10-13-2005, 12:47 PM
kuruvikal Wrote:<img src='http://img149.imageshack.us/img149/4921/brid5ji.jpg' border='0' alt='user posted image'>
<b>காகிதம் பேசிக் கொண்டது
கையில் சிக்கிய
பேனாவால்
கிறுக்கியவர் பலர்
கில்லாடிகள்...
சிலர் ஏமாளிகள்
கசங்கிய நானோ
கடைசியில்....
அடப்பாவி...!
சொல்லும் கூடவே
பேசிக் கொண்டது
உருக்கொடுத்தவனுக்கு
உணர்வு கொடுக்கத் தெரியல்ல
உணர்வு கொடுத்தவனுக்கு
உருக் கொடுக்கத் தெரியல்ல
இரண்டும் கொடுத்தவனுக்கு
தன்னையே உணர முடியல்ல...!
சொன்னதை மறந்திட்டு
சிலாகிப்பதும் எனைத்தான்
சிதைப்பதுவும் எனைத்தான்
புகழ் மட்டும்
அவன் சொத்தாம்
கடைசியில்
நல்லதும் கெட்டதும்
நான்...
அடப்பாவி...!</b>
குருவிகாள் கருத்தியல் விமர்சனங்களையும் வரவேற்பதாக நீங்கள் கூறியதால்
அடப்பாவி என்ற வார்த்தைக்கும் அப்பாவி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குச் சரியாகப் புரிபடவில்லை என நினைக்கிறேன்.
இல்லை நீங்கள் அடப்பாவி என்பதாகத் தான் குறிப்பிட விரும்பினால் கடைசியில் நான் அடப்பாவி என்பது பொருத்தமாக இல்லை.கடைசியில் நானே பாவியானேன் என்று வந்திருக்கலாம்.அடப்பாவி என்பது மற்றவர்கள் ஒருவனைத் திட்டுவது தன்னைத்தானே நொந்துகொள்வதல்ல
தெரியல்ல முடியல்ல என்ற வார்த்தைகளை முதன்முதலில் தமிழில் உங்களிடமிருந்துதான் கேள்விப்படுகிறேன்.கவிதை எழுதும் அவசரத்தில் இவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாமே
\" \"

