11-20-2003, 12:48 PM
தேசிய அரசாங்கத்தில் இடம் பெறப் போவது யார் யார்? இதில் தமிழ்க்கட்சிகளின் பங்கென்ன. இவர்களால் அதற்குள் இருந்து கொண்டு எமது பிரச்சனைகளை தீர்க்கும் தைரியம் வருமா? நிச்சயமாய் விரோதங்கள் வளர்க்கவில்லை. ஆனால் ஆச்சியின் வரலாறு பற்றி புரியாமல் பேசுகின்றீர்கள். அவர் எப்போழுதும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணியதேயில்லை. பிரச்சனைகள் முடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற்று வந்த போதே அதைச் செய்திருக்கலாம். காலம் கடந்த ஞானோதயங்கள் அவர்களுக்கு உதிப்பது, இன்றைய அரசியல் நிலைமையே காரணம். மற்றது வெளிநாடுகளின் அழுத்தங்களும். மதி, ஆச்சி என்ன அண்ணா என்ன பேரினம் யார் வந்தாலும் இது தான் என் பதில். நிச்சயமாய் அயல் நாடு வி.புலிகள் கொடுத்த தீர்வுத்திட்டத்தினை அங்கிகரீக்க விட மாட்டார்கள். பேரினவாதம் சரி என்று சொன்னாம் கூட. இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை ஒரளவு அழுத்தங்களை கொடுக்கலாம். ஒன்று பட்டுச் செயல் படுவார்களா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

