10-23-2005, 01:21 AM
nallavan Wrote:பிருந்தன் அண்ணோய்,உங்களுக்கு விவாதம் செய்ய வேறுவிடயமே கிடைக்கவில்லையா? டிசேசன் என்ன மகாகவியா? அல்லது உலககவியா? அல்லது கால்மாக்ஸா புரட்சி கருத்து கூறிவிட்டார் விவாதிப்பதற்கு, அதுதானே அந்தவிடயத்துக்கு பூட்டே போட்டாச்சு பிறகு இங்க வந்து தொங்கிக்கொண்டு நிக்கிறியள்,
வணக்கம்.
ஈழநாதனின்ரயில மூண்டைத் தூக்கினதுக்கு அது தொடர்ச்சியா எழுதப்படாதது தான் காரணம். மேலும் அங்கே பதிவுகள் ஏன் தூக்கப்பட்டதென்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.
ஏன் எனக்கு தழிழ் படிக்கத்தெரியாதா? காசி தெளிவாக போட்டிருக்கிறார் என்ன என்ன கரணங்களுக்காக பதிவுகள் தூக்கப்பட்டது என்று, தமிழ் தெரிந்தவர்கள் அனைவருக்கும் படித்தால் விளங்கும். ஏதோ புதினம் மாதிரி சொல்கிறீர்கள் உங்களுக்கு தெரியாது என்று.
ஏதோ பாலியல் பற்ற எழுதினதால்தான் தூக்கப்பட்டதாக நீங்கள் நினைத்து எழுதியிருக்கிறீர்கள். இதைவிடக் கடுமையான வாதங்கள் நடந்த பக்கங்கள் அப்படியேதான் இருக்கிறது. ஏன் நாஞ்சில் நாடனின்கட்டுரை வந்த பக்கம் (ஈழநாதன் இங்கே அதன் இணைப்பைத் தந்துள்ளார். பார்த்தீர்களா?) கூட அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பாலியல் தொழிலைச் சட்டரீதியாக்குதல், ஓரினச்சேர்கை பற்றியெல்லாம் விரிவான விவாதங்கள் நடந்த பதிவுகள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த விவாதத்தால் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து தூக்கப்படுமென்று பயப்படவேண்டிய நிலையில் அங்கே பதியும் யாருமில்லை.
இல்ல தெரியாமல்தான் கேக்கிறேன் உங்களுக்கு நாளும்பொழுதும் உதுதானா சிந்தனை, உலகத்தில் விவாதிக்கவும் கருத்தாடவும் எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது, நாளும் பொழுதும் உங்களுக்கு அதுக்குள்ளேயே சிந்தனை இருக்கு, முதிர்காளையருக்குதான் இப்பிடியான பிரச்சனைகள் இருக்கு என்று எங்கோ ஒருபதிவில் படித்த ஞபகம் இருக்கு, உங்களுக்கும் அதுதான் பிரச்சனை என்றால் வருந்துகிறேன்.
நான் சொல்ல வந்தது. இந்தக் கதைகளை தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் ஒரு பதிவில்,
தமிழ்மணத்தில் அங்கத்துவமாய் இருந்தால் என்ன பெரிய இதுவா? சொந்த புளக்கில் மூண்று பதிவை எழுதிவிட்டு தமிழ்மணத்தில் பதிந்துவிட்டால் பதிந்து கொள்கிறார்கள்.
என்னுடைய பதிவும் ஒண்று இருக்கிறது அப்ப நான் என்ன பெரிய இதுவா? என்ன பூச்சண்டி காட்டிறியள்.
அதுவும் ஈழநாதனின் பதிவுபோல ஒன்றில் எழுதினால் அங்குள்ளவர்கள் சிரிப்பார்கள். ஏன் தெரியுமா? உயர்தர வகுப்பில் வந்து ஆனாஆவன்னா படிப்பி;க்கிறாய் என்று. இதைத்தான் ஈழநாதனும் சொன்னார். அதை, அங்கு எழுதப்பயம் என்று சொல்லி நீங்கள் ஆறுதல் பட்டுக் கொள்:ளுங்கள். வேணுமேண்டால் கேளுங்கள். இன்னும் தூக்கப்படாமல், நீங்கள் ஆபாசம் என்று நினைக்கும் விடயங்களைப்பற்றி எழுதப்பட்ட பத்தோ இருபதோ பதிவுகளை நான் தருகிறேன். எதுவும் அங்கிருந்து தூக்கப்படவில்லை.
நீங்கள் முலையை பற்றி கதையுங்கள், யோணியைபற்றி கதையுங்கள் ஆர்வேண்டாம் என்றது, உங்கட உங்கட தளம்வழிய கதையுங்கள், யாழ்களம் சிறுவர்களுக்கும் பார்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது, என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
ஏன், இந்தப்பக்கம்கூட அப்படியேதான் இருக்கிறது. இதைவிடவும் காட்டமான வாதங்கள் வெளிப்படையாய் நடந்த பக்கங்கள் இன்னும் இருக்கிறது. இந்த அளவுக்குக்கூட வாதிக்கும் நிலை யாழ்க்களத்தில் இருக்கிறதா? அரிச்சுவடியிலிருந்து தொடங்கும் நிலையில் அதை ஈழநாதனின் பதிவில் தொடங்குவது எவ்வளவு சிரிப்புக்கிடமானது?
:wink:
.
.
.

