10-21-2005, 10:30 AM
Eelavan Wrote:சரியாகச் சொன்னீர்கள் குருவீகாள்
எமது தமிழ் மொழி தேமதுரத் தமிழோசை உங்கள் வாயால் சொன்னமில்லை பாத்தமில்ல
புரியல்ல தெரியல்ல
என்றெல்லாம் வாயில்வடி வீணியாகிக் கரைந்தொழுகிக் காற்றோடு கலப்பதிலும் பார்க்க
இன்றைக்கும் பேசப்படும் தூசண வார்த்தைகள் ஏன் பெண்களையே குறி வைக்கின்றன என்று பார்ப்பது பிரயோசனமாக இருக்கும்.
தமிழ் மொழி பண்பாடை மற்றவர்களுக்குப் கற்றுக்கொடுக்கும் முதல் எமதினத்தின் அடிப்படியாம் தமிழை அகர முதல கற்றுவரும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க என்று மாணிக்கவாசகர் பாடலாம்.
உமையம்மையின் முலையுரசி தழும்புற்ற தோளன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடலாம்.
யானையின் முகபாடத்தை இளநங்கையின் சாயாத முலைகள் போன்றவை என்று திருவள்ளுவர் கூறலாம்
சமஸ்கிருதத்தில் ஸ்தனங்கள் என்றும் பிருஷ்டம் என்றும் அல்குல் என்றும் சொன்னால் நாகரீகம் தமிழில் சொன்னால் அநாகரீகம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றறியாமலே அவியும் உங்கள் மேதாவிலாசத்தை மெச்சுகிறேன்.
சரி இவை இவை கெட்ட வார்த்தைகள் என்பதற்கு என்ன வரைவிலக்கணம் வைத்திருக்கிறீர்கள்
முதலில் மேதாவித்தனம் என்ற விளிப்பை விடுங்கோ..! இது என்னவோ பாடசாலைப் பட்டிமன்றம் போல ஆகுது..! எதிரணியினரின் மேதாவித்தனம்...என்றது போல..! ஒரு அனுபவமிக்க எழுத்தாளர் நீங்கள்..அப்படியான சொற்களைப் பாவிப்பதைத் தவிர்ப்பது நல்லது..!
அப்புறம் உங்கள் உதாரணங்களும் அவை பாவிக்கப்பட்ட இடங்களும் முறைகளும் டிசே பாவிச்ச முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு..! உதாரணத்துக்கு திருவள்ளுவர் சொன்னது ஒரு குறிப்பு..! டிசே சொன்னது குறிப்பு அல்ல.. வக்கிரத்தனத்தின் வெளிப்பாடு...! மொழி நடையைப் பொறுத்துத்தான் கொள்ளும் பொருளுக்கான தன்மை மாறுபடும்..! இப்போ..ஒரு நிர்வாண உடலை ஒரு வைத்தியன் பார்ப்பதற்கும்....ஒரு திருமணமான சோடி பார்ப்பதற்கும் இடையில் என்ன வேறுபாடோ..அதே போலத்தான் இதுவும்...! சந்தர்ப்பம்...விளக்கும் முறை..மொழி நடை இவை கருத்தாவை என்னென்ன வழிக்கு இட்டுச் சொல்லும் என்பதை தமிழ் அழகுறச் சொல்லுகிறது அதன் இலக்கணத்தில்...! அப்புறம் என்ன... வரைவிலக்கணம் கேட்கிறீங்கள்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

