11-21-2003, 01:14 PM
kuruvikal Wrote:எமது கருத்தை உங்களுக்கென்று ஆக்கிக் கொண்டு கருத்தாடுகிறீர்கள் நல்லது....அப்போதுதான் எல்லோரிடமும் தெளிவு பிறக்கும்... அன்பும் அரவணைப்பும் ஆக்கம் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர தூர நோக்கற்று அழிவை நோக்கியதாக இருக்கக் கூடாது...கொள்ளைக் கூட்டதவனும் அன்புடன் ஆதரித்து வழிகாட்டுவது கொள்ளை எப்படி அடிப்பதென்று.... அந்த நிலை எமக்கு வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு...உங்களது என்னவோ எமக்குத் தெரியாது....!
அடுத்து உங்கள் படம் தொடர்பில் நாம் பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்துதான் விமர்சனத்தை அளிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனுக்குத் தேவையில்லாதது....ஒரு படைப்பை அதுவும் யாழ் களத்தில் உள்ள அஜீவன் என்பவரது என்ற நிலை எடுக்காமல் பார்த்த போது எமக்குத் தோன்றியதை எழுதினோம்.......படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன் ஏன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....அடுத்தது பெண்கள் என்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே சந்தேகப் பிராணிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அந்தப் பெண் சாறி பற்றிய விடயத்தைக் கேட்டவுடன் சிந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனுடன் முகம் சுழிப்பதும் எந்த அர்த்தத்தில்.....எடுத்த எடுப்பிலேயே தனது சந்தேகத்தை கணவனிடம் பக்குவமாகக் கேட்கும் பெண்கள் உலகில் இல்லையோ...அல்லது சமூகத்தில் வளரக்கூடாதோ..... அல்லது பெண்களில் பெரும்பாலானவர்கள் அப்படியான இயல்புள்ளவர்கள் தானா...?! உங்கள் கதையின் கருவே பெண்கள் சந்தேகப் பிராணிகள் என்பதா....?! இப்படிப் பல கேள்விகள் எமக்கு மட்டும் சொந்தமானதாக எழும் போது அதை எல்லாம் எழுதி விளக்கம் கோரமுடியுமா என்ன...அதை வளர்ந்து வரும் கலைஞனால் சகித்துக் கொள்ள முடியுமா...? இப்படிச் சிந்தித்தோம்... இப்போ நீங்களே கேட்கிறீர்கள் எமது சந்தேகம் தரப்பட்டுள்ளது சிறிது விளக்கினால் இன்னும் தெளிவு பெறுவோம்......!
எம்மிடம் பட்டதாரிகளுக்குள்ள பார்வை இல்லாது இருக்கலாம் ஏனெனில் நாம் பாமர ரசிகர்கள்.....!
:twisted::twisted:
இக்குறும்படத்தில் அறிவுரை சொல்லப்படவில்லை. அது அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.நடக்கும் ஒரு விடயத்தை முன் வைப்பது மட்டுமே எனது தன்மை.
முடிவுகளை எடுக்க வேண்டியது பார்வையாளனின் பொறுப்பு.இக்குறும் படம் ஒட்டு மொத்த பெண்கள் பற்றிக் குறிப்பிடுவதான தங்கள் கருத்து தவறானது.
ஒரு குறும்படத்தில் முழு உலக பிரச்சனையை அலச முடியாது.
இங்கே ,எடுக்கப் பட்டுள்ள கதைக் கருவுக்கான இருசாராரின் பிரச்சனைகளும் முன் வைக்கப் பட்டிருக்கின்றன.
kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.1.jpg' border='0' alt='user posted image'>ம்ம்ம்...மேலேயுள்ள உங்கள் கவி வரிகளை வைத்து, முழு பெண்களையும் இப்படித்தான் எடை போடுகிறீர்கள் என்று கருதுவதா?
பெண்ணென்றால் தனியழகு - என்று
கவிகள் பல படித்ததுண்டு
இன்று
பெண் தன் தனியழகிழந்து
துணையழகு பெற்றதேன்...!
உண்மையில்
பெண் அழகுதானா.....?!
அன்றில் கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
இன்று
எங்குதான் நேர்மையும்
இயற்கையும் தம் அழகு காட்டுது
அது அந்தக்காலம்
நம்ம பாட்டி காலம்
பாட்டி...பாட்டி...பாட்டி!
Quote:படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன் ஏன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....
அது படத்துக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது.
மீண்டும் படத்தைப் பாருங்கள்.
அல்லது
நீங்கள் அதற்காக ,என்ன செய்யவீர்கள்
அல்லது
என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்?
அத்தோடு தயவு செய்து,
1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?
2."காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்.......... "என்றால் எப்படி என தெளிவுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்............?
என்ற கேள்விக்கு பதில் தாருங்கள்.
அன்புடன்,
அஜீவன்


:twisted: