10-22-2005, 01:03 AM
அன்பின் குருவிகாள்
வணக்கம்
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.மேதாவித்தனம் என்பதற்கும் மேதாவிலாசம் என்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.
மேதாவித்தனம் அரைகுறையாகத் தெரிந்துவைத்துக்கொண்டு எல்லாம் அறிந்தவன் மாதிரி காட்டிக்கொள்வது மேதாவிலாசம் என்பது உண்மையிலேயே அறிவுள்ளது நான் உங்களை எப்படி விளித்தேன் என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்
மற்றது யானையின் முகபாடத்தைப் பார்க்கும் போது திருவள்ளுவருக்கு இளநங்கையின் சாயாத கொங்கைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
டி.சேயின் கவிதையில் டிசே பெண்ணின் உறுப்புகளை ரசிக்கவில்லை.கலாசாரம் பண்பாடு பற்றிக் கதைத்துக் கொண்டே கீழ்க்கண்ணால் நோக்குபவர்களைப் பற்றியே குறிப்பிட்டிருக்கிறார்.இரண்டிலும் கருத்தியல் ரீதியான ஆபாசம் இல்லை.நீங்கள் சொல்லும் மொழிப் பயன்பாடு இரண்டிலும் ஒன்றே.
இப்போதைக்கு ட்.சே கவிதையை விட்டுவிடுவோம்.மற்றைய விடயங்களைப் பார்ப்போம்
ஆண் பெண் உறுப்புகளின் மீது நாங்கள் கொண்டுள்ள கவர்ச்சி,மயக்கம் எதிர்ப்பால் உறுப்புகள் மீதான ஆர்வம் போன்றவைதான் தூஷணங்களாக உருவெடுத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.எங்களுக்கு மட்டுமே சொந்தமென நாங்கள் நினைக்கும் ஒரு பொருளைப்பற்றி இன்னொருவன் குறிப்பிடும்போது அது எமக்குள் தோற்றுவிக்கும் அதிர்ச்சியே தூஷணத்தின் மதிப்பு.
இவ்வாறு உடலுறுப்புகளைப் பற்றிப் பேசுவதே பாவம் என்று இருப்பதால் தான் அவற்றைப் பற்றிப் பேசுவது தூசணம் என்றாகிறது.
இந்தப் பாவ மதிப்பீடுகளை விட்டுவிட்டுப் பாருங்கள் எது தூசணம்
உணவுண்ணும் வாய் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு வெளித்தள்ளும் உறுப்புகளும் முக்கியமானவை.ஆனால் உணவுண்ணுதலை விரும்பிப் பேசும் நாம் மலம் கழிப்பதையும் சலங்கழிப்பதையும் பற்றிப் பேச மறுக்கிறோம்.ஏனென்றால் சலம் கழிப்பதும் மலம் கழிப்பதும் தவறான செயல்கள் என்று ஆரம்பத்திலிருந்தே பதிக்கப்பட்டிருக்கிறது எமது சிந்தனை.அது அவைபற்றிய கதையாடல்களை மறுக்கிறது
ஒவ்வொரு மனிதனும் தான் சலம் கழிப்பதையும் மலம் கழிப்பதையும் மறுக்கின்றான்.சலமும் மலமும் போகாத புனிதராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறான்
இதைத்தான் மொழியியியல் வன்முறை என்பார்கள்.அதாவது மொழியில் சில சொற்களை தீண்டத் தகாதவை ஆக்கி வைத்திருக்கிறோம் அவற்றை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் போது அது தூஷணமாகின்றது
முக்கியமான இன்னொரு விடயம் தமிழில் தூஷணம் என்ற சொல்லே இல்லைத் தெரியுமா?
அதற்கிணையாகப் பிரயோகிக்கப்பட்ட சொல் நிந்தனை ஆனால் நிந்தனைக்கும் தூஷணத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது
தூஷணம் என்பது எங்களால் வரையறுக்கப்பட்ட சில வார்த்தைகள் ஆனால் நிந்தனை என்றால் ஒருவனை நாயே பேயே முட்டாள் குரங்கே என்று என்ன வேண்டுமானலும் கூறி நிந்தனை செய்வது.
