10-24-2005, 12:20 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>முகத்தார் வீடு - அங்கம் - 5</b></span>
காலை : 7 மணி
பொண்ணம்மா : என்னப்பா மணி 7 ஆகுது எழும்புங்கோவன்
முகத்தார் : என்ன இண்டைக்கு ஒருநாள் வேளைக்கு எழும்பிப்போட்டு என்னையும் எழுப்பிறீர் என்ன விசயம்?
பொண்ணம்மா : ஜயோ இந்த மனுசனுக்கு ஒண்டும் ஞாபகமிராது உந்த கணேசன்ஸ் டெக்ஸ்ரைலிலை தீபாவளி சேல் போட்டிருக்கிறாங்கள் வேளைக்குப் போனால்தான் முன்னுக்கு நிக்கலாம் எண்டு நேற்றுச் சொன்னனான் எல்லோ மறந்திட்டியளே. .
முகத்தார் : உவங்களும் பழைய சாமான்களை விக்கிறதுக்கு புது விளையாட்டைக்; கண்டுபிடிச்சு சேல் எண்டு போடுறாங்கள் அதுசரி போணமுறை வாங்கின சீலையள் இருக்குத்தானே பிறகும் என்னத்துக்கப்பா
பொண்ணம்மா : அது போணவருஷம் இது இந்த வருஷம் அதோடையப்பா 4மணித்தியாலத்துக்கு மேலை கடைக்குள்ளை இருந்து புடவை எடுத்தா மத்தியாண சாப்பாடும் குடுக்கிறாங்கலாம்
முகத்தார் : அப்ப நானும் வாறன் இண்டைய பொழுதை கழிச்சிடலாம்
பொண்ணம்மா : எங்கை பெம்பிளையள் கூட்டம் நிப்பினம் நுழைவம் எண்டு பாக்கிறீயள் என்ன நீங்க ஓண்டும் உள்ளுக்கை வரவேண்டாம் கடையடி மட்டும் வந்தாக் காணும்
முகத்தார் : அப்ப நீர்; மட்டும் போட்டு வாருமன் நான் என்னத்துக்;கு வீணா
பொண்ணம்மா : உங்களுக்கு விளங்காது இப்ப நான் தனியப் போனால் பாக்கிற சனங்கள் என்ன சொல்லும் பொண்ணம்மா ஆட்டத்திலை வெளிக்கிட்டுட்டாள் எண்டு உங்களோடை போனால் புருஷனோடை அடக்கமா போறாள் என்பினம்தானே.
முகத்தார் : கேட்கவே சந்தோஷமா கிடக்கு அப்பிடியே அதை வீட்டிலையும் போலோ பண்ணினீர் எண்டா எவ்வளவு நல்லம்
பொண்ணம்மா : அப்பதான் இன்னும் நீங்கள் கூத்தடிக்க வசதியா இருக்கும் என்ன
முகத்தார் : சரி விடும் இப்ப உமக்கு கடையிலை சாப்பாடு எண்டா என்ரை பாடு என்ன தனியச் சமைக்கட்டோ?
பொண்ணம்மா : உங்களுக்கென்ன விசரேயப்பா வீணா அரிசியை அநியாயம் ஆக்காமல் உந்த அம்மன் கோயிலிலை அன்னதானமாம் என்னை விட்டுட்டு வந்து வாங்கிச் சாப்பிடுங்கோ
முகத்தார் : இதிலும் பாக்க ஒரு கிண்ணத்தை எடுத்துத் தாருமன் 4 வீட்டைப் போய் வாங்கிச் சாப்பிடுறன்
பொண்ணம்மா : சும்மா அலம்பிக் கொண்டிருக்காமல் எழும்பி வெளிக்கிடுங்கோ பாப்பம்
(முகத்தார் வெளிக்கிட்டு மனுசியை சைக்கிளிலை ஏத்திக் கொண்டு சுன்னாக சந்திக்குப் போறார் சைக்கிலை நிப்பாட்டியிட்டு திரும்பிப் பாத்தா சாத்திரியார் சுழண்டு கொண்டு நிக்கிறார்)
முகத்தார் : இஞ்சரும் உந்தா சாத்திரி நிக்கிறான் என்ன எண்டு கேட்டுட்டு வாறன் நிண்டு கொள்ளும்
