தோ கேட்கிறது
வெடித்த இதயங்களின் மீது
சொட்டி ஒலிக்கும் கருணை.
உயிர்ப்பைக் கொல்லும்
விஞ்ஞானிக்கு விளங்காதது
உயிரின் பூத்தல்.
அதிர்வுகள் உண்டாக்கிய
பாவத்தெறிப்புகளின் வழி
உள்ளொழுகி இறங்கியது -
தேவதையின் மெல்லியகானம்.
எங்கும் இறைந்து கிடக்கின்றன
கவிதையின் லிபிக்கள்-
சிதைந்த கவிஞனின்
சதைத் துண்டுகளோடு.
மனிதனைப் பற்றி
இன்னும் விளங்குவதாயில்லை.
எந்த நரகத்திலிருந்து வந்தார்கள்
இந்த உலகத்திற்கு?!
தொடரும்...
----- -----