ஆதித்தமிழில் தூஷணம் என்ற பகுதியே இல்லை என்று நினைக்கிறேன்.தவறாக இருந்தால் யாராவது திருத்துங்கள்.
நாரதர் மற்றும் குறுக்காலை போவான் களத்தில் இதைவிடப் பல வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன.பல அபிப்பிராய பேதங்களால் பலர் விலகியிருக்கிறார்கள் பலர் இன்னும் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள் ஆக களம் நின்றுவிடவில்லை நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.குறைகளும் பலவீனங்களும் நிறைந்ததுதானே மனித வாழ்க்கை.
எழுத எழுத தணிக்கை செய்வது மனதுக்கு கஷ்டமான காரியம் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுத்தெழுத்தாக நான் தட்டியதை யாரவது அழித்துவிட்டால் மனதுக்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.ஆனால் எதற்காக எழுதுகிறோம் எங்கள் மேதாவிலாசத்தைப் பறைசாற்றிக்கொள்ளவா அல்லது இதன மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவா என்று யோசித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்
வசி வலைப்பதிவில் இதை நான் எழுதினால் என்னடா இப்பத்தான் எங்களுக்கு அரிச்சுவடி சொல்லித்தருகிறாயா என்று சிக்கெடுத்துவிடுவார்கள்.அங்கே இவையெல்லாம் விவாதிக்கப்பட்டுக் கடந்து போய்விட்டன.களத்தில் இதுபற்றிய உரையாடல் சென்றுகொண்டிருந்ததால் உள்ளே வந்தேன் இதைவிடச் சுவாரசியமான விடயம் வலைப்பதிவுகளில் ஓடுகிறது இனி கொஞ்ச நாள் அந்தப் பக்கம்
நீங்கள் எப்போது வலைப்பதிவுக்கு வருகிறீர்கள்?கிருபனும் வந்துவிட்டார்
வணக்கம்
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.மேதாவித்தனம் என்பதற்கும் மேதாவிலாசம் என்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.
மேதாவித்தனம் அரைகுறையாகத் தெரிந்துவைத்துக்கொண்டு எல்லாம் அறிந்தவன் மாதிரி காட்டிக்கொள்வது மேதாவிலாசம் என்பது உண்மையிலேயே அறிவுள்ளது நான் உங்களை எப்படி விளித்தேன் என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்
மற்றது யானையின் முகபாடத்தைப் பார்க்கும் போது திருவள்ளுவருக்கு இளநங்கையின் சாயாத கொங்கைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
டி.சேயின் கவிதையில் டிசே பெண்ணின் உறுப்புகளை ரசிக்கவில்லை.கலாசாரம் பண்பாடு பற்றிக் கதைத்துக் கொண்டே கீழ்க்கண்ணால் நோக்குபவர்களைப் பற்றியே குறிப்பிட்டிருக்கிறார்.இரண்டிலும் கருத்தியல் ரீதியான ஆபாசம் இல்லை.நீங்கள் சொல்லும் மொழிப் பயன்பாடு இரண்டிலும் ஒன்றே.
இப்போதைக்கு ட்.சே கவிதையை விட்டுவிடுவோம்.மற்றைய விடயங்களைப் பார்ப்போம்
ஆண் பெண் உறுப்புகளின் மீது நாங்கள் கொண்டுள்ள கவர்ச்சி,மயக்கம் எதிர்ப்பால் உறுப்புகள் மீதான ஆர்வம் போன்றவைதான் தூஷணங்களாக உருவெடுத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.எங்களுக்கு மட்டுமே சொந்தமென நாங்கள் நினைக்கும் ஒரு பொருளைப்பற்றி இன்னொருவன் குறிப்பிடும்போது அது எமக்குள் தோற்றுவிக்கும் அதிர்ச்சியே தூஷணத்தின் மதிப்பு.
இவ்வாறு உடலுறுப்புகளைப் பற்றிப் பேசுவதே பாவம் என்று இருப்பதால் தான் அவற்றைப் பற்றிப் பேசுவது தூசணம் என்றாகிறது.
இந்தப் பாவ மதிப்பீடுகளை விட்டுவிட்டுப் பாருங்கள் எது தூசணம்
உணவுண்ணும் வாய் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு வெளித்தள்ளும் உறுப்புகளும் முக்கியமானவை.ஆனால் உணவுண்ணுதலை விரும்பிப் பேசும் நாம் மலம் கழிப்பதையும் சலங்கழிப்பதையும் பற்றிப் பேச மறுக்கிறோம்.ஏனென்றால் சலம் கழிப்பதும் மலம் கழிப்பதும் தவறான செயல்கள் என்று ஆரம்பத்திலிருந்தே பதிக்கப்பட்டிருக்கிறது எமது சிந்தனை.அது அவைபற்றிய கதையாடல்களை மறுக்கிறது
ஒவ்வொரு மனிதனும் தான் சலம் கழிப்பதையும் மலம் கழிப்பதையும் மறுக்கின்றான்.சலமும் மலமும் போகாத புனிதராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறான்
இதைத்தான் மொழியியியல் வன்முறை என்பார்கள்.அதாவது மொழியில் சில சொற்களை தீண்டத் தகாதவை ஆக்கி வைத்திருக்கிறோம் அவற்றை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் போது அது தூஷணமாகின்றது
முக்கியமான இன்னொரு விடயம் தமிழில் தூஷணம் என்ற சொல்லே இல்லைத் தெரியுமா?
அதற்கிணையாகப் பிரயோகிக்கப்பட்ட சொல் நிந்தனை ஆனால் நிந்தனைக்கும் தூஷணத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது
தூஷணம் என்பது எங்களால் வரையறுக்கப்பட்ட சில வார்த்தைகள் ஆனால் நிந்தனை என்றால் ஒருவனை நாயே பேயே முட்டாள் குரங்கே என்று என்ன வேண்டுமானலும் கூறி நிந்தனை செய்வது.
ஆதித்தமிழில் தூஷணம் என்ற பகுதியே இல்லை என்று நினைக்கிறேன்.தவறாக இருந்தால் யாராவது திருத்துங்கள்.
நாரதர் மற்றும் குறுக்காலை போவான் களத்தில் இதைவிடப் பல வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன.பல அபிப்பிராய பேதங்களால் பலர் விலகியிருக்கிறார்கள் பலர் இன்னும் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள் ஆக களம் நின்றுவிடவில்லை நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.குறைகளும் பலவீனங்களும் நிறைந்ததுதானே மனித வாழ்க்கை.
எழுத எழுத தணிக்கை செய்வது மனதுக்கு கஷ்டமான காரியம் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுத்தெழுத்தாக நான் தட்டியதை யாரவது அழித்துவிட்டால் மனதுக்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.ஆனால் எதற்காக எழுதுகிறோம் எங்கள் மேதாவிலாசத்தைப் பறைசாற்றிக்கொள்ளவா அல்லது இதன மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவா என்று யோசித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்
வசி வலைப்பதிவில் இதை நான் எழுதினால் என்னடா இப்பத்தான் எங்களுக்கு அரிச்சுவடி சொல்லித்தருகிறாயா என்று சிக்கெடுத்துவிடுவார்கள்.அங்கே இவையெல்லாம் விவாதிக்கப்பட்டுக் கடந்து போய்விட்டன.களத்தில் இதுபற்றிய உரையாடல் சென்றுகொண்டிருந்ததால் உள்ளே வந்தேன் இதைவிடச் சுவாரசியமான விடயம் வலைப்பதிவுகளில் ஓடுகிறது இனி கொஞ்ச நாள் அந்தப் பக்கம்
நீங்கள் எப்போது வலைப்பதிவுக்கு வருகிறீர்கள்?கிருபனும் வந்துவிட்டார்
\" \"

