10-20-2005, 04:24 AM
கிளிநொச்சி படைமுகாமில் முன்னரங்க நிலைகளை தகர்த்தழிப்பதற்காக காத்திருந்த அணிகளுக்கு சண்டையை ஆரம்பிப்பதற்கான கட்டளை கிடைத்ததும் முன்னரங்க காவலரண்களைத் தாக்கியழித்து முன்னேறியவாறு அணிகள் நகரத் தொடங்கின. இப்படைத்தளத்தைச் சுற்றி 25 அல்லது 30 மீற்றருக்கு ஒரு காவலரணாக ஏறத்தாழ 500 இற்கு மேற்பட்ட முன்னணி பாதுகாப்பு அரண்கள் அமைந்திருந்தன. இவற்றோடு மண் அரண்கள், முட்கம்பிச் சுருள்கள் கண்ணிவெடிகள் எனப் பல பாதுகாப்பு அரண்கள் இருந்தன.
இவற்றைத் தகர்த்தழித்தவாறு முன்னேறிய புலிகள்; அணிகளின் அடுத்த இலக்காக கிளிநொச்சி 6 ஆம் வாய்க்காலில் அமைந்திருந்த 10 ஆவது சிங்கறெஜிமென்ற் - தளம் கணேசபுரப் பகுதியில் அமைந்திருந்த 4 ஆவது சிங்கறெஜிமென்ற் தளம், பிரதான பாதையோரமாக இருந்த 6 ஆவது கெமுனு வோச்தளம், திருவையாற்றிலிருந்த 7 ஆவது கெமுனுவோச் தளம் என்பன அமைந்திருந்தன. இவற்றோடு புலிகளின் தாக்குதல் வியுூகத்துக்கும் அமைந்திருந்த 9 ஆம் வாய்க்கால் பகுதியில் இருந்த 9 ஆவது கெமுனுவோச் தளமும், கரடிப்போக்கு மேற்குப் பகுதியிலிருந்த 7 ஆவது சிறிலங்கா காலாட் படைத்தளமும், மக்கள் வங்கிக் கட்டடத்தினருகிலிருந்த கிளிநொச்சி பிரிக்கேடின் தலைமையகமும் தாக்கப் படவேண்டிய இலக்குகளாகவிருந்தன. இவற்றோடு பல மினி முகாம்களும் இப்பெரும் படைத்தளத்தினுள் இருந்தன. இவற்றை வெற்றிகரமாக தாக்கியழிக்கும் பணியில் விடுதலைப் புலிகளின் பல படையணிகளும் தீவிரமாக செயற்பட்டன.
இச்சமரில் மகளிர் படையணிகளின் பங்கும் அளப்பரியதாகவே அமைந்திருந்தன. இச்சமரில் பங்குபற்றிய மகளிர் அணிகளில் 2 ஆம் லெப். மாலதி படையணியின் தளபதி கேணல் விதுசா அன்றைய போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியும் போராளிகளின் தீரமிகு தாக்குதல்கள் பற்றியும் அவர்களின் தியாகங்களையும் இன்றைய நாளில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
2 ஆம் லெப் மாலதி படையணி மூன்று முனைகளில் இராணுவக் காப்பரண்களைத் தாக்க உட்புகுந்தது. படையினரின் வெளிப்புறப் பாதுகாப்பு வேலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளை கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்குத் தப்பியோடாமலும், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிக்கு உதவிப்படைகள் வராமலும் தடுக்கும் ஊடறுத்து வழிமறிக்கும் அணியாகவும் செயற்பட்டிருந்தது. நாங்கள் தாக்க வேண்டிய பகுதி வேவு பார்க்கப்படாத பகுதியாக விருந்தது. ஏனெனில் நாம் போவதற்காக வேவுப் போராளிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்த பகுதியில் இராணுவத்தினர் படைத்தளத்திற்கு வெளியே வந்து உலாவத் தொடங்கியிருந்தார்கள்.
