11-21-2003, 12:47 PM
எமது கருத்தை உங்களுக்கென்று ஆக்கிக் கொண்டு கருத்தாடுகிறீர்கள் நல்லது....அப்போதுதான் எல்லோரிடமும் தெளிவு பிறக்கும்... அன்பும் அரவணைப்பும் ஆக்கம் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர தூர நோக்கற்று அழிவை நோக்கியதாக இருக்கக் கூடாது...கொள்ளைக் கூட்டத்தவனும் அன்புடன் ஆதரித்து வழிகாட்டுவது கொள்ளை எப்படி அடிப்பதென்று.... அந்த நிலை எமக்கு வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு...உங்களது என்னவோ எமக்குத் தெரியாது....!
அடுத்து உங்கள் படம் தொடர்பில் நாம் பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்துதான் விமர்சனத்தை அளிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனுக்குத் தேவையில்லாதது....ஒரு படைப்பை அதுவும் யாழ் களத்தில் உள்ள அஜீவன் என்பவரது என்ற நிலை எடுக்காமல் பார்த்த போது எமக்குத் தோன்றியதை எழுதினோம்.......படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....அடுத்தது பெண்கள் என்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே சந்தேகப் பிராணிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அந்தப் பெண் உடை பற்றிய விடயத்தைக் கேட்டவுடன் சிந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனுடன் முகம் சுழிப்பதும் எந்த அர்த்தத்தில்.....எடுத்த எடுப்பிலேயே தனது சந்தேகத்தை கணவனிடம் பக்குவமாகக் கேட்கும் பெண்கள் உலகில் இல்லையோ...அல்லது சமூகத்தில் வளரக்கூடாதோ..... அல்லது பெண்களில் பெரும்பாலானவர்கள் அப்படியான இயல்புள்ளவர்கள் தானா...?! உங்கள் கதையின் கருவே பெண்கள் சந்தேகப் பிராணிகள் என்பதா....?! இப்படிப் பல கேள்விகள் எமக்கு மட்டும் சொந்தமானதாக எழும் போது அதை எல்லாம் எழுதி விளக்கம் கோரமுடியுமா என்ன...அதை வளர்ந்து வரும் கலைஞனால் சகித்துக் கொள்ள முடியுமா...? இப்படிச் சிந்தித்தோம்... இப்போ நீங்களே கேட்கிறீர்கள் எமது சந்தேகம் தரப்பட்டுள்ளது சிறிது விளக்கினால் இன்னும் தெளிவு பெறுவோம்......!
எம்மிடம் பட்டதாரிகளுக்குள்ள பார்வை இல்லாது இருக்கலாம் ஏனெனில் நாம் பாமர ரசிகர்கள்.....!
நாம் எமது சுதந்திரத்தையே பாவிக்கின்றோம் மற்றவரதைப் பறிக்கவில்லை....பாதிக்க வைக்கவில்லை.....அதற்கான தகுதியும் எம்மிடம் இல்லை...இருக்கப் போவதும் இல்லை.....!
நீங்கள்(கருத்தாளர்கள் சிலர்) உங்கள் சுதந்திரத்தை பாவிக்காது விலகி ஓடுவதற்கு நாம் என்ன செய்ய முடியும்.....! தங்கள் கருத்தை சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு...அதை களத்தில் எழுதினால் எப்படித் திணிப்பாகும்....என்ன ஆயுதம் அல்லது பொருளாதாரத் தடை அல்லது களத்தில் கருத்தை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றுதல்....அல்லது தனிப்பட செய்தி அனுப்பி எனது கருத்தைக் கேள் அல்லது கொன்றுவிடுவேன் எனப்பயமுறுத்தல்களா செய்கிறோம்......எமது கருத்தை வரிவடிவில் தருகிறோம் ஏற்கக் கூடியதென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்...இங்கே எங்குள்ளது திணிப்பு......!
:twisted:
:twisted:
அடுத்து உங்கள் படம் தொடர்பில் நாம் பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்துதான் விமர்சனத்தை அளிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனுக்குத் தேவையில்லாதது....ஒரு படைப்பை அதுவும் யாழ் களத்தில் உள்ள அஜீவன் என்பவரது என்ற நிலை எடுக்காமல் பார்த்த போது எமக்குத் தோன்றியதை எழுதினோம்.......படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....அடுத்தது பெண்கள் என்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே சந்தேகப் பிராணிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அந்தப் பெண் உடை பற்றிய விடயத்தைக் கேட்டவுடன் சிந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனுடன் முகம் சுழிப்பதும் எந்த அர்த்தத்தில்.....எடுத்த எடுப்பிலேயே தனது சந்தேகத்தை கணவனிடம் பக்குவமாகக் கேட்கும் பெண்கள் உலகில் இல்லையோ...அல்லது சமூகத்தில் வளரக்கூடாதோ..... அல்லது பெண்களில் பெரும்பாலானவர்கள் அப்படியான இயல்புள்ளவர்கள் தானா...?! உங்கள் கதையின் கருவே பெண்கள் சந்தேகப் பிராணிகள் என்பதா....?! இப்படிப் பல கேள்விகள் எமக்கு மட்டும் சொந்தமானதாக எழும் போது அதை எல்லாம் எழுதி விளக்கம் கோரமுடியுமா என்ன...அதை வளர்ந்து வரும் கலைஞனால் சகித்துக் கொள்ள முடியுமா...? இப்படிச் சிந்தித்தோம்... இப்போ நீங்களே கேட்கிறீர்கள் எமது சந்தேகம் தரப்பட்டுள்ளது சிறிது விளக்கினால் இன்னும் தெளிவு பெறுவோம்......!
எம்மிடம் பட்டதாரிகளுக்குள்ள பார்வை இல்லாது இருக்கலாம் ஏனெனில் நாம் பாமர ரசிகர்கள்.....!
நாம் எமது சுதந்திரத்தையே பாவிக்கின்றோம் மற்றவரதைப் பறிக்கவில்லை....பாதிக்க வைக்கவில்லை.....அதற்கான தகுதியும் எம்மிடம் இல்லை...இருக்கப் போவதும் இல்லை.....!
நீங்கள்(கருத்தாளர்கள் சிலர்) உங்கள் சுதந்திரத்தை பாவிக்காது விலகி ஓடுவதற்கு நாம் என்ன செய்ய முடியும்.....! தங்கள் கருத்தை சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு...அதை களத்தில் எழுதினால் எப்படித் திணிப்பாகும்....என்ன ஆயுதம் அல்லது பொருளாதாரத் தடை அல்லது களத்தில் கருத்தை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றுதல்....அல்லது தனிப்பட செய்தி அனுப்பி எனது கருத்தைக் கேள் அல்லது கொன்றுவிடுவேன் எனப்பயமுறுத்தல்களா செய்கிறோம்......எமது கருத்தை வரிவடிவில் தருகிறோம் ஏற்கக் கூடியதென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்...இங்கே எங்குள்ளது திணிப்பு......!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

