11-19-2003, 06:49 AM
<img src='http://www.winindia.com/entertain/film_bio/gallery/kajol/big/kajol_big10.jpg' border='0' alt='user posted image'>
இரவுகள் என்னைக்
கொஞ்சம் மன்னித்துவிட்டன..
காலையில் மீண்டும்
புது வேகம்...
மனசெல்லாம் குதூகளிப்பு..
அடிக்கடி நேரம் பார்த்து
ஏற்றாற்போல் இயங்கிக்கொண்டிருந்தேன்...
எட்டு மணிக்கு அங்குஇருந்தாக வேண்டும்
ஏழு இருபதிற்கே வீட்டிலிருந்து
புறப்பட வேண்டும்...
எனக்குள் நேர அட்டவணை
ஏற்கனவே தயாராகிவிட்டது....
யாரும் இடையில்
புகுந்து குழப்பம் செய்துவிடக்கூடாது...
இடையிடையே முருகனை
துணைக்கு அழைத்தேன்...
அம்மாவுக்கு ஏதோ சந்தேகம்...
விசித்திரமாகப்பார்த்தாள்.
என்றுமில்லாது
நான் சைக்கிளைத்
துடைத்தது கண்டு
புன்னகை செய்தாள்...
"வெள்ளிக்கிழமை விடிந்தால்போதும்
உனக்கு பக்தி..."
ஏதோ சொல்லவந்து பாதியில் நிறுத்திக்கொண்டாள்....
அவள் போகும் வாரை காத்திருந்து
கண்ணாடிபார்த்து
தலைவாரிக்கொண்டேன்...
இருக்கின்ற சேட்களில்
எனக்குப்பிடித்தஒன்றைப்
போட்டுக்கொண்டு...
தெருவில் இறங்கினேன்..
என்னை
எதுவும் கேட்காமலே
என் சைக்கிள் உன் வீட்டுத்தெருவில்
பயணித்தது...
தூரத்தில்
கோவில்மேற்கு வீதியில்
நீ சென்றுகொண்டிருந்தாய்..
உனக்குமுன்பாக வந்து
கற்புூரம் விற்கும் பாட்டியருகில்
காத்திருந்தேன்...
நீ சிறிதாக புன்னகை செய்தாய்
என்னைக்கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தில் தெரிந்தது...
ஆனால் எதுவும் பேசவில்லை...
அதுதான் கண்கள்பேசுகின்றனவே என்று நினைத்திருப்பாயோ?
கொஞ்சம்
இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தேன்...
நீ கண்களை மூடி
பிரார்த்திக்கும் போதுமட்டும்
நான் உன் முன்வந்து
உன்னை பிரார்த்தித்துக்கொள்வேன்.....
எதுவும் தெரியாததுபோல் நீ வந்தாலும்
உனக்குள் கொஞ்சம் கோபம்
உன்முகத்தில் தெரிந்தது....
வைரவர்கோயில் வாசலில்
நான்
உன்னைப்பார்த்துப் பிரார்த்தித்தபோது
நீ கோபங்கொண்டு...
கையில் இருந்த செம்பருத்திப்புூவை
என் முகத்தில் வீசியடித்தாய்..
அன்றுதான்
முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்..
அழகாகத்தான் இருந்தாய்..
இரவுகள் என்னைக்
கொஞ்சம் மன்னித்துவிட்டன..
காலையில் மீண்டும்
புது வேகம்...
மனசெல்லாம் குதூகளிப்பு..
அடிக்கடி நேரம் பார்த்து
ஏற்றாற்போல் இயங்கிக்கொண்டிருந்தேன்...
எட்டு மணிக்கு அங்குஇருந்தாக வேண்டும்
ஏழு இருபதிற்கே வீட்டிலிருந்து
புறப்பட வேண்டும்...
எனக்குள் நேர அட்டவணை
ஏற்கனவே தயாராகிவிட்டது....
யாரும் இடையில்
புகுந்து குழப்பம் செய்துவிடக்கூடாது...
இடையிடையே முருகனை
துணைக்கு அழைத்தேன்...
அம்மாவுக்கு ஏதோ சந்தேகம்...
விசித்திரமாகப்பார்த்தாள்.
என்றுமில்லாது
நான் சைக்கிளைத்
துடைத்தது கண்டு
புன்னகை செய்தாள்...
"வெள்ளிக்கிழமை விடிந்தால்போதும்
உனக்கு பக்தி..."
ஏதோ சொல்லவந்து பாதியில் நிறுத்திக்கொண்டாள்....
அவள் போகும் வாரை காத்திருந்து
கண்ணாடிபார்த்து
தலைவாரிக்கொண்டேன்...
இருக்கின்ற சேட்களில்
எனக்குப்பிடித்தஒன்றைப்
போட்டுக்கொண்டு...
தெருவில் இறங்கினேன்..
என்னை
எதுவும் கேட்காமலே
என் சைக்கிள் உன் வீட்டுத்தெருவில்
பயணித்தது...
தூரத்தில்
கோவில்மேற்கு வீதியில்
நீ சென்றுகொண்டிருந்தாய்..
உனக்குமுன்பாக வந்து
கற்புூரம் விற்கும் பாட்டியருகில்
காத்திருந்தேன்...
நீ சிறிதாக புன்னகை செய்தாய்
என்னைக்கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தில் தெரிந்தது...
ஆனால் எதுவும் பேசவில்லை...
அதுதான் கண்கள்பேசுகின்றனவே என்று நினைத்திருப்பாயோ?
கொஞ்சம்
இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தேன்...
நீ கண்களை மூடி
பிரார்த்திக்கும் போதுமட்டும்
நான் உன் முன்வந்து
உன்னை பிரார்த்தித்துக்கொள்வேன்.....
எதுவும் தெரியாததுபோல் நீ வந்தாலும்
உனக்குள் கொஞ்சம் கோபம்
உன்முகத்தில் தெரிந்தது....
வைரவர்கோயில் வாசலில்
நான்
உன்னைப்பார்த்துப் பிரார்த்தித்தபோது
நீ கோபங்கொண்டு...
கையில் இருந்த செம்பருத்திப்புூவை
என் முகத்தில் வீசியடித்தாய்..
அன்றுதான்
முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்..
அழகாகத்தான் இருந்தாய்..