எனவே திடீரென எமக்கு வேறு ஒரு பாதை சண்டை நடக்கவிருந்த அன்று மாலை காட்டப்பட்டது. நாங்கள் அருகே போய் தடைகளையும் காப்பரண்களையும் பார்க்க முனைந்தால் இப்பகுதிச் சண்டை குழம்பி விடும் ஆபத்து இருந்தது. பரந்த வெளியுூடே எமது உருவங்களை மறைத்தவாறு 50 கலிபர் போன்ற கனரக ஆயுதங்களுடன் நாம் நகரும்போது காப்பரண்களிலிருந்தே எதிரியால் தேடொளி பாய்ச்சப்பட்டது. வெளிச்சக் குண்டுகள் ஏவப்பட்டன. படைத் தளங்களோ மிக விழிப்பாக இருந்தன. இத்தனைக்கும் மத்தியில் தடை வரை நகர்ந்த பின்னர்தான் காப்புச் சூட்டாளர்களை நிலைப்படுத்துவதற்கான இடங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.
காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்து பக்கக் காப்பரண்களைக் கைப்பற்றியவாறு போகும்போது எமக்குப் பின்புறமாக பிளாட்டூன் தலைமையகத்திலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. நிலத்துக்குமேலே உயரமாக அமைக்கப்பட்டிருந்த காப்பரண்களிலிருந்து கனரகச் சூடுகளை இராணுவத்தினர் வழங்கிக் கொண்டிருந்தனர். காப்பரண் வரிசையிலிருந்து குறுக்கே வெட்டப்பட்டிருந்த நகர்வகழிக்குள்ளிருந்தும் (மூவிங்பங்கர்) படையினர் தாக்கினார்கள.; உள்ளிருந்த உயர்ந்த கட்டடமொன்றிலிருந்தும் கடும் எதிர்ப்பு வந்தது. அந்த நேரம் எங்களுடைய 50 கலிபர் தாக்குதல் போராளிகளின் திறமையான செயற்பாடு நிலைமையை மாற்றியது. ஓரிடத்திலிருந்து குறிப்பிட்ட ரவைகளை அடித்துவிட்டு உடனேயே தமது நிலையை மாற்றி மாற்றி தாக்குதலை மேற்கொண்டார்கள்.
எங்களுடைய இழப்புக்களை குறைத்து இராணுவத்தினரின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதில் இக்கனரக ஆயுத அணி பெரும் பங்காற்றியது. நீண்டு தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைச் சமரில் தொடர்ந்து பங்காற்றிய எமது கனரக ஆயுத அணியினர் குறுகிய காலத்தில் கடும் பயிற்சியைப் பெற்று மிகுந்த சிரமத்தின் நடுவேதான் சண்டைக்கான நகர்வைச் செய்திருந்தார்கள்.
திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட எமது பாதைக்கருகே இராணுவம் வெளியே உலாவுகின்ற பகுதி இருந்தது. எனவே எமது கவனக்குறைவால் எதிரி விழிப்படைந்து சண்டை குழம்பி விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருந்தோம். உடலின் உயரத்தை குறைத்து (பென்ட்மூவ்) மிக நீண்ட து}ரம் கனரக ஆயுதங்களுடன் நகருவது இலகுவான விடயமல்ல. மிகச் சிறப்பாக இச் சண்டையில் எமது போராளிகள் செயலாற்றியிருந்தார்கள்.
இச்சண்டையில் எமது போராளிகளின் மனவுறுதியை மேம்படுத்தும் தியாகங்கள் பலவும் நடந்தேறின. அதாவது ஊடறுத்து உள்நுழைந்து வழிமறிக்கும் அணியோடு மழையில் நனைந்தபடி பயிற்சி பெற்ற காலத்தில் லெப். கேணல் செல்வியின் தலையிலும் உடலின் பல பாகங்களிலும் இருந்த ஷெல்லின் சிதறு துண்டுகளின் தாக்கத்தால் ஒரு கையும் காலும் முழுமையாக இயங்காதிருந்தது. பயிற்சிக்குப் பொறுப்பாக இருந்த தளபதி இவரை வெளியே எடுக்குமாறு கூறியிருந்த போதும் தன்னால் செய்யமுடியும் என்று செல்வி வர மறுத்துவிட்டார்.
கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் தான் பங்குபற்ற வேண்டும் என்று உறுதியோடு சென்ற அவர் நடவடிக்கையின் முடிவில் அவிழ்த்துவிட்ட விலங்குப்பட்டி போல எமது ஊடறுப்பு நிலைகளைக் கடந்து இராணுவம் ஓட முனைந்தபோது தன்னையும் பாராமல் எறிகணைகளை வீசுமாறு கேட்டு பல இராணுவத்தினரை அழித்ததோடு தானும் வீர வரலாறானார்.