முகத்தார் : என்ன சாத்திரி இஞ்சை சுத்திக் கொண்டு நிக்கிறாய்
சாத்திரி : இந்த கோதாரி விழுந்தவன் சேல் எண்டு போட்டு மனுசருக்:கு வீட்டிலை நிம்மதியில்லை உதுக்கைதான் முனியம்மாவும் நிக்கிறாள்
முகத்தார் : கொஞ்சம் பொறு நம்மடையும் வந்திருக்கு முனியம்மாவோடை கோத்து விட்டுட்டு வாறன்
(கூட்டத்துக்கை ஒரு மாதிரி முனியம்மாவை கண்டு பிடிச்;சு பொண்ணம்மா சேத்து விட்டுட்டு திரும்பி வந்தார் முகத்தார்)
முகத்தார் : சாத்திரி உவளவை எடுத்து முடிய 3 .4 மணித்தியாலம் செல்லும் வா இந்த தேத்தண்ணிக் கடையுக்கை இருப்பம்
சாத்திரி : நீயும் காசில்லை காசில்லை எண்டு போட்டு மனுசிக்கு எடுத்துக் குடுக்கிறாய் என்ன
முகத்தார் : பிள்ளையள் அனுப்பிற காசை எங்கை என்ரை கண்ணிலை காட்டுறாள் எல்லாம் அவனின்ரை கொண்ரோல் தானடா
சாத்திரி : ஒரு பிளேன் hP அடிச்சா நல்லா இருக்கும் சொல்லட்டே?
முகத்தார் : ஓம். . .ஓம். . பிறகு பேப்பருகள் பாத்தியோ சிறீலங்கா விமானப்படை பிளேன் ஒண்டு வன்னி பகுதிக்கை விழுந்திட்டுதாம் கேள்விப்பட்டியோ?
சாத்திரி : எப்ப நடந்தது பெரிசா வெளியிலை வரேலை கனபேர் காலியோ
முகத்தார் : நீ பேப்பர் பாக்கேலை எண்டு சொல்லு அது ஆட்களோடை விழேலை ஆளில்லாமல் பறக்கிற விமானம் யுத்த காலத்திலை எதிரிகளின்ரை நிலையை அறியிறத்துக்குப் பயன்படுத்திறவை
சாத்திரி : இப்ப எங்கடை இடத்திலைதான் யுத்தமில்லையே பிறகெதுக்கு உது பறந்ததாம்
முகத்தார் : ஆர் கேக்கிறது இது எங்கடை பெடியளின்ரை நிலைகளை படமெடுத்து தகவல் அறியத்தான் வந்திருக்கும்
சாத்திரி : முகத்தான் அப்ப இதை பெடியள்தான் அடிச்சு விழுத்தினாங்களோ தெரியாது என்ன
முகத்தார் : அதைப்பற்றி செய்தி ஒண்டும் வரேலை ஆனா இராணுவத்தாலை சொல்லியிருக்கினம் விமானம் விபத்துக்குள்ளானது எண்டு அதோடை வான் பரப்பு தங்களுக்குத்தான் சொத்தம் எண்டும் ஆனபடியால் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லையாம்
சாத்திரி : அப்ப எல்லாம் ரெடிப்பண்ணினம் எண்டு சொல்லுறாய் முகத்தான் இவர் டக்ளஸ் பிள்ளையும் மகிந்தாவுக்கு ஆதரிப்பது எண்டு நோட்டீஸ் அடிச்சு ரவுனிலையும் றிங்கோவிலையும் ஒட்டியிருக்கினமாம்
முகத்தார் : இது தெரிஞ்ச விசயம்தானே எதோ தமிழ் மக்களுக் கெண்டு 10 கோரிக்கைகளை எழுதி மகிந்தாட்டைக் குடுத்தாராம் அவரும் ஓகோ சொல்லிப்போட்டாராம்
சாத்திரி : பாரன் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை எழுதிக் கேட்டுட்டு தமிழ் மக்கள் எண்டு விடுகிற வடிவை.
