11-21-2003, 04:08 PM
1995ஆம் அண்டுக்குபின் வடக்கில் குறிப்பாக யாழ்குடாவில் மீண்டும் சாதியம் தலை து}க்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவை விட்டு வெளியேறியதும் சாதியம் மிண்டும் அங்கு நுளைந்து விட்டது. பல பாடசாலைகளில் தலித்துக்கள் மறைமகமாகவும் நேரடியாகவும் சாதி வெறியர்களால் அடக்கப்பட்டனர். பண்டத்தரிப்பில் ஒரு பாடசலையில் நடை பெற்ற இந்த சாதிக் கொடுமை பற்றிய விவரணம் ஒன்று கடந்த ஆண்டு சக்திதெலைக்காட்சியில் ஒலிபரப்பாகியபோது நமமு நெஞ்சம் கொஞச்சம் கனத்தது. அனால் தற்போது விடுதலைப் புலிகள் இந்த விடயத்தில் பல இடங்களில் நேரடியாக தலையிட்டு சாதியம் மிண்டும் தலை து}க்காதிரிக்க வழி சமைத்திருக்கிறார்கள். அனால் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் யாழ்குடாவில் அது ஓயவில்லை. மாறாக இராணுவ தலைமைகள் சிலரின் அனுசரணையுடன் சில இடங்களில் சில சாதிமான்கள் தமது ஆதிக்கத்தை காட்ட முனைவதாக வதந்திகள் வருகிறது. இதில் உண்மை இரக்கிறதோ தெரியாது, அனால் சாதியம் என்ற கறையான் மீண்டும் தலைது}க்க அனிமதிக்க கூடாது. கரவை பரணி நீங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை வெளியிட நீங்கள் தயங்க கூடாது. சில விடயங்களை நாம் அவர்களை உரித்துக்காட்டுவதால் தான் திருத்த முடியும். எனவே கரவை அவர்களின் விபரங்களை வெளிவிடுங்கள்!