செல்வியோடு நின்ற வீரவேங்கை அக அன்பு (அகன்பு) வைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். புதிய போராளியாக ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கை முனைக்கு வந்த இவரை அடர்காடு அச்சமடையச் செய்துவிட்டது. செல்வியின் அணி வழிமறிப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது அகன்புவும் பயிற்சியில் ஈடுபட்டார். ஊடறுப்பு நடவடிக்கை சண்டையின் மிக முக்கியமான செயற்பாடு என்பதால் அதில் பங்கேற்பவர்கள் உறுதி மிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
எனவே அகன்புவைப் பயிற்சியெடுக்க வேண்டாமென்றும் அவருக்கு பதிலாக வேறொரு போராளியை விடுவதாகவும் நான் கூறிய போது அவர் மறுத்து விட்டார். தான் திறமையாக நடவடிக்கையைச் செய்வேன் என்று கூறினார். சண்டையில் இராணுவத்தினர் பெருந்திரளாக ஓடிய அந்த சந்தர்ப்பத்தில் தன்னிடமிருந்த ரவைகள் முடிவடையும் வரை சுட்டுவிட்டே வீரச்சாவடைந்தார். இவருடைய மனவுறுதி புதிய போராளிகளின் உறுதியான செயற்பாட்டுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்தச் சண்டை எமக்கு ஒரு மாறுபட்ட கள அனுபவத்தை ஏற்படுத்தியது. அதாவது இச்சமருக்கு அண்மைக்காலங்களில் தாண்டிக்குளம் உட்பட எமது பல ஊடுருவல் தாக்குதல்கள் காடுகளிலேயே நடந்தன. காட்டுப் பகுதியில் எதிரியின் நிலைகளுக்கு அருகே நெருங்கிப் போய் வேவு பார்த்துத் தாக்கலாம். காட்டுச் சண்டைகளுக்குப் பழக்கப்பட்ட அணிகள் பரந்த வெளியால் நகர்ந்து கட்டடங்களிடையே சண்டை பிடித்தமை. வேறுபட்ட அனுபவம். இரவு வேளையில் நாம் காப்பரண்களைக் கைப்பற்றி வெளியான பகுதியில் நிலைகொள்ள பகல் வெளிச்சத்தில் மறைந்திருந்த இராணுவம் எம்மைத் தாக்கியதில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்டன.
காட்டுச் சண்டைகளில் இத்தகைய நிலை இல்லை. எனவே வெளியான பகுதிகளில் நின்று எமதணிகள் கட்டடப் பகுதிக்குள் நின்ற இராணுவத்தோடு சண்டையிட்டன. அந்த நேரத்தில் ஒரு மாறுபட்ட கள அனுபவம் மிகப் பலங் கொண்ட படைத்தளமாக கருதப்பட்ட ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து எந்த நேரமும் உதவி பெறக்கூடிய நிலையிலிருந்த கிளிநொச்சிப் படைத்தளத்தை முற்றாக அழித்ததும், பெரியது எண்ணிக்கையில் போராளிகள் வழிமறிப்பு அணியாக ஊடுருவி நின்றதும் வேறுபாடான அனுபவங்களே. இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு வழிமறிப்பு அணி மிகுந்த பங்காற்றியது. இச்சண்டைக்காக அவர்கள் எடுத்த பயிற்சி கடினமானது.
ஜெயசிக்குறு இராணுவத்தினரின் எறிகணை வீச்செல்லைக்குள் விமானக்குண்டு வீச்சுக்களிடையே மாற்ற உடையுமின்றி மழையில் நனைந்து வெயிலில் உலர்ந்தபடி பயிற்சி எடுப்பதும் பின்பு இரவு வேளைகளில் காப்பரண்களில் காவல் செய்ததுமாய் மிகக் கடுமையாக இவ்வெற்றிக்காக உழைத்திருந்தார்கள். நனைந்த குளிருக்குச் சூடாகத் தேநீர் குடிக்கக் கூட வசதி இருக்கவில்லை.