முகத்தார் : இவர் திடீரென மகிந்தாட்டைப் போய் கதைச்சதாலை அம்மாக்கும் லேசான மனக்கசப்பாம் பிறகு இவர் அம்மாவை சந்திக்க கேக்க மறுத்திட்டாவாம்
சாத்திரி : பின்னை மனுசிக்கு கோவம் வரும்தானே உவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது ஆர் மனுசிதானே மகிந்தாட்டை கதைக்கமுன்னம் மனுசிட்டை ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம்
முகத்தார் : அவரும் பாத்தார் மனுசின்ரை ஆட்டம் இன்னும் கொஞ்ச நாளிலை சரி அப்ப இனி மகிந்தாவை பிடிப்பம் எண்டு
சாத்திரி : அப்ப சொல்லுறாய் எலும்புத்துண்டை ஆர் போட்டாலும் கவ்வுறத்துக்கு ரெடி எண்டு நல்ல விசயம்
முகத்தார் : சாத்திரி மெல்லக் கதை ரோட்டிலை மோட்டாசைக்கிள் சத்தம் கேக்குது
சாத்திரி : அப்ப வாவன் அப்பிடியே போய் புடவைக்கடைக்குப் பக்கத்திலை நிப்பம்
(இருவரும் புடவைக்கடையடிக்கு வரவும் பொண்ணம்மாக்காவும் முனியம்மாவும் பைகளுடன் வெளியிலை வருகிறார்கள்)
முகத்தார் : சாத்திரி அதிசயத்தைப்பாரன் பெண்டுகள் சொப்பிங் முடிச்சிட்டினம் போல கிடக்கு
பொண்ணம்மா : என்னப்பா இன்னும் போகலையே நல்லதாப் போச்சு கடைக்கிலை நிலமையைப் பாத்தா சாப்பாடு போடுற மாதிரி தெரியேலை அதுதான் மினைக்கிடாமல் எடுத்தவுடனை வந்திட்டம்
முகத்தார் : அது சரி என்ன எடுத்தனீர்? எனக்கு 2 ஜட்டி எடுக்கச் சொன்னன் எடுத்தனீரோ?
பொண்ணம்மா: என்ன விவஸ்த்தை கெட்ட மனுசனாக்கிடக்கு உங்களுக்கு இப்ப என்னத்துக்கு ஜட்டி வீட்டை வாங்கோ பழைய சீலை கிடக்கு கிழிச்சுத்தாறன் ரோட்டிலை என்ரை மானத்தை வாங்காம நடவுங்கோ பாப்பம்
முகத்தார் : (மனசுக்குள்) சா. . . .கொஞ்சமாவது முன்னேறுவம் எண்டு பாத்தா விடமாட்டாளவை. . . . . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>(யாவும் கற்பனை)</b>
காலை : 7 மணி
பொண்ணம்மா : என்னப்பா மணி 7 ஆகுது எழும்புங்கோவன்
முகத்தார் : என்ன இண்டைக்கு ஒருநாள் வேளைக்கு எழும்பிப்போட்டு என்னையும் எழுப்பிறீர் என்ன விசயம்?
பொண்ணம்மா : ஜயோ இந்த மனுசனுக்கு ஒண்டும் ஞாபகமிராது உந்த கணேசன்ஸ் டெக்ஸ்ரைலிலை தீபாவளி சேல் போட்டிருக்கிறாங்கள் வேளைக்குப் போனால்தான் முன்னுக்கு நிக்கலாம் எண்டு நேற்றுச் சொன்னனான் எல்லோ மறந்திட்டியளே. .
முகத்தார் : உவங்களும் பழைய சாமான்களை விக்கிறதுக்கு புது விளையாட்டைக்; கண்டுபிடிச்சு சேல் எண்டு போடுறாங்கள் அதுசரி போணமுறை வாங்கின சீலையள் இருக்குத்தானே பிறகும் என்னத்துக்கப்பா
பொண்ணம்மா : அது போணவருஷம் இது இந்த வருஷம் அதோடையப்பா 4மணித்தியாலத்துக்கு மேலை கடைக்குள்ளை இருந்து புடவை எடுத்தா மத்தியாண சாப்பாடும் குடுக்கிறாங்கலாம்
முகத்தார் : அப்ப நானும் வாறன் இண்டைய பொழுதை கழிச்சிடலாம்
பொண்ணம்மா : எங்கை பெம்பிளையள் கூட்டம் நிப்பினம் நுழைவம் எண்டு பாக்கிறீயள் என்ன நீங்க ஓண்டும் உள்ளுக்கை வரவேண்டாம் கடையடி மட்டும் வந்தாக் காணும்
முகத்தார் : அப்ப நீர்; மட்டும் போட்டு வாருமன் நான் என்னத்துக்;கு வீணா
பொண்ணம்மா : உங்களுக்கு விளங்காது இப்ப நான் தனியப் போனால் பாக்கிற சனங்கள் என்ன சொல்லும் பொண்ணம்மா ஆட்டத்திலை வெளிக்கிட்டுட்டாள் எண்டு உங்களோடை போனால் புருஷனோடை அடக்கமா போறாள் என்பினம்தானே.
