10-23-2005, 02:22 AM
nallavan Wrote:அப்பிடிப் போடுங்கோ பிருந்தன் அண்ணோய்.
அப்ப நானும் வாறன் எண்டு முன்னுக்கு ஓரிடத்தில சொன்னது என்னத்துக்கு?
இதுகள் கதைக்கக்கூடாத விசயங்கள் எண்ட உங்கட பார்வையைத் தெளிவாச் சொன்னதுக்கு நன்றி. அதை, நானும் வாறன் எண்டு சொல்லமுதலே சொல்லியிருக்கலாம். மாறாக அதுக்கு ஆதரவான கருத்து மாதிரி ஒண்டைச் சொல்லிப்போட்டு பிறகு எங்களில பாய்ஞ்சா என்ன அர்த்தம்?
டி.சே யை ஆர் மகாகவியெண்டது? ஈழநாதன் கேட்டது டி.சேயின்ர கவிதையை விவாதிக்கத்தானா? நீங்கள் அடிப்படைக் கேள்வியைப் புறந்தள்ளிவிட்டுக் கதைக்கிறீர்கள். கருத்துக்களம் மூடப்பட்டதைப் பற்றித்தான் கேள்வியே. பிறகு நீங்கள்வந்து அங்க மூடியாச்சு பிறகேன் இங்க வந்து கதைக்கிறியள் எண்டு கேக்கிறது என்ன நியாயம்? அதை உங்கட முதற் கருத்திலயே கேட்டிருந்தாலும் ஒரு நேர்மை இருந்திருக்கும்.
இப்ப வந்து மாத்திச்சொல்லிறது பாக்கிற ஆக்களுக்கு ஏதோ தனிப்பட்ட பிரச்சினை மாதிரித் தெரியும்.
நன்றி.
இவை வாதிக்கப்படக் கூடாதவை என்ற உங்கள் கருத்தைத் தெளிவுபடுத்திவிட்டதால் (இதைக்கூட பிறகு வந்து மாற்றிச் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இனி இவ்விசயம் பற்றி மற்றவர்களிடம்தான் அபிப்பிராயம் கேட்க வேண்டும்..
நன்றி.
நான் சொன்னதை நீங்கள் எப்படி விளங்கிக்கொண்டீர்களோ எனக்குத்தெரியாது, நான் சொன்னது உந்த விவாதங்களை யாழ் களத்தில் விவாதிக்கவேண்டாம் என்றுதான், காரணமும் கூறினேன் இதை பார்ப்பதற்கு சிறுவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று,
அதற்காகத்தான் கூறினேன் நாதனின் பக்கத்தில்தொடங்கசொல்லி நானும் வாறன் என்று,அங்குதானே சிறுவர்கள் வருவதில்லை, எல்லாமே பழப்போட்டுகொட்டை போட்டவர்கள்தான் வருகிறார்கள் என்று, அங்கு எதை விவாதிப்பீர்கள் முலை,யோணி,பிருஷ்டம்,ஓரினச்சேர்க்கை இது போன்ற அரிய கருத்துகள்தானே. நானும் உயிரியல்துறைதான் படித்தேன் வாருங்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுகாணுவோம். ஆதரிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் எதிர்க்க ஒருத்தனும் இல்லாட்டி விவாதம் சப்பென்றுபோய்விடும். புரட்சி புரட்சி எண்டுறியள் இதிலதான் புரட்சி செய்வன் என்றால் என்ன செய்யிறது.
அதுசரி விவாதிக்க வந்தால் தனித்துநின்று விவாதிக்க வேண்டும் அது என்ன இடையில் கூட்டு சேர்க்கிறது, கூட்டு தேடுறது. :wink:
.
.
.

