Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்;அப்துல்கலாம்
#1
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்: ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. பெண் விடுதலைப்புலி தணு வெடிகுண்டுடன் வந்து இந்த கொலையில் ஈடுபட்டாள்.

தணுவுடன் வந்த சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலைப்புலி முருகன் அவரது மனைவி நளினி, ஜி.பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ததில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் கடந்த 14 வருடங்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். 3 பேரும் தங்களுக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர்.

இவர்களுடன் நாடு முழுவதும் மொத்தம் 50 தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர்.

1993-ம் ஆண்டு 21 போலீசாரை கொன்ற வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், மாதையா, பிலவேந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர்சிங் பிட்டா மீது வெடிகுண்டு வீசி தாக்கிய காலிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவிந்தர்சிங் புல்லார் ஆகியோரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனு அளித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கருணை மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி அப்துல்கலாம் இது தொடர்பாக பல்வேறு யோசனைகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் மரண தண்டனையில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு மன்னிப்பு அளிக்கலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இது போல் மற்ற மரண தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

மரண தண்டனை கைதிகள் அனுப்பிய கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவை ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்து வந்தது.

இந்த மனுக்கள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால் அனைத்து மனுக்கள் மீதும் பரிசீலனை முடிவுற்ற நிலையில் அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும், இந்த மனுக்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு தகுதியற்றவையாக உள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது.

இதனால் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்துறை மந்திரி சிவராஜ்பட்டீலுக்கு கடிதம் எழுதினார். அதில், "கருணை மனுக்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்கள் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளை போதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், "மரண தண்டனை கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகி விட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டால் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற கைதிகளை சுமையாக கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வாழ்வின் மீதம் உள்ள நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்'' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

கருணை மனுவை உள்துறை அமைச்சகம் தகுதியவற்றவை என்று கூறி ஏற்க மறுத்து விட்ட நிலையில் ஜனாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதை ஏற்று கருணை மனுவை பரிசீலிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதில் உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தூக்கு கைதிகள் தண்டனையில் இருந்து தப்பு வார்களா? என்பது தெரிய வரும்.
thinakural.com
http://www.lankasrinews.com/sp.php
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்;அப்துல்கலாம் - by வினித் - 10-17-2005, 10:42 AM
[No subject] - by aathipan - 10-17-2005, 10:55 AM
[No subject] - by Vasampu - 10-17-2005, 12:17 PM
[No subject] - by வினித் - 10-17-2005, 12:21 PM
[No subject] - by AJeevan - 10-17-2005, 01:20 PM
[No subject] - by poonai_kuddy - 10-17-2005, 02:51 PM
[No subject] - by kuruvikal - 10-17-2005, 03:44 PM
[No subject] - by Vasampu - 10-17-2005, 05:33 PM
[No subject] - by Mathan - 10-19-2005, 07:23 PM
[No subject] - by Vasampu - 10-19-2005, 07:27 PM
[No subject] - by Mathan - 10-19-2005, 07:33 PM
[No subject] - by AJeevan - 10-27-2005, 01:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)