10-22-2005, 02:17 AM
உங்கள் தரவுகளுக்கு நன்றி ஈழவன் !
பொதுவாகவே எல்லாவற்றிற்கும் அழைப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. அவற்றை இடம் பார்த்து அதற்கேற்றவாறு நாம பாவிக்கின்றோம். எனது நண்பனை நான் தனிமையில் வாடா போடா என்றழைத்துக் கதைப்பேன் என்பதற்காக ஒரு பொதுவான இடத்திலும் நண்பன்தானே என்ற உரிமையில் நான் அப்படி அழைப்பது நாகரீகமாக இருக்குமா?? நீங்கள் சொல்கின்ற செயல்கள் அனைத்தையும் குறிப்பிடுவதற்கு எத்தனையோ நாகரீகமான வார்த்தைகள் இல்லையா?? நான் காலைக்கடன்களை முடித்துவிட்டு வருகின்னென்று ஒருவருக்கு பொதுவாகக் குறிப்பிட்டால் அது புரியாமல் போய்விடுமா?? எப்படி நாகரீகமாக உடைகள் அணிந்து வாழவிருபுவது போல நாகரீகமாக பேச நினைப்பதும் தவறா.?? எமக்கெல்லாம் சகிப்புத்தன்மையும் புரிந்துணவும் நிறையவேயிருந்தால் பிறகு ஏன் ஆடைகள் கொண்டு அங்கங்கள் மறைப்பான். கோயில் சிற்பங்கள் போல் நிர்வாணமாகவே வாழலாமே.
எனது கருத்தையும் தெளிவு படுத்தவே இதனை எழுதுகின்றேன் உங்ளுடன் வாதாட்டமாகவல்ல.
இங்கே எனது மாமனார் எனக்கு கூறிய கதையொன்றையும் கூற விரும்புகின்றேன்.. எனது மாமனார் யாழ் இந்துக்கல்லு}ரியில் படித்தபோது விடுதியிலேயே தங்கிப்படித்தார். இளைஞர்கள் என்றால் குறும்புகளுக்கும் பஞ்சமில்லையே. விடுதியில் இருந்த இளைஞனொருவர் அடிக்கடி பக்கத்து வீட்டுப் பலாமரத்தில் அடிக்கடி பழங்களை இரவில் திருடி வருவாராம். இதனை மற்றவர்கள் தடுத்தும் அவர் நிறுத்தவில்லையாம். பக்கத்து வீட்டாலும் புகார் பாடசாலைக்கு வந்தவிட்டது. ஆனால் இளைஞனும் திருட்டை நிறுத்தவில்லை.. ஒரு நாள் அவ்விளைஞன் திருடிக் கொண்டு வரும்போது விடுதிப் பொறுப்பாளரிடமே பிடிபட்டு விட்டாராம். விடுதிப் பொறுப்பாளர் அவ்விளைஞனில் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தவராம். இளைஞனை கையும் களவுமாக பிடித்த பொறுப்பாளர் நீயா இதைச் செய்கின்றாய் என்று கண்கலங்கக் கேட்டவிட்டு ஒன்றும் சொல்லாமல சென்று விட்டாராம். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்விளைஞன் அன்று இரவு முழுக்கத் நித்திரை கொள்ளாமல் முழித்தபடியே கவலையிலிருந்தாராம். விடிந்து பார்த்தபோது அவ்விளைஞன் கயிற்றில் தொங்கி தற்கொலை செய்திருந்தாராம். சில விளையாட்டாக திருடுவது பொதுவாக நடைபெறும் ஒன்றுதான். அவ்விளையாட்டு மற்றவர்களின் நல்லபிப்பிராயங்களை மாற்றும்போது எப்படி வினையாகின்றது பார்த்தீர்களா??
பொதுவாகவே எல்லாவற்றிற்கும் அழைப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. அவற்றை இடம் பார்த்து அதற்கேற்றவாறு நாம பாவிக்கின்றோம். எனது நண்பனை நான் தனிமையில் வாடா போடா என்றழைத்துக் கதைப்பேன் என்பதற்காக ஒரு பொதுவான இடத்திலும் நண்பன்தானே என்ற உரிமையில் நான் அப்படி அழைப்பது நாகரீகமாக இருக்குமா?? நீங்கள் சொல்கின்ற செயல்கள் அனைத்தையும் குறிப்பிடுவதற்கு எத்தனையோ நாகரீகமான வார்த்தைகள் இல்லையா?? நான் காலைக்கடன்களை முடித்துவிட்டு வருகின்னென்று ஒருவருக்கு பொதுவாகக் குறிப்பிட்டால் அது புரியாமல் போய்விடுமா?? எப்படி நாகரீகமாக உடைகள் அணிந்து வாழவிருபுவது போல நாகரீகமாக பேச நினைப்பதும் தவறா.?? எமக்கெல்லாம் சகிப்புத்தன்மையும் புரிந்துணவும் நிறையவேயிருந்தால் பிறகு ஏன் ஆடைகள் கொண்டு அங்கங்கள் மறைப்பான். கோயில் சிற்பங்கள் போல் நிர்வாணமாகவே வாழலாமே.
எனது கருத்தையும் தெளிவு படுத்தவே இதனை எழுதுகின்றேன் உங்ளுடன் வாதாட்டமாகவல்ல.
இங்கே எனது மாமனார் எனக்கு கூறிய கதையொன்றையும் கூற விரும்புகின்றேன்.. எனது மாமனார் யாழ் இந்துக்கல்லு}ரியில் படித்தபோது விடுதியிலேயே தங்கிப்படித்தார். இளைஞர்கள் என்றால் குறும்புகளுக்கும் பஞ்சமில்லையே. விடுதியில் இருந்த இளைஞனொருவர் அடிக்கடி பக்கத்து வீட்டுப் பலாமரத்தில் அடிக்கடி பழங்களை இரவில் திருடி வருவாராம். இதனை மற்றவர்கள் தடுத்தும் அவர் நிறுத்தவில்லையாம். பக்கத்து வீட்டாலும் புகார் பாடசாலைக்கு வந்தவிட்டது. ஆனால் இளைஞனும் திருட்டை நிறுத்தவில்லை.. ஒரு நாள் அவ்விளைஞன் திருடிக் கொண்டு வரும்போது விடுதிப் பொறுப்பாளரிடமே பிடிபட்டு விட்டாராம். விடுதிப் பொறுப்பாளர் அவ்விளைஞனில் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தவராம். இளைஞனை கையும் களவுமாக பிடித்த பொறுப்பாளர் நீயா இதைச் செய்கின்றாய் என்று கண்கலங்கக் கேட்டவிட்டு ஒன்றும் சொல்லாமல சென்று விட்டாராம். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்விளைஞன் அன்று இரவு முழுக்கத் நித்திரை கொள்ளாமல் முழித்தபடியே கவலையிலிருந்தாராம். விடிந்து பார்த்தபோது அவ்விளைஞன் கயிற்றில் தொங்கி தற்கொலை செய்திருந்தாராம். சில விளையாட்டாக திருடுவது பொதுவாக நடைபெறும் ஒன்றுதான். அவ்விளையாட்டு மற்றவர்களின் நல்லபிப்பிராயங்களை மாற்றும்போது எப்படி வினையாகின்றது பார்த்தீர்களா??

