10-21-2005, 02:01 PM
nallavan Wrote:தங்கர் என்ற கோமாளி தமிழ்ச்சினிமாவுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிதான்.
அடிப்படையில் நேர்மையற்ற சுத்த ஏமாற்றுவாதி.
எதையெதை தீயவையென்று சொல்வாரோ அவையனைத்தையும் தன் படங்களில் செருகிவிடுவார். அழகியில் விவேக்கின் நகைச்சுவை, குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் முதல் எல்லாப்படத்திலும் அவரே கேவலம் என்று சொல்லும் அனைத்து அம்சங்களும் இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாச்சாமியிலும் நீங்கள் மேற்சொன்ன நடனம் உட்பட, நடிகைகள் உடுக்கும் உடை வாங்கிவந்து அதைத் தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி (அவள் விருப்பமில்லாமலே) உடுக்க வைத்து ஒரு டூயட் பாடுவார் மனிதர். தலையிலடித்துக் கொள்ளலாம் இந்த ஏமாற்றுக்காரனின் புரட்டுக்களை நம்பி அவரை நல்ல மனிதனாகச் சித்தரிப்பவர்களை நினைத்து.
உங்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது நல்லவன். நீங்கள் ஏன் இப்படி நல்லவர்கள் மீது உங்கள் வெறுப்பினை திணிக்கின்றீர்கள். அதாவது தங்கரின் திரைப்படங்களில் அவர் கேவலமான கருத்தினை செருகுகின்றார் என்று சொல்லும் நீங்கள் (நல்லவன்?) ஏன் கங்கர்பச்சானின் விடயத்தில் அவரிடம் உங்களுக்கிகருக்கும் வெறுப்பான வரிகளை அவர் மீது திணிக்கின்றீர்கள்? கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதீர்கள். தங்கரின் தங்கமான குணத்தினை புரிந்து கொள்ளுங்கள்.
இங்கே தொன்னூறு வீதமான நடிகைகள் விபச்சாரிகள் தான் என்று ஒருவர் சொல்கிறார். பத்தாததுக்கு உங்களையும் அப்படித்தான் சொல்வேன் என்று ரசிகைக்கு மிரட்டல் விட உடனே ரசிகையும் பயந்து சரணடைகிறார். நல்ல விவாதம் போகிறது யாழ்க் களத்தில்.
தான் செய்யும் வேலைக்குரிய 600 ரூபாய்க் கூலியைக் கேட்டதற்கு நடிகைகளுக்கு விபச்சாரிப் பட்டம். அதுவும் 'கேவலம் 600 ரூபாய்' என்ற கதை. அந்த 600 ரூபாயை வைத்துத்தான் அந்தக் கிழமைக்குரிய குடும்பச் செலவு இருக்குமோ என்னவோ? ஆதே கேவலமான 600 ரூபாயைக் கொடுப்பதற்கு தங்கருக்கு மனசில்லை. தொழிலாளியிடம் கொள்ளையடிக்கும் கயவனை 'தமிழ்க் காவலன்' என்ற அளவில் புகழுபவர்களை நினைத்து என்ன செய்வது?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

