11-20-2003, 07:14 PM
<img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/b_shahrukh-kajol.jpg' border='0' alt='user posted image'>
விடிந்தபோது என்விழியில் உன்விம்பம்
எங்கு நோக்கிலும் நீ
உன் பேச்சு.. உன் சிரிப்பு...
'எப்போது உன்முகம் பார்பேன்?'
கெஞ்சியது என்மனம்...
'நேற்றுத்தானே பார்த்தாய்
இன்றே எப்படி..?'
'எதைப்பற்றியும் கவலையில்லை...
உன்னைப்பார்க்கவேண்டும்'
எனக்குள்ளே சண்டை
மனதுக்கும் மனசாட்சிக்கும்..
மனசாட்சி தோற்றுப்போனது...
பல்விளக்கவில்லை...
முகம் கழுவவில்லை...
கலைந்த தலைவாரவில்லை..
கையில் கிடைத்த சேட்டைமாட்டி
வெளியேவந்துவிட்டேன
ஏழு மணிக்கு
நீ அரசடிவீதிக்கு படிக்கவருவாய்
பார்த்துவிடலாம்..
பார்த்தே ஆகவேண்டும்...
செய்தித்தாள் ஒன்றைவாங்கிக்கொண்டு
தபால்பெட்டி அருகில் நின்றுகொண்டேன்..
உன்தோழிகள் குளாம் சென்றது
நீ அதில் இல்லை....
என்னாயிற்று உனக்கு?..
எனமனது படபடத்தது....
கவலை வந்துஒட்டிக்கொண்டது..
வீடுவந்துவிட்டேன்
எதோ கேட்ட தம்பியிடம்
எரிந்துவீழுந்தேன்...
ஒருநாள்
இரண்டுநாள்
மூன்றுநாள்
நான்குநாள்
பொறுமை காத்தேன்
நாட்கள் எல்லாம்
வருடங்களானது எப்போது...
ஒவ்வொரு மணித்துளியும்
நரகத்தில் கழித்தேன்
ஒருவாறு என்வாழ்வில்
வெள்ளிவந்தது...
என்னைப்பார்ததுதான்
உன்விழியில் என்ன ஒளி
குழந்தைபோல் ஓடிவந்தாய்
என்னருகில்...
உன்கையை
இறுகப்பிடித்துக்கொண்டேன்
விட்டுவிட்டால்
என்னுயிர் போய்விடலாம்
கைகளுக்கூடே மின்சாரம்
இதயம்
மீண்டும்
இயங்கத்தொடங்கியது
"........ உன்னைப்பார்க்காமல்
ஒரு நொடி கூட
என்னால்இருக்கமுடியவில்லை...
உன்னோடுதான்
என்வாழ்வு அமையவேண்டும்..."
"ஏற்றுக்கொள்வாயா?"
நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்..
உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர்
ஏதோ சொல்லவந்தாய்
வார்த்தைகள்
வெளியேவரவில்லை
கனிவாகப்பார்த்தாய்
பின்
என் கைகளை எடுத்து
யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்..
விடிந்தபோது என்விழியில் உன்விம்பம்
எங்கு நோக்கிலும் நீ
உன் பேச்சு.. உன் சிரிப்பு...
'எப்போது உன்முகம் பார்பேன்?'
கெஞ்சியது என்மனம்...
'நேற்றுத்தானே பார்த்தாய்
இன்றே எப்படி..?'
'எதைப்பற்றியும் கவலையில்லை...
உன்னைப்பார்க்கவேண்டும்'
எனக்குள்ளே சண்டை
மனதுக்கும் மனசாட்சிக்கும்..
மனசாட்சி தோற்றுப்போனது...
பல்விளக்கவில்லை...
முகம் கழுவவில்லை...
கலைந்த தலைவாரவில்லை..
கையில் கிடைத்த சேட்டைமாட்டி
வெளியேவந்துவிட்டேன
ஏழு மணிக்கு
நீ அரசடிவீதிக்கு படிக்கவருவாய்
பார்த்துவிடலாம்..
பார்த்தே ஆகவேண்டும்...
செய்தித்தாள் ஒன்றைவாங்கிக்கொண்டு
தபால்பெட்டி அருகில் நின்றுகொண்டேன்..
உன்தோழிகள் குளாம் சென்றது
நீ அதில் இல்லை....
என்னாயிற்று உனக்கு?..
எனமனது படபடத்தது....
கவலை வந்துஒட்டிக்கொண்டது..
வீடுவந்துவிட்டேன்
எதோ கேட்ட தம்பியிடம்
எரிந்துவீழுந்தேன்...
ஒருநாள்
இரண்டுநாள்
மூன்றுநாள்
நான்குநாள்
பொறுமை காத்தேன்
நாட்கள் எல்லாம்
வருடங்களானது எப்போது...
ஒவ்வொரு மணித்துளியும்
நரகத்தில் கழித்தேன்
ஒருவாறு என்வாழ்வில்
வெள்ளிவந்தது...
என்னைப்பார்ததுதான்
உன்விழியில் என்ன ஒளி
குழந்தைபோல் ஓடிவந்தாய்
என்னருகில்...
உன்கையை
இறுகப்பிடித்துக்கொண்டேன்
விட்டுவிட்டால்
என்னுயிர் போய்விடலாம்
கைகளுக்கூடே மின்சாரம்
இதயம்
மீண்டும்
இயங்கத்தொடங்கியது
"........ உன்னைப்பார்க்காமல்
ஒரு நொடி கூட
என்னால்இருக்கமுடியவில்லை...
உன்னோடுதான்
என்வாழ்வு அமையவேண்டும்..."
"ஏற்றுக்கொள்வாயா?"
நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்..
உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர்
ஏதோ சொல்லவந்தாய்
வார்த்தைகள்
வெளியேவரவில்லை
கனிவாகப்பார்த்தாய்
பின்
என் கைகளை எடுத்து
யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்..