வழிமறிப்பு அணியினரின் ஆயுதங்களுக்கேற்ப நிலைப்படுத்தல், இவர்களுக்கான ஆதரவுச்சூடு என அனைத்தையும் தலைவர் அவர்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு நெறிப்படுத்திப் பயிற்சி வழங்கியமையானது சண்டையை மிகவும் இலகுவாக்கியது. ஏனெனில் சண்டை தொடங்கி மூன்று நாட்களின் பின்னர் முடியும்வரை வழிமறிப்பு அணியினர் தமது நிலைகளிலிருந்து அசையவில்லை. சத்ஜெய - 1, 2, 3 எதிர் நடவடிக்கைகளில் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழாதிருக்கப் போராடியது. மறுபடி பரந்தன் கிளிநொச்சி (1998.02.01) இல் ஊடுருவித் தாக்குதல் மூலம் நிலத்தை மீட்க முயன்ற நடவடிக்கையில் பங்கேற்றதான நினைவுகள் பயிற்சியின் போது எமதணிகளுக்கு உரமூட்டின.
யாழ். நெடுஞ்சாலைக்கு இடப்புறமாக புகையிரதப் பாதையருகே 2 ஆம் லெப். மாலதி படையணியைச் சேர்ந்த ஜமுனாவின் அணி உடைத்து உள்நுழைந்தது. அயலில் வேறு அணிகள் எடுத்த பாதைகள் போராளிகளிடமும் இராணுவத்தினரிடமும் கைமாறியபடியிருந்தாலும் தமது பாதையை அவர்கள் தக்க வைத்திருந்தார்கள். பல நடவடிக்கைகளைச் செய்வதற்கு அவர்களது பாதை பேருதவியாக இருந்தது. மிகக் குறைந்தளவு போராளிகளே இவ்வணியிலிருந்தனர். மிகக் குறைந்தளவு பயிற்சியையே அவர்கள் எடுத்திருந்தார்கள். என்னுடைய தொடர்பேதுமின்றி தனியாகவே அவர்கள் திறம்படச் செயலாற்றினார்கள்.
இவ்வெற்றிச் சமரில் மகளிர் அணியின் 2 ஆம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி, கப்டன் அன்பரசி படையணி, சிறப்பு (மகளிர்) படையணி, புலனாய்வுத்துறை மகளிர் தாக்குதலணி போன்ற பல மகளிர் படையணிகள் பல முனைகளில் வெளிப்புறக் காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்ததோடு வழிமறிப்பு அணியாகவும் பங்காற்றினார்கள். மிக அதிகளவான பெண் போராளிகள் இச்சமரில் பங்காற்றினார்கள். நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து இறுதி தேடுதல் நடவடிக்கை வரை அவர்களின் பணி தொடர்ந்தது எனக் கூறினார்.
இவற்றைத் தகர்த்தழித்தவாறு முன்னேறிய புலிகள்; அணிகளின் அடுத்த இலக்காக கிளிநொச்சி 6 ஆம் வாய்க்காலில் அமைந்திருந்த 10 ஆவது சிங்கறெஜிமென்ற் - தளம் கணேசபுரப் பகுதியில் அமைந்திருந்த 4 ஆவது சிங்கறெஜிமென்ற் தளம், பிரதான பாதையோரமாக இருந்த 6 ஆவது கெமுனு வோச்தளம், திருவையாற்றிலிருந்த 7 ஆவது கெமுனுவோச் தளம் என்பன அமைந்திருந்தன. இவற்றோடு புலிகளின் தாக்குதல் வியுூகத்துக்கும் அமைந்திருந்த 9 ஆம் வாய்க்கால் பகுதியில் இருந்த 9 ஆவது கெமுனுவோச் தளமும், கரடிப்போக்கு மேற்குப் பகுதியிலிருந்த 7 ஆவது சிறிலங்கா காலாட் படைத்தளமும், மக்கள் வங்கிக் கட்டடத்தினருகிலிருந்த கிளிநொச்சி பிரிக்கேடின் தலைமையகமும் தாக்கப் படவேண்டிய இலக்குகளாகவிருந்தன. இவற்றோடு பல மினி முகாம்களும் இப்பெரும் படைத்தளத்தினுள் இருந்தன. இவற்றை வெற்றிகரமாக தாக்கியழிக்கும் பணியில் விடுதலைப் புலிகளின் பல படையணிகளும் தீவிரமாக செயற்பட்டன.