முகத்தார் : கேட்கவே சந்தோஷமா கிடக்கு அப்பிடியே அதை வீட்டிலையும் போலோ பண்ணினீர் எண்டா எவ்வளவு நல்லம்
பொண்ணம்மா : அப்பதான் இன்னும் நீங்கள் கூத்தடிக்க வசதியா இருக்கும் என்ன
முகத்தார் : சரி விடும் இப்ப உமக்கு கடையிலை சாப்பாடு எண்டா என்ரை பாடு என்ன தனியச் சமைக்கட்டோ?
பொண்ணம்மா : உங்களுக்கென்ன விசரேயப்பா வீணா அரிசியை அநியாயம் ஆக்காமல் உந்த அம்மன் கோயிலிலை அன்னதானமாம் என்னை விட்டுட்டு வந்து வாங்கிச் சாப்பிடுங்கோ
முகத்தார் : இதிலும் பாக்க ஒரு கிண்ணத்தை எடுத்துத் தாருமன் 4 வீட்டைப் போய் வாங்கிச் சாப்பிடுறன்
பொண்ணம்மா : சும்மா அலம்பிக் கொண்டிருக்காமல் எழும்பி வெளிக்கிடுங்கோ பாப்பம்
(முகத்தார் வெளிக்கிட்டு மனுசியை சைக்கிளிலை ஏத்திக் கொண்டு சுன்னாக சந்திக்குப் போறார் சைக்கிலை நிப்பாட்டியிட்டு திரும்பிப் பாத்தா சாத்திரியார் சுழண்டு கொண்டு நிக்கிறார்)
முகத்தார் : இஞ்சரும் உந்தா சாத்திரி நிக்கிறான் என்ன எண்டு கேட்டுட்டு வாறன் நிண்டு கொள்ளும்
முகத்தார் : என்ன சாத்திரி இஞ்சை சுத்திக் கொண்டு நிக்கிறாய்
சாத்திரி : இந்த கோதாரி விழுந்தவன் சேல் எண்டு போட்டு மனுசருக்:கு வீட்டிலை நிம்மதியில்லை உதுக்கைதான் முனியம்மாவும் நிக்கிறாள்
முகத்தார் : கொஞ்சம் பொறு நம்மடையும் வந்திருக்கு முனியம்மாவோடை கோத்து விட்டுட்டு வாறன்
(கூட்டத்துக்கை ஒரு மாதிரி முனியம்மாவை கண்டு பிடிச்;சு பொண்ணம்மா சேத்து விட்டுட்டு திரும்பி வந்தார் முகத்தார்)
முகத்தார் : சாத்திரி உவளவை எடுத்து முடிய 3 .4 மணித்தியாலம் செல்லும் வா இந்த தேத்தண்ணிக் கடையுக்கை இருப்பம்
சாத்திரி : நீயும் காசில்லை காசில்லை எண்டு போட்டு மனுசிக்கு எடுத்துக் குடுக்கிறாய் என்ன
முகத்தார் : பிள்ளையள் அனுப்பிற காசை எங்கை என்ரை கண்ணிலை காட்டுறாள் எல்லாம் அவனின்ரை கொண்ரோல் தானடா
சாத்திரி : ஒரு பிளேன் hP அடிச்சா நல்லா இருக்கும் சொல்லட்டே?
முகத்தார் : ஓம். . .ஓம். . பிறகு பேப்பருகள் பாத்தியோ சிறீலங்கா விமானப்படை பிளேன் ஒண்டு வன்னி பகுதிக்கை விழுந்திட்டுதாம் கேள்விப்பட்டியோ?
