10-12-2005, 03:54 PM
Karikaalan Wrote:இருண்ட வெளிகள்
ஆதி இசை அறுந்து
கூச்சல்களின் கரு அழிந்தது.
பூமியெங்கும் மனிதக் கால்களுக்குள்
மண்ணின் தொடு உணர்வு கொதித்தது.
எல்லாக் கால்களும் சேர்ந்து -
ராட்சத ரயில்பூச்சி நகர்ந்தது.
மனிதம் செத்துப் பிழைக்கிறது.
நன்றி : ஜெ.கரிகாலன்
மிக்க நன்றி கரிகாலன் நண்பரின் அர்த்தம் பொதிந்த கவிதையைக் கொடுத்தமைக்கு.
பல காலுள்ள ரயில் பூச்சியைக் கண்டாலே அருவருப்பாக இருக்கும். இதே போல தான் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் கால்கள் இணைந்து ரயில் பூச்சியாக மண்ணெங்கும் ஊர்ந்து போகும் பொழுது அருவருப்பாகத் தானிருக்கும்.
நாகரீகங்களும் அருவருப்பாக இருக்கும் - இத்தகைய மனிதர்களைப் பார்த்தால்.
ஒரு புதிய பார்வை - ரயில் பூச்சி ஊர்ந்து செல்லும் காட்சி...
வாழ்த்துகளும் பாராட்டும்...
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