இச்சமரில் மகளிர் படையணிகளின் பங்கும் அளப்பரியதாகவே அமைந்திருந்தன. இச்சமரில் பங்குபற்றிய மகளிர் அணிகளில் 2 ஆம் லெப். மாலதி படையணியின் தளபதி கேணல் விதுசா அன்றைய போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியும் போராளிகளின் தீரமிகு தாக்குதல்கள் பற்றியும் அவர்களின் தியாகங்களையும் இன்றைய நாளில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
2 ஆம் லெப் மாலதி படையணி மூன்று முனைகளில் இராணுவக் காப்பரண்களைத் தாக்க உட்புகுந்தது. படையினரின் வெளிப்புறப் பாதுகாப்பு வேலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளை கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்குத் தப்பியோடாமலும், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிக்கு உதவிப்படைகள் வராமலும் தடுக்கும் ஊடறுத்து வழிமறிக்கும் அணியாகவும் செயற்பட்டிருந்தது. நாங்கள் தாக்க வேண்டிய பகுதி வேவு பார்க்கப்படாத பகுதியாக விருந்தது. ஏனெனில் நாம் போவதற்காக வேவுப் போராளிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்த பகுதியில் இராணுவத்தினர் படைத்தளத்திற்கு வெளியே வந்து உலாவத் தொடங்கியிருந்தார்கள்.
எனவே திடீரென எமக்கு வேறு ஒரு பாதை சண்டை நடக்கவிருந்த அன்று மாலை காட்டப்பட்டது. நாங்கள் அருகே போய் தடைகளையும் காப்பரண்களையும் பார்க்க முனைந்தால் இப்பகுதிச் சண்டை குழம்பி விடும் ஆபத்து இருந்தது. பரந்த வெளியுூடே எமது உருவங்களை மறைத்தவாறு 50 கலிபர் போன்ற கனரக ஆயுதங்களுடன் நாம் நகரும்போது காப்பரண்களிலிருந்தே எதிரியால் தேடொளி பாய்ச்சப்பட்டது. வெளிச்சக் குண்டுகள் ஏவப்பட்டன. படைத் தளங்களோ மிக விழிப்பாக இருந்தன. இத்தனைக்கும் மத்தியில் தடை வரை நகர்ந்த பின்னர்தான் காப்புச் சூட்டாளர்களை நிலைப்படுத்துவதற்கான இடங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.
காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்து பக்கக் காப்பரண்களைக் கைப்பற்றியவாறு போகும்போது எமக்குப் பின்புறமாக பிளாட்டூன் தலைமையகத்திலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. நிலத்துக்குமேலே உயரமாக அமைக்கப்பட்டிருந்த காப்பரண்களிலிருந்து கனரகச் சூடுகளை இராணுவத்தினர் வழங்கிக் கொண்டிருந்தனர். காப்பரண் வரிசையிலிருந்து குறுக்கே வெட்டப்பட்டிருந்த நகர்வகழிக்குள்ளிருந்தும் (மூவிங்பங்கர்) படையினர் தாக்கினார்கள.; உள்ளிருந்த உயர்ந்த கட்டடமொன்றிலிருந்தும் கடும் எதிர்ப்பு வந்தது. அந்த நேரம் எங்களுடைய 50 கலிபர் தாக்குதல் போராளிகளின் திறமையான செயற்பாடு நிலைமையை மாற்றியது. ஓரிடத்திலிருந்து குறிப்பிட்ட ரவைகளை அடித்துவிட்டு உடனேயே தமது நிலையை மாற்றி மாற்றி தாக்குதலை மேற்கொண்டார்கள்.
எங்களுடைய இழப்புக்களை குறைத்து இராணுவத்தினரின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதில் இக்கனரக ஆயுத அணி பெரும் பங்காற்றியது. நீண்டு தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைச் சமரில் தொடர்ந்து பங்காற்றிய எமது கனரக ஆயுத அணியினர் குறுகிய காலத்தில் கடும் பயிற்சியைப் பெற்று மிகுந்த சிரமத்தின் நடுவேதான் சண்டைக்கான நகர்வைச் செய்திருந்தார்கள்.
திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட எமது பாதைக்கருகே இராணுவம் வெளியே உலாவுகின்ற பகுதி இருந்தது. எனவே எமது கவனக்குறைவால் எதிரி விழிப்படைந்து சண்டை குழம்பி விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருந்தோம். உடலின் உயரத்தை குறைத்து (பென்ட்மூவ்) மிக நீண்ட து}ரம் கனரக ஆயுதங்களுடன் நகருவது இலகுவான விடயமல்ல. மிகச் சிறப்பாக இச் சண்டையில் எமது போராளிகள் செயலாற்றியிருந்தார்கள்.
இச்சண்டையில் எமது போராளிகளின் மனவுறுதியை மேம்படுத்தும் தியாகங்கள் பலவும் நடந்தேறின. அதாவது ஊடறுத்து உள்நுழைந்து வழிமறிக்கும் அணியோடு மழையில் நனைந்தபடி பயிற்சி பெற்ற காலத்தில் லெப். கேணல் செல்வியின் தலையிலும் உடலின் பல பாகங்களிலும் இருந்த ஷெல்லின் சிதறு துண்டுகளின் தாக்கத்தால் ஒரு கையும் காலும் முழுமையாக இயங்காதிருந்தது. பயிற்சிக்குப் பொறுப்பாக இருந்த தளபதி இவரை வெளியே எடுக்குமாறு கூறியிருந்த போதும் தன்னால் செய்யமுடியும் என்று செல்வி வர மறுத்துவிட்டார்.
கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் தான் பங்குபற்ற வேண்டும் என்று உறுதியோடு சென்ற அவர் நடவடிக்கையின் முடிவில் அவிழ்த்துவிட்ட விலங்குப்பட்டி போல எமது ஊடறுப்பு நிலைகளைக் கடந்து இராணுவம் ஓட முனைந்தபோது தன்னையும் பாராமல் எறிகணைகளை வீசுமாறு கேட்டு பல இராணுவத்தினரை அழித்ததோடு தானும் வீர வரலாறானார்.
செல்வியோடு நின்ற வீரவேங்கை அக அன்பு (அகன்பு) வைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். புதிய போராளியாக ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கை முனைக்கு வந்த இவரை அடர்காடு அச்சமடையச் செய்துவிட்டது. செல்வியின் அணி வழிமறிப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது அகன்புவும் பயிற்சியில் ஈடுபட்டார். ஊடறுப்பு நடவடிக்கை சண்டையின் மிக முக்கியமான செயற்பாடு என்பதால் அதில் பங்கேற்பவர்கள் உறுதி மிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
எனவே அகன்புவைப் பயிற்சியெடுக்க வேண்டாமென்றும் அவருக்கு பதிலாக வேறொரு போராளியை விடுவதாகவும் நான் கூறிய போது அவர் மறுத்து விட்டார். தான் திறமையாக நடவடிக்கையைச் செய்வேன் என்று கூறினார். சண்டையில் இராணுவத்தினர் பெருந்திரளாக ஓடிய அந்த சந்தர்ப்பத்தில் தன்னிடமிருந்த ரவைகள் முடிவடையும் வரை சுட்டுவிட்டே வீரச்சாவடைந்தார். இவருடைய மனவுறுதி புதிய போராளிகளின் உறுதியான செயற்பாட்டுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்தச் சண்டை எமக்கு ஒரு மாறுபட்ட கள அனுபவத்தை ஏற்படுத்தியது. அதாவது இச்சமருக்கு அண்மைக்காலங்களில் தாண்டிக்குளம் உட்பட எமது பல ஊடுருவல் தாக்குதல்கள் காடுகளிலேயே நடந்தன. காட்டுப் பகுதியில் எதிரியின் நிலைகளுக்கு அருகே நெருங்கிப் போய் வேவு பார்த்துத் தாக்கலாம். காட்டுச் சண்டைகளுக்குப் பழக்கப்பட்ட அணிகள் பரந்த வெளியால் நகர்ந்து கட்டடங்களிடையே சண்டை பிடித்தமை. வேறுபட்ட அனுபவம். இரவு வேளையில் நாம் காப்பரண்களைக் கைப்பற்றி வெளியான பகுதியில் நிலைகொள்ள பகல் வெளிச்சத்தில் மறைந்திருந்த இராணுவம் எம்மைத் தாக்கியதில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்டன.