சாத்திரி : எப்ப நடந்தது பெரிசா வெளியிலை வரேலை கனபேர் காலியோ
முகத்தார் : நீ பேப்பர் பாக்கேலை எண்டு சொல்லு அது ஆட்களோடை விழேலை ஆளில்லாமல் பறக்கிற விமானம் யுத்த காலத்திலை எதிரிகளின்ரை நிலையை அறியிறத்துக்குப் பயன்படுத்திறவை
சாத்திரி : இப்ப எங்கடை இடத்திலைதான் யுத்தமில்லையே பிறகெதுக்கு உது பறந்ததாம்
முகத்தார் : ஆர் கேக்கிறது இது எங்கடை பெடியளின்ரை நிலைகளை படமெடுத்து தகவல் அறியத்தான் வந்திருக்கும்
சாத்திரி : முகத்தான் அப்ப இதை பெடியள்தான் அடிச்சு விழுத்தினாங்களோ தெரியாது என்ன
முகத்தார் : அதைப்பற்றி செய்தி ஒண்டும் வரேலை ஆனா இராணுவத்தாலை சொல்லியிருக்கினம் விமானம் விபத்துக்குள்ளானது எண்டு அதோடை வான் பரப்பு தங்களுக்குத்தான் சொத்தம் எண்டும் ஆனபடியால் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லையாம்
சாத்திரி : அப்ப எல்லாம் ரெடிப்பண்ணினம் எண்டு சொல்லுறாய் முகத்தான் இவர் டக்ளஸ் பிள்ளையும் மகிந்தாவுக்கு ஆதரிப்பது எண்டு நோட்டீஸ் அடிச்சு ரவுனிலையும் றிங்கோவிலையும் ஒட்டியிருக்கினமாம்
முகத்தார் : இது தெரிஞ்ச விசயம்தானே எதோ தமிழ் மக்களுக் கெண்டு 10 கோரிக்கைகளை எழுதி மகிந்தாட்டைக் குடுத்தாராம் அவரும் ஓகோ சொல்லிப்போட்டாராம்
சாத்திரி : பாரன் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை எழுதிக் கேட்டுட்டு தமிழ் மக்கள் எண்டு விடுகிற வடிவை.
முகத்தார் : இவர் திடீரென மகிந்தாட்டைப் போய் கதைச்சதாலை அம்மாக்கும் லேசான மனக்கசப்பாம் பிறகு இவர் அம்மாவை சந்திக்க கேக்க மறுத்திட்டாவாம்
சாத்திரி : பின்னை மனுசிக்கு கோவம் வரும்தானே உவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது ஆர் மனுசிதானே மகிந்தாட்டை கதைக்கமுன்னம் மனுசிட்டை ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம்
முகத்தார் : அவரும் பாத்தார் மனுசின்ரை ஆட்டம் இன்னும் கொஞ்ச நாளிலை சரி அப்ப இனி மகிந்தாவை பிடிப்பம் எண்டு
சாத்திரி : அப்ப சொல்லுறாய் எலும்புத்துண்டை ஆர் போட்டாலும் கவ்வுறத்துக்கு ரெடி எண்டு நல்ல விசயம்
முகத்தார் : சாத்திரி மெல்லக் கதை ரோட்டிலை மோட்டாசைக்கிள் சத்தம் கேக்குது
சாத்திரி : அப்ப வாவன் அப்பிடியே போய் புடவைக்கடைக்குப் பக்கத்திலை நிப்பம்
(இருவரும் புடவைக்கடையடிக்கு வரவும் பொண்ணம்மாக்காவும் முனியம்மாவும் பைகளுடன் வெளியிலை வருகிறார்கள்)
முகத்தார் : சாத்திரி அதிசயத்தைப்பாரன் பெண்டுகள் சொப்பிங் முடிச்சிட்டினம் போல கிடக்கு
பொண்ணம்மா : என்னப்பா இன்னும் போகலையே நல்லதாப் போச்சு கடைக்கிலை நிலமையைப் பாத்தா சாப்பாடு போடுற மாதிரி தெரியேலை அதுதான் மினைக்கிடாமல் எடுத்தவுடனை வந்திட்டம்
முகத்தார் : அது சரி என்ன எடுத்தனீர்? எனக்கு 2 ஜட்டி எடுக்கச் சொன்னன் எடுத்தனீரோ?
பொண்ணம்மா: என்ன விவஸ்த்தை கெட்ட மனுசனாக்கிடக்கு உங்களுக்கு இப்ப என்னத்துக்கு ஜட்டி வீட்டை வாங்கோ பழைய சீலை கிடக்கு கிழிச்சுத்தாறன் ரோட்டிலை என்ரை மானத்தை வாங்காம நடவுங்கோ பாப்பம்
முகத்தார் : (மனசுக்குள்) சா. . . .கொஞ்சமாவது முன்னேறுவம் எண்டு பாத்தா விடமாட்டாளவை. . . . . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>(யாவும் கற்பனை)</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


