10-22-2005, 12:33 AM
எல்லோரும் கோபம் கொள்ளாமல கொஞ்சம் சிந்தித்துக் கருத்தெழுதலாமே. தாக்குதலாகக் கருத்துக்கள் சென்று கொண்டிருந்தால் தீர்வுகள் கிடைக்காது. வன்மங்கள்தான் வளரும். களவிதிகள் என்று எங்கள் முன் வைப்போர் கூட அதனை முறையாகக் கையாள்வது கிடையாது. ஆளுக்கொரு நியாயம் தான் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. இது கூட பிரைச்சினைகளுக்கு அத்திவாரமிடுகின்றன. ஒரு சிறப்பான விடயத்தை வெட்டியொட்டுவது தப்பல்ல. ஆனால் அதை முடிந்தவரை தமிழிலேயே போட்டால் எல்லோருக்கும் புரிந்து கொள்ள வசதியாகவிருக்கும். மொழிப்பெயர்ப்புக்கு நேரப்பிரைச்சினையும் உண்டுதான். அதனால் ஒரு யோசனையை நான் சமர்பிக்கின்றேன். இங்கு களத்தில் நல்ல ஆங்கிலப் புலமையுள்ளோர் உங்களுக்கு உதவி செய்ய முடியுமாயின் உங்கள் பெயர்களைத் தெரிவியுங்கள். மொழி பெயர்க்க நேரம் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் பெயர் குறிப்பிட்ட ஒருவருக்கு தனிமடல் மூலம் தான் வாசித்த பகுதியின் முகவரியையும் விடயத்தையும் சுருக்கமாக குறிப்பிட்டு அனுப்பினால் அவரும் மொழி பெயர்த்து களத்தில் இடலாம். மற்றவர்களும் உங்கள் ஆலோசனையை தெரியப்படுத்துங்களேன். இது எனது கருத்து மாத்திரமே.