காட்டுச் சண்டைகளில் இத்தகைய நிலை இல்லை. எனவே வெளியான பகுதிகளில் நின்று எமதணிகள் கட்டடப் பகுதிக்குள் நின்ற இராணுவத்தோடு சண்டையிட்டன. அந்த நேரத்தில் ஒரு மாறுபட்ட கள அனுபவம் மிகப் பலங் கொண்ட படைத்தளமாக கருதப்பட்ட ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து எந்த நேரமும் உதவி பெறக்கூடிய நிலையிலிருந்த கிளிநொச்சிப் படைத்தளத்தை முற்றாக அழித்ததும், பெரியது எண்ணிக்கையில் போராளிகள் வழிமறிப்பு அணியாக ஊடுருவி நின்றதும் வேறுபாடான அனுபவங்களே. இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு வழிமறிப்பு அணி மிகுந்த பங்காற்றியது. இச்சண்டைக்காக அவர்கள் எடுத்த பயிற்சி கடினமானது.
ஜெயசிக்குறு இராணுவத்தினரின் எறிகணை வீச்செல்லைக்குள் விமானக்குண்டு வீச்சுக்களிடையே மாற்ற உடையுமின்றி மழையில் நனைந்து வெயிலில் உலர்ந்தபடி பயிற்சி எடுப்பதும் பின்பு இரவு வேளைகளில் காப்பரண்களில் காவல் செய்ததுமாய் மிகக் கடுமையாக இவ்வெற்றிக்காக உழைத்திருந்தார்கள். நனைந்த குளிருக்குச் சூடாகத் தேநீர் குடிக்கக் கூட வசதி இருக்கவில்லை.
வழிமறிப்பு அணியினரின் ஆயுதங்களுக்கேற்ப நிலைப்படுத்தல், இவர்களுக்கான ஆதரவுச்சூடு என அனைத்தையும் தலைவர் அவர்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு நெறிப்படுத்திப் பயிற்சி வழங்கியமையானது சண்டையை மிகவும் இலகுவாக்கியது. ஏனெனில் சண்டை தொடங்கி மூன்று நாட்களின் பின்னர் முடியும்வரை வழிமறிப்பு அணியினர் தமது நிலைகளிலிருந்து அசையவில்லை. சத்ஜெய - 1, 2, 3 எதிர் நடவடிக்கைகளில் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழாதிருக்கப் போராடியது. மறுபடி பரந்தன் கிளிநொச்சி (1998.02.01) இல் ஊடுருவித் தாக்குதல் மூலம் நிலத்தை மீட்க முயன்ற நடவடிக்கையில் பங்கேற்றதான நினைவுகள் பயிற்சியின் போது எமதணிகளுக்கு உரமூட்டின.
யாழ். நெடுஞ்சாலைக்கு இடப்புறமாக புகையிரதப் பாதையருகே 2 ஆம் லெப். மாலதி படையணியைச் சேர்ந்த ஜமுனாவின் அணி உடைத்து உள்நுழைந்தது. அயலில் வேறு அணிகள் எடுத்த பாதைகள் போராளிகளிடமும் இராணுவத்தினரிடமும் கைமாறியபடியிருந்தாலும் தமது பாதையை அவர்கள் தக்க வைத்திருந்தார்கள். பல நடவடிக்கைகளைச் செய்வதற்கு அவர்களது பாதை பேருதவியாக இருந்தது. மிகக் குறைந்தளவு போராளிகளே இவ்வணியிலிருந்தனர். மிகக் குறைந்தளவு பயிற்சியையே அவர்கள் எடுத்திருந்தார்கள். என்னுடைய தொடர்பேதுமின்றி தனியாகவே அவர்கள் திறம்படச் செயலாற்றினார்கள்.
இவ்வெற்றிச் சமரில் மகளிர் அணியின் 2 ஆம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி, கப்டன் அன்பரசி படையணி, சிறப்பு (மகளிர்) படையணி, புலனாய்வுத்துறை மகளிர் தாக்குதலணி போன்ற பல மகளிர் படையணிகள் பல முனைகளில் வெளிப்புறக் காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்ததோடு வழிமறிப்பு அணியாகவும் பங்காற்றினார்கள். மிக அதிகளவான பெண் போராளிகள் இச்சமரில் பங்காற்றினார்கள். நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து இறுதி தேடுதல் நடவடிக்கை வரை அவர்களின் பணி தொடர்ந்தது எனக் கூறினார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

