10-20-2005, 11:06 AM
kurukaalapoovan Wrote:பிருந்தன்,நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், சிங்கள அரசயந்திரத்தில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள், உங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
மகிந்த தமிழரின் ரட்சகன இருக்கிறதுக்கும் சிங்கள மக்களுக்கு விடிவெள்ளியாக பிரச்சாரம் செய்யபடுறதுக்கும் என்ன தொடர்பு? மகிந்த வோடு போட்டியிடுற சக வேட்பாளரை விட அதிக இனவாத போக்கத்தான் வெளிப்படையாகக் காட்டுறார். இதைவிட உண்மை முகம் எண்டால் ஒரு இனக்கலவரம் தான் நடத்தவேணும்.
சிங்களவருக்கு எப்படி வேண்டுமென்றாலும் அவர் இருக்கட்டும். தமிழர்க்கு தான் ஒரு ரட்சகன் என்றும் தமிழர் பிரச்சினையை தீர்க்கப்போகும் விடிவெள்ளி என வேடம் போடவேண்டாம் என்றுதான் நாம் கூறுகிறோம். உங்களுக்கே தெரியுதல்லவா அவர் ஒருஇனவாதி என்று, பின் நீங்கள் ஏன் அவருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்.
இதற்குள் எதாவது உள்நோக்கம் இருக்கிறதா?
என்ன பிதற்றல் "சிலகாலங்களில் சில நடவடிக்கைகள் தவிக்கமுடியாதவை" என்று, உங்கட அரசியல் ஞனம் என்ன உள்நோக்கத்தை விளங்கியிருக்கு? நான் சொல்லவந்தது எந்தளவு நியாபூர்வமான நிலைப்பாடாக இருந்தாலும் பூர்வீகம் சார்ந்த ஆதாரங்கள் தாரளமாக இருந்தாலும்போரடி அடித்துப்பறித்து பின்னர் தொடர்ந்து காப்பாறா தயாரில்லாட்டி எந்த ஒருவருக்கும் (இனரீதியாகவோ மதரீதியாகவோ மொழிரீதியாகவோ இல்லை பூகோளரீதியாகவோ) தனித்துவத்தை பேணவோ சுயமரியாதையோடு வாழவே முடியாது. ஆக்கிரமிப்பு குணம் தனியே சிங்கள இனம் சார்ந்த ஒரு விடயம் அல்ல.
எமது பலம் எமது தமிழ்ராணுவ பலத்தில் இருக்கிறது, அதை மேலும் பலமடைய செய்வது புலம்பெயர் தமிழர் எம்பொறுப்பு.
ஆக்கிரமிப்பிற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் "...நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்றியள் விளக்கம் கேட்டாபிறகு "...அங்கீகாரம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை சிங்கள அரசின் அங்கீகாரமல்ல" என்று செதப்புறியள் முகப்பாவனை போட்டு.
சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது தமிழன் சிறப்பு, விளங்காவிடில் கூறுங்கள் விரிவாகக் கூறுகிறேன். அதில் எனக்கொரு சிரமமும் இல்லை, நாம் தெளிவாகவே இருக்கிறோம்.அடிமைத்தனத்துக்குள் ஆக்கிரமிப்பும் வருகிறதல்லவா? அடிமைத்தனம் உடைக்கப்படும்போது ஆக்கிரமிப்பு தானாக விலகிக்கொள்ளும்.
சிங்கள தேசம் தனது அரசியல் தலமை தெரிவு செய்யிற தேர்தலில் தமிழருக்கு பிரச்சார மேடையில சம உரிமை வழங்கப்படவில்லை, சிங்கள இனவாத குழுக்களுக்களின் நிபந்தனைகளுக்கு ஆமாப்போடுறார் வேட்பாளர் என்று விமர்சனம் செய்யிற தமிழ் ஈழ உணர்வாளர்களை என்வென்று விளங்கிறது? விளக்கம் கேட்டால் அப்ப அவர் இன்னும் இனவாதத்தை காட்டி பிரச்சாரம் செய்யட்டும் என்றியள். உங்கடை குளப்புத்துக்கு ஏன் மற்றவையில குறை பிடிக்கிறியள்
.
.
.

